29 June 2009

கேள்வி-பதில்

நானும் எவ்ளோதான் பொறுமைகாப்பேன், யாராச்சும் எனக்கு 32 கேள்வி கேட்டு மடல் போடுவீங்கனு பார்த்தா ஒருத்தரும்
கேட்கலை, அதனால சும்மாதானெ இருக்கோம் நாமும் ஒரு பதிவை போட்டா என்னன்னு நானே 30கேள்விக்கு பதில் எழுதி போட்டுட்டேன்,
இத சாக்கா வச்சாவது என்னோட வலைப்பதிவை எட்டிப்பாருங்க எல்லாரும்......!!!!


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு இந்தப் பெயர்
பிடிக்குமா?

முழுப்பெயர் : ஓம் ஸ்ரீ ஜெய ஜெகதீஷ், ஏன் என்ற காரணமெல்லாம் பெருசாக இல்லை, இது எங்கள் குடும்ப பேர்னு கூட் சொல்லலாம், என் மூன்று அண்ணன்களுக்கும் ஓம் ஸ்ரீ ஜெய என்றே பேர் இருக்கும்,

இந்த பேரை நான் எதிரில் இருப்பவரிடம் சொன்னாலே அவர்கள் ஒரு நிமிடம் ஸ்தம்பிப்பார்கள், மனோதத்துவரீதியாக மற்றவருடன் எளிதாக ஊடுறுவி
நட்பு வளர்க்க அல்லது காரியம் சாதிக்க(சும்மாவா வில்லனாக்கும்) இந்த பெயர் எனக்கு உதவி இருக்கிறது.

இந்த பெயரையும் நான் விரும்பாமல் இருக்கவும் செய்திருக்கிறேன், வங்கி கணக்கை தொடங்கும் விண்ணப்பபடிவத்தை நிரப்பும் போது,
இடம் பத்தாது :(.

******
2. கடைசியாக அழுதது எப்பொழுது?

ஒரு தோழி விளையாட்டாக அவர்கள் அப்பாவை பற்றி குறை சொன்னப்ப, அப்படிலாம் சொல்லாதனு அறிவுரை சொல்லப்போக
கண்ணுல தண்ணிவச்சுண்டேன்ன்ன்.

******
3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

என்னால ஒரே மாதிரியான கையெழுத்தை மீண்டும் போட வராது, மறந்துடுவேன், இதனால் பல முறை வங்கிகளில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது, இதற்கு கூட எதோ
போபியானு பேர் வச்சி இருக்காங்க, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கும் இதே போன்ற பிரச்சனை இருப்பதாக படித்தபின்புதான், இதன் மூலம் ஏற்பட்ட
தாழ்வு மனப்பான்மையிலே இருந்து வெளி வந்தேன், நானு ம் ஒரு காலத்துல சினிமால பெரிய ஆளா வருவேன்னு நினைக்கிறேன்.

******

4. பிடித்த மதிய உணவு என்ன?

என்னால அரிசி சாதம் சாப்பிடாம இருக்க முடியாது, அலுவகம் பக்கத்தில் இருக்கும் ஆந்திரா மெஸ்க்கு போயி ஒரு கட்டு கட்டினாதான் சாப்பிட்ட ஒரு திருப்தி கிடைக்குது எனக்கு.

******

5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?

பார்த்தவுடனும் இல்லை, பார்க்காமலே கூட என்னால் சாத்தியம் என்றே நம்புகிறேன், இதுக்கு எங்க தமிழ் நண்பர்கள் குழுமம்தான் சாட்சி,

******

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

குத்தாலத்துக்கு போயி அருவியிலே குளிக்காம வந்தது நான் ஒருத்தனாதான் இருக்கும், அதென்னமோ பொது இடத்தில் அத்தனை பேர் முன்னிலையில்
குளிக்க பிடிக்கலை,

கடலில் குளித்து இருக்கிறேன், பிரத்யேகமான தனி இடத்தில் நண்பர்களுடன் மகாபலிபுரத்தில், நீச்சல் தெரியாததால அதோட சுகத்தை முழுமையாக அனுபவிக்கலை

******

7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?

முதன் முதலில் பார்க்கும் போதா,

பெண்ணா இருந்தா மெட்டி இருக்கானு பார்ப்பேன், ஆணா இருந்தா கூட யாராச்சும் கூட்டிட்டு வந்திருக்கானானு பார்ப்பேன்.

உண்மையாக சொலனும்னா கண்னையும் உதட்டில் உள்ள சிரிப்பின் நிஜத்தையும் பார்ப்பேன், என்னால் ஓரளவுக்கு எதிரில் இருப்பவரின்
மனநிலையை உணரமுடியும், அவர் எப்படி பட்டவர் என்று,

சரியாக ஊகிக்கப்பட்ட எல்லாரும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

தவறாக ஊகிக்கப்பட்டவர்கள் ஒரு வேளை நல்ல நண்பர்களாக இருக்க கூடியவர்களாக கூட இருந்திருக்க கூடும்,

******

8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?

கோபம் சாதரணமாக வராதது எனக்கு பிடித்தது, வரும் கோபம் சாதரணமாக இல்லாதது எனக்கு பிடிக்காதது

சாதாரணமா எனக்கு கோபம் வராது

கோபம் வந்துட்டா, அது சாதரணமாக இருக்காது

(வருஙகால ஹீரோவாக்கும், பஞ்ச் பேசாட்டி எப்படி)

******

9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விசயங்கள் என்ன?

அப்படினா? எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே, சரி காதலி என்றால் முன்னாள் என்றுதான் சொல்லனும், முன்னாள் என்றாலும் அது ஒரு சிறு பட்டியல் வேறு, அதனால இதை கண்டுக்காம போயிடலாம்

******

10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?

நிச்சயமா அம்மாதான்,

******

11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?

நீல நிற சட்டை, நீல நிற ஜீன்ஸ் பேண்ட்.

******

12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

அது எனக்கு இது உனக்கு
இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
படைத்தவனே இதை எடுத்து கொள்வான்
நல்லவன் யார் கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்

இப்போதிக்கு இதுதான் கடைசியா கேட்ட பாட்டு.

******
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு
ஆசை?

வர்ணமா இல்லை வண்ணமா ?

நீலம், வானில் கலந்துடலாம் இல்லையா


******

14. பிடித்த மணம்?

பிடிச்சதுனு சொல்ல முடியாது, யோசிச்சா மல்லிகையின் மணம்தான் நியாபகம் வருது

******

15. பிடித்த விளையாட்டு?

இந்தியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்(!?)

******

16. கண்ணாடி அணிபவரா?

இல்லை,

******

17. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

நல்ல திரைக்கதை அம்சமுள்ள எந்த படமும்,
முக்கியமாக கமலின் எல்லா படங்களும் பிடிக்கும்,
செல்வராகவன், கௌதம் மேனன், சசிகுமார் போன்ற இயக்குனர்களது படங்கள்,
சில சமயம் சிவா மனசுல சக்தி படங்களும் எக்கச்சக்கமாக பிடித்து போகிறது.

******

18. கடைசியாகப் பார்த்த படம்?

தியேட்டர்லயா?

சிவா மனசுல சக்தி,(3 முறை பார்த்தேன்), இந்த மூன்று முறைக்கு நடுவில் நான் கடவுள் ஒரு முறை

******

19. பிடித்த பருவகாலம் எது?

கார்காலம்தான்,

******

20. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

நிலமெல்லாம் ரத்தம் ( 2 வருடம் முன்னாடியே இணையத்தில் படித்ததுதான், இப்போ புத்தக வடிவத்தில் படிக்கிறேன்)

******

21. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை
மாற்றுவீர்கள்?

இதுவரை மாற்றியதே இல்லை, என்னமோ தெரியலை இன்னிக்கு மாற்றினேன், டாம் & ஜெர்ரி

******

22. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது புல்லாங்குழல் வகை சாதங்க்ளின் இசை, மற்றும் கிதார், சிதார் மற்றும் வீணை போன்ற கம்பி வாத்தியங்கள் இசை.

உதாரணம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வரும் சந்தன தென்றலின் பாடல் இடையில் வரும் அந்த குழல் ஒலி.
அது புல்லாங்குழல் இல்லை ஒரு வகை ஆப்ப்ரிக்க வாத்தியமாம், அதே போல தொடாமலே ஒரு பூ எரியுதே என்ற காதல் கொண்டேன் பாடல் ஆரம்பத்தில் வரும் சிதார் வாத்திய ஒலி மற்றும் காக்க காக்க உயிரின் உயிரே போன்றவை.
பாடல்களின் வரிகளுக்கு அடுத்து நான் அதிகம் விரும்புவது இது போன்ற இசை கருவிகளின் இசையே.

பிடிக்காத சத்தம் : அம்மா பசி என்றொரு கூக்குரல்

இது வரை பிச்சையிட்டதில்லை, சில சமயம் தோணும் அந்த மூதாட்டிக்கு உதவியிருக்கலாமோனு,

******

23. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?

மேலே டெல்லி மற்றும் பரிதாபாத், இப்படிக்கா பெங்களூர் வரை, இப்படி கீழே எர்ணாகுளம் வரை.

******

24. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

திறமைலாம் எதும் இல்லை, ஒரு விசயம் என்னையே எனக்கு ஆச்சர்யபடுத்தி காட்டும். என்னையே அறியாமல் சில
கமெண்டுகள் டைமிங்காக தருவேன் நகைச்சுவையாக,

******

25. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயம்?
தவறை ஒப்புக்கொள்ளாமல் அதற்கு மேன் மேலும் வியாக்கியானம் பண்ணி கொண்டிருப்பது

******

26. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?

எதையும் அலட்சியமாக கையாள்வது, சீரியஸ்னஸ் இல்லாமல் இருப்பது,

******

27. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

ஏற்காடு, ஏற்காட்டுக்கு மட்டுமே நான் விரும்பி விரும்பி சென்று இருக்கிறேன், அதும் மழைகாலத்தில் எனது வண்டியை எடுத்துட்டு கிளம்பிடுவேன் நண்பர்களோடு முன்பெல்லாம், டெல்லியில் 6 மாதம் இருந்தப்போ தாஜ்மகால் முதற்கொண்டு ஜம்மு வரை நிறைய ப்ளான் போட்டு எல்லாம் சொதப்பி எதையும் பார்க்காம வந்தாச்சி, ஜம்முக்கு போகமுடியாம போனதுதான் எனக்கு வருத்தம், தாஜ்மகால் என்னவோ பார்க்காமல் வந்தது ஒரு குறையாவே நினைகலை,

******

28. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?

யாருக்கும் கஷ்டம் தராத வாழ்கை வாழ ஆசை

******

29. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

கல்யாணம் ஆகலையே, ஆனபின்னாடி இல்லாமல் என்ற வார்த்தையே வராதே, அப்படியே வந்தாலும் அது என் அலுவலக வேலைகளாக இருக்கலாம், ஒரு வேளை என் மனைவியாக வருபவள் என் அலுவலகத்தில் இல்லாது இருக்கும்பட்சத்தில்

******

30. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.

முடிவு தெரிந்த பின்பும் சுவாரஸ்யம் கூட்டும் விளையாட்டு



(எனக்கு யாரும் அனுப்பாததால நானும் யாருக்கும் அனுப்பலை, அதனால இரண்டு கேள்விகள்களுக்கு பதில் போடமுடியாத நிலமை)

9 comments:

ஷைலஜா said...

அடடா உங்களை யாரும் அழைக்கலைன்னா நான் அழைச்சிருப்பேனே தெரியாமபோயிடிச்சே வில்லன்! இங்கே எல்லா பதில்களையும் ரசிச்சேன்.
நிறைய எழுதுங்க.
வாழ்த்துகள்!
ஷைலஜா

ஓம் ஸ்ரீ said...

நன்றி நன்றி நன்றி

M.Rishan Shareef said...

32 கேள்விகள்னு போட்டுட்டு 30 ஆ? இது நல்லதில்ல ஆமா !!!

ஓம் ஸ்ரீ said...

யாரை பத்தி எழுதறதுனு தெரியலை

யாரை எழுத சொல்றதுனும் தெரியலை.

அதான் இரண்டு கேள்விகளை சாய்ஸ்ல விட்டுட்டேன்

ரிதன்யா said...

தல எனக்கு தெரியல இல்லன்னா இழுத்து விட்டிருப்பேனே.
ம்ம்ம்.. சரி, சரி, பதில்கள் கலக்கல்.

Thenie said...

பதில்கள் அருமைப்பா

நகைச்சுவை கொஞ்சமா அழகா இருக்குப்பா

மூதாட்டிக்கு உதவி இருக்கலாம் இல்ல இனியாச்சும் உதவணும்பா

நீங்களாச்சும் என்னை அழைச்சிருக்கலாம்ல ?

சென்ஷி said...

:))

நல்லாயிருக்குங்க!

Unknown said...

ஸ்ரீ சீரியுஸ் நெஸ் இல்லாம இருப்பதுதான் பெரிய பரிசு இந்த காலத்துல . அப்படிய இருங்க . நல்ல இருக்கு

கோல்ட்மாரி said...

உண்மையாக சொலனும்னா கண்னையும் உதட்டில் உள்ள சிரிப்பின் நிஜத்தையும் பார்ப்பேன், என்னால் ஓரளவுக்கு எதிரில் இருப்பவரின்
மனநிலையை உணரமுடியும், அவர் எப்படி பட்டவர் என்று,

யோவ் ஸ்ரீ , அங்க பாரும் நாம ரெண்டு பேருக்கும் என்ன ஒரு சிந்தனை ,,,,,,

இருக்கட்டும் இருக்கட்டும் .. நல்லத்தான் எழுதி இருக்கீர் ....

நல்ல கற்ப்பனை வளம் ... (யாரும் உழுகாமல் பாத்து கொள்ளும் ..)