28 May 2009

ஸ்ரீ ப்ரியா ஸ்ரீ - 2

காட்சி - 3

(இப்ப நிறைய ஜனஙள், அப்புறம் நம்ம இரண்டு ஸ்ரீ மற்றும் முக்கியமா கமல்ஹாசன்)

அங்கே மூடும் போது பண்ண கட், இங்கே ஓப்பன் பண்ணும் போது கதவு திறக்குது, க்தவிலே இருந்து வருவது நம்ம காதல் மன்னன் கமல்)

(கமல் வரும் போதே ஹாப்பி நியூ இயர் என்று சொல்லி கொண்டே வருகிறார், இளமை இதோ இதோ பாடலுடன் அவரது ஆட்டம் ஆரம்பமாகிறது)

(இப்போ படத்தின் டைட்டில் போடப்படுகிறது)

(கூடி இருந்த கூட்டத்தில் இரண்டு ஸ்ரீக்களுமே ஆட்டமும் கும்மாளமாகவும் இருந்தார்கள்)

(பாடல் முடியும் தருவாயில் கமல் தான் அணிந்திருக்கும் ஓவர் கோட்டை கழட்டுகிறார், கழட்ச்சி சுழற்றுகிறார், அதை ரசிகர்கள் பக்கம் தூர வீசி எறிகிறார். அது அதிர்ஷ்டக்கார ஹீரோ ஸ்ரீயிடம் தஞ்சமைகிறது)

(இங்கே பிக்சைரை ப்ரீஸ் பண்றோம்)



கதை


திரை கதை


வசனம்


டைக்ரக்‌ஷன்


மணிபாரதி


காட்சி - 4

(இப்போ இரண்டு ஸ்ரீ மற்றும் அண்டைவீட்டு குழந்தைங்கள் சிலர்)

(கீழே சப் டைடில்ல் போல குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு மற்றும் புகை பழக்கம் உடல்நலத்திற்கு கேடு என்ற ஸ்லோகன் வர்ருகிறது)

ஸ்ரீ : நண்பனே, ஓ நண்பனே. என்னோட துக்கத்தை பகிர்ந்துக்கிறது இந்த _____ பீரும் ( சென்சார்ல ப்ராண்ட் நேம் கட் பண்ணிட்ட்டாங்க), நீயும் தாண்டா. இதுவும் என் செல்ல ப்ரண்ட். ( ரஜின் ஸ்டலிலில் லைட்டா கலங்கிய கண்ணை விரலால் துடைக்கிறான்

ஸ்ரீ : நண்பா, நீ என்ன கலங்க பிறந்தவனாடா கலக்க பிறந்தவன், ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீயும் இப்படி கமல் மாதிரி, ரஜினி மாதிரி மாஸ் ஹீரோவா ஆகத்தான் போற பார்த்துகிட்டே இரு

ஸ்ரீ : என்னமோ போடா, நேத்து ஒரு ஷூட்டிங் போனோமே, என்ன படம் அது, என்னவோ கண்றாவி படம், ஹீரோவை நாலு பேர் சுட்டும், கடைசிவரை ஹீரோ எதிர்த்து நின்னு எல்லாரையும் கொன்னுட்டு, அவன் பிழைச்சிக்கிறான், படமாடா அது. படம்னா நம்ம கமல் நடிச்சாரே மூன்றாம் பிறை. அப்படி இருக்கனும், படம்மா நடிக்கிறாங்க, கதையும் இல்லே ஒரு மண்ணும் இல்ல, 6 பாட்டு 7 சண்டை கலர் கலர்ரா பொண்ணுங்க கூட்டம் இப்படியே ஓட்டிடறாங்க.

ஸ்ரீ : நீ ஏண்டா வருத்தப்படற, இங்க சினிமால ஜெயிச்சா லக்குனு சொல்லுவாங்க, தோத்தா மக்குனு சொல்லுவாங்க, திறமைலாம் இரண்டாம் பட்சம்தான்

சிறுவன் 1 : அண்ணே, மறுபடி சொல்லுங்க குறிச்சி வச்சிக்கிறேன்.

ஸ்ரீ : யார்டா இவன்

ஸ்ரீ : இவனா, நம்ம பழனிசாமி இருக்கான் இல்லே, அவனோட பையன், அவந்தான் சினிமால டைரக்டரு ஆகனும் சொல்லி சொல்லி வாய்பும் கிடைக்காம குடிச்சி குடிச்சி செத்து போனானே, அவன் பையன். சாகறதுக்கு முன்னாடி இவன்கிட்ட எப்படியாச்சிம் நீயாச்சும் டைரக்டரு ஆகிடுனு சொல்லிகிட்டு பூட்டான், அப்ப இருந்தே பயபுள்ள கதை, வசனம்னு சுத்த ஆரம்பிச்சிட்டான்

சிறுவன் 1 : அண்ணே, டயலாக் சூப்பர், ஜெயிச்சா லக்கு, தோத்தா மக்கு

ஸ்ரீ : ஹா ஹா, பய ரொம்ப ஆர்வமா இருக்கான் போல, யாருக்கு தெரியும், இன்னும் 10-15 வருசம் கழிச்சி இவனுக்கும் யாராச்சிம் சினிமாவில முகவரி கொடுத்து அந்த படத்துல இதை பயன்படுத்துவானோ என்னவோ, யார் கண்டா

ஸ்ரீ : நண்பா, நீ ஹீரோவானா என்ன பண்ணுவ

ஸ்ரீ : நானா, நான் நிறைய கற்பனை பண்ணி வச்சி இருக்கேன்,

ஸ்ரீ : சொல்லு சொல்லு நண்பா

ஸ்ரீ : பெரிய வட்டமான வெல்வெட் மெத்தைலதான் என் தூக்கமே, அப்புறம் நான் எழுந்ததும் நான் கீழே கால் வைக்கும் முன்னமே என் காலில் செருப்பு மாட்டிவிட இரண்டு பேர், அப்புறம் எனக்கு ப்ரஷ் பண்ணி விட இரண்டு பேர், கூல்டிர்ங்ஸ், ஜூஸ் கொண்டு வர இரண்டு பேர், என்னோட பழைய ட்ரஸை கழட்ட இரண்டு பேர், மறுபடி புது டிரஸ்சை போட்டு விட இரண்டு பேர், அப்படியே ராஜா வீட்டு பிள்ளையா வாழ்வேன்.

ஸ்ரீ : சர்தான், இதுகுதான் உன் சினிமா ஆசையா, நான் ஏதோ கலைச்சேவை பண்ணுவியோனு நினைச்சேன்.

ஸ்ரீ : இப்ப சொன்னது என் பொதுவான என் ஆசை, அதை த்விர சினிமால, நிறைய அவார்ட் வாங்கனும், கமல் 3ம் பிறைல வாங்கின மாதிரி தேசிய விருது, அப்புறம் ப்லிம்பேர் விருது, அதிகமா அவார்ட் வாங்கினவனா நான் சாதனை பண்ணனும், அப்புறம் வெளிநாட்டுல எதோ சினிமாக்கு அவார்ட் தராங்களாம், அவார்டோ காரோ என்னவோ தருவாங்களாம், அதும் வாங்கனும், இதான் என் லட்சியம்

ஸ்ரீ : நண்பா, (கையில் இருக்கும் பீர் பாட்டிலை எடுத்து கொள்கிறான், இதுதான் பிலிம்பேர் அவார்ட்,உனக்கு நான் தறேன், அப்படியே இந்த இடத்தை பிலிம்பேர் மண்டபமா நினைச்சி, அவார்ட் வாங்கினதும் என்ன பேசுவன்னு பேசிகாட்டு பார்க்கலாம்


(அங்கிருந்த 7-8 சிறுவர்களும் அவர்களுக்கு முன் அமரசொல்கிறான், எல்லாரும் பலமாக கைதட்டுகிறார்கள்)

(நண்பனிடமிருந்து பாட்டிலை, பில்ம்பேர்ர் அவார்டாக நினைத்து கையில் மெருமிதத்துடன் வாங்குகிறான், பாட்டிலை அதாவது அவார்ட்டை ஒரு கையில் தூக்கு கூட்டத்தில்(?!) இருப்பவ்ர்களிடம் காட்டி
பேச ஆரம்பிக்கிறான் ஸ்ரீ எங்கிற ஸ்ரீதர வெங்கட்டரமணன்)


(தொடரும்)

--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

"ஸ்ரீ"

“யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே

27 May 2009

ஸ்ரீ ப்ரியா ஸ்ரீ - 1

முன் குறிப்பு:

(வணக்கம், சினிமா திரைக்கதை மாதிரியான ஒரு கதை எழுதலாம்னு யோசிச்சப்ப்ப இப்படி ஒரு கதை எழுதனும்னு தோணிச்சி
அதை எழுத போறேன், படிச்சிட்டு இது அந்த கதை, இந்த கதை, அதை உல்டா பண்ணிட்டேன், இதை கலாட்டா பண்ணிட்டேன்னு
என்னை திட்டப்படாது, இதான் முக்கிய கண்டிசனே)


(காலம் - 20ம் நூற்றாண்டின் எண்பதாம் வருடம்,
சுறுக்கமா சொன்ன ஒரு 25 வருடங்க்ளுக்கு முன்னாள்,
ஒரு டிசம்பர் மாதம் 31ம் தேதியில்)
காட்சி - 1

(இரண்டு பேர் இந்த காட்சியிலே இருக்காங்க, ஒருத்தர் ஸ்ரீ, இனொருத்தரும் ஸ்ரீ தான், முதல் ஸ்ரீதர வெங்கட்டரமணன், இன்னொருத்தன் ஸ்ரீனிவாசலு

சோ இரண்டு பேருமே ஷார்டா ஸ்ரீ, இதுல ஸ்ரீதர வெங்கட்டரமணன் எனும் ஸ்ரீ சினிமால ஹீரோவா ஆக்டு கொடுக்க காத்திட்டு இருக்கும் ஒரு துணை நடிகன், ஸ்ரீனிவாசலு என்பவன் எல்லா தமிழ் சினிவாவிலும் இருப்பது போல ஒரு காமெடிக்கான கேரக்டர், அவனுக்கு அம்மா/அப்பா/பாட்டி/தாத்தா இருக்காங்களா இல்லையா, அவன் சாப்பிட்டானா சாப்பிடலையா அவன் லட்சியம் என்ன அவனோட எதையுமே ஆஸ் யூஸ்வல் தமிழ் சினிமா போல நான் சொல்லவும் போறதில்ல, நீங்க கேட்கவும் கூடாது)


ஸ்ரீ : ஸ்ரீ ஸ்ரீ நான் உன்னை காலைல இருந்து தேடிட்டு இருக்கேன் எங்கேடா போன, உனக்கு ஒரு விசயம் தெரியுமா

(நம்ம ஸ்ரீ நான் எப்படி வருவேன் எதுக்கு வருவேன் ஏன் வரணும்னு பேசற ஹீரோ கிடையாது என்பதால் இப்படி பட்ட பஞ்ச் இல்லாமலே பேச்சி ஆரம்பிக்கிறார்)

ஸ்ரீ : என்னடா மேட்டர், இப்படி தலைதெறிக்க ஓடிவரனா எதுனாச்சிம் செம்ம முக்கியமான மேட்டராதான் இருக்கும், கமலுக்கு டூப் போடுற சான்ஸ் கிடைச்சிடுச்சா என்ன

ஸ்ரீ : அதில்லடா, இன்னிக்கு நைட் நம்ம கோடம்பாக்கம் ஏரியாவிலே இருக்கே ராஜ் ஹோட்டல, அங்க நடக்குற ஹாப்பி நியு இயர் பங்கசனுக்கு நம்ம கமலு வராருப்பா, அதுக்கு இரண்டு டிக்கெட் வாங்கிட்ட்ட்ட்ட்ட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

(சந்தோஷத்தில் இருவருமே கொஞ்ச நேரம் ரோட்டில் ஒரு ஆட்டத்தை போட்டுவிட்டு, ராத்திரி பங்கசனுக்கு நல்ல கலர்புல் ட்ரெஸ் எடுக்க ஸ்டூடியோ போகிறார்கள்)

காட்சி : 2

(இப்ப 3 பேர், நம்ம ஸ்ரீக்கள் தவிர ஒரு கூர்க்காவும் இருக்காங்க)

ஸ்ரீ : என்ன கூர்க்கா சாப், கியா ஹாலே, கானா காயியே

ஸ்ரீ : நீ ஏண்டா வராத இந்தியை கஷ்டப்பட்டு வர வைக்கிறே, நம்ம ஊருதான்பா இவன்,
நம்ம அண்ணாநகரு சின்னசாமி இருக்கான்ல, அவனோட மாமாவோட பெரியப்பா மகந்தான் இவன்,

ஸ்ரீ : அட, அப்பட்டியா, இவன் நிஜ கூர்கா இல்லையா

ஸ்ரீ : ஸ்டூடியோ மேனேஜரு நம்க்கு வேண்ட்டப்பட்டவரு, அவர்தான் சொன்னாரு முதலாளி நல்ல கூர்காவையா போடனும்ன்னு, என்ன இருந்தாலும் கூர்கா அதர் ஸ்டேட்டு, அதர் கண்ட்ரி

ஸ்ரீ : இன்னாப்பா கெட்ட வார்தைல திட்டற

ஸ்ரீ : அட இங்க்லீசுப்பா, ஹீரோவா ஆகனும்னா இங்க்லிஸு பேசனும் இல்லே, அதான் இப்ப இருந்தே பழகறேன்

ஸ்ரீ : சர்தான், பா,

ஸ்ரீ : சின்னசாமி, உள்ளார நம்ம ப்ரொடக்சன் மேனேஜர் இருக்காரா

கூர்கா: ஏன்பா சின்னசாமினு கூப்பிட்டு என் வேலைக்கு குழி வைக்கிறே, குருசிங் போல் ஹை

ஸ்ரீ : அட, ரொம்பதான் பயப்படாத, சுத்தி எவனும் இல்ல, எங்கே புரடகசனுகாரன்

கூர்கா: உள்ளதான் இருக்காரு, கூட வனிதாவும், டிஸ்கஸ் பண்ண கூட்டியாந்தானாம்,
மனசுல டைரகடருனு நினைப்பு, முதலாளி பணம் இப்படியா போகுது

ஸ்ரீ : அட சினிமானா அப்படி இப்படித்தான் இருக்கும், அதெல்லாம் ரோட்டுல இருக்கிற பள்ளமா நினைச்சி வண்டியை ஒதுக்கி
ஒதுக்கி ஓட்டனும், அத வுட்டு பள்ளம் இருக்கே பள்ளம் இருக்கேனு விசனப்பட்டா எதிர் வண்டில மோத வேண்டியதுதான்,
யாருக்கு தெரியும் நம்ம புரடக்சன் மேனேசர் கூட டைரக்டு பண்ணலாம் யார் கண்டா? ஏன் நீ கூட இப்ப கூர்க்கானு ஏமாத்திகினு சுத்தறியே
இதையே ஒரு மேட்டரா வச்சி நீ கூட அண்ணாநகரு கூர்க்கா, கூர்க்காகாரன்னு எதுனாச்சிம் சினிமா எடுக்கலாம், யார் கண்டா நடந்தாலும் நடக்கும்?

ஸ்ரீ : சீக்கிரம், வாப்பா உள்ளே, அவரு வரதுகுள்ளே உள்ளே இருந்து நல்லதா நாலு செட்டு ட்ரெஸை எடுப்போம், இல்லாங்காட்டி இந்த மாதிரி
ட்ரெஸ்ல போனோம் சாயந்திரம் பங்கச்னுக்கு உள்ளே விடமாட்டானுங்கோ.

(இரண்டு ஸ்ரீயும் ஸ்டூடியோ உள்ளே போய் நல்லதா நாலு ட்ரெஸ் எடுத்துகிட்டு, ட்ரெஸ்சிங் ரூம் போறாங்க, ட்ரெஸ்சிங் ரூம் கதைவை மூடும்போது அங்கே கட் பண்றோம் சீனை,)

காட்சி - 3

(இப்ப நிறைய ஜனஙள், அப்புறம் நம்ம இரண்டு ஸ்ரீ மற்றும் முக்கியமா கமல்ஹாசன்)

அங்கே மூடும் போது பண்ண கட், இங்கே ஓப்பன் பண்ணும் போது கதவு திறக்குது, க்தவிலே இருந்து வருவது நம்ம காதல் மன்னன் கமல்)






(தொடரும்)


--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

"ஸ்ரீ"

“யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே

25 May 2009

ரோம் - தி வாரியர் - 7

வகுப்புகள் எப்ப்போதும் போல் நடந்து கொண்டே இருந்தன

தாஸின் புதல்வர்கள் நால்வருக்கும் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவது வழக்கம், குறிப்பாக அம்பு எறிதல், துப்பாக்கி சுடுதல் மாதிரியான வகுப்புகளும் அவர்களுக்கு உண்டு, ஹார்ஸ் ரைடிங் போன்ற கலைகளும் கற்றுதரப்பட்டது,

ரோமொயோ, பிரண்டன், லக்ஸ் மற்றும் சரத் நால்வரும் பிரின்சி விஸ்வாவுக்கு செல்ல பிள்ளைகளாயினர், படிப்பில் மட்டுமல்ல விளையாட்டு, பேச்சி போட்டி, கட்டுரை போட்டி மற்றும் பல்துறை வித்தகர்களாக அவர்கள் மாறி கொண்டிருந்தனர்,

தாஸும் தாஸின் மனைவிகளான கௌஷிகா, கனிகா மற்றும் சுபா என அயோநீர் பங்களா முழுவது குழந்தைகள் இல்லாமல் வெறிச்சோடி இருப்பதை தாங்காமல் சோகத்துடனே இருந்தார்கள்.

பிறகு எல்லாரும் ஏக மனதாக அவர்களை மீண்டும் அழைத்து வர முடிவு செய்தனர், ஆனால் தாஸ் அதற்கு உடன்பட வில்லை, அவர்கள் பள்ளி படிப்பை முடிக்கும் முன் இங்கே வருவதை அவர் சுத்தமாக விரும்பவில்லை,

தாஸ் மாணவர்களை பற்றி அறிய பிரின்சி. விஸ்வாவிடம் தொடர்பு கொண்டார், அவர்களது பட்டப்படிப்பு விரைவில் முடியப்போகிறத்ன்றும், நால்வரும் எல்லாவற்றிலும் சிறந்தவர்களாக உள்ளனர் என்றும் தெரிவித்தார்,

தாஸுக்கு மகிழ்ச்சி தாளமுடியவில்லை, பிறகு விஸ்வா தாஸிடம் ஒரு கோரிக்கை வைத்தார், இண்டர்நேசனல் காம்பட்டீசனுக்கு தங்களது மூத்தமகனான ரோமியோவையும், மூன்றாவது மகன் லக்சையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதாக கூறினார்.

வெளிநாடு என்றதும் முதலில் பதறிய தாஸ், பிரின்சி.விஸ்வாவும் செல்வதால் அரை மனதோடு ஒத்துக்கொண்டார்.

போட்டிக்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் ரோமியோ மற்றும் லக்ஸை தன்னுடன் அழைத்து கொண்டு விஸ்வா கிளம்பினார்


(தொடரும்)
--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

"ஸ்ரீ"

“யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே

21 May 2009

மீண்டும் வந்தியதேவன் - 2

சரஸ்வதி மகாலில் சந்தித்த உருவம் நினைத்தாமாத்திரத்தில் எதிரில் தோன்றுவதாக தோன்றியது


அப்போது


அந்த உருவம் மெல்ல மெல்ல அவனை நெருங்கியது போல உணர்ந்தான், அது அவனுக்கு கட்டளையிடுவது போல தோன்றியது, அவன் மெதுவாக மூர்சையாகினான்,

திடுக்கிட்டு விழித்துபார்த்தான், ரயில் சேலத்தை நெருங்கி இருந்தது, ஏழு மணி நேர பயணம் ஏழு நொடிகளில் கடந்தது போல உணர்ந்தான்,
ரயில் சேலம் சந்திப்பில் நின்றுகொண்டிருந்தது காலை ஐந்தரை மணியென அங்கிருந்த மணிக்கூண்டு பெரிதாக பரைசாற்றியது. , சப்வேவில் இறங்கி நுழைவாயிலை அடைந்தான்,
எதிர்புறம் இருந்த கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்து இழுத்தான், அது நுரையீரல் வரை சென்று அவனை சுகப்படுத்தியது, அனறு சரஸ்வதிமகாலில் நடந்தது மெதுவாக மனதில் நிழலாடியது, சிலிர்த்தான். சீக்கிரம் நண்பனின் வீட்டுக்கு சென்று என்ன நடந்தது என்று விவரிக்க வேண்டும் என்று தனக்குதானே சொல்லிக்கொண்டு அவனது நண்பனுக்கு கால் செய்ய தொடங்கினான்.

எதிர் முனையில் ரிங் சென்றுகொண்டே இருந்தது, தூங்கி இருப்பானோ. இருக்கலாம், நண்பன் கொஞ்சம் சோம்பேறி என்பதை அவன் அறிவான், இதை எதிர்பார்த்ததுதான் என்பது போல் மெல்லிதாக புன்னைகத்து கொண்டான்,

மீண்டும் முயற்சித்தான்.... பலனில்லை....

கடையில் தூக்ககலக்கத்தோடே இருந்த வாலிபனிடம், ” பாஸ், இங்கே லாட்ஜ் எங்கே இருக்கு.

அவன், “ பக்கத்துல ஒன்னு இருக்கு சார், இப்படிக்கா நேரா போயி வலது பக்கம் திரும்புனிங்கனா ஒரு ரோடு வரும் அந்த ரோட்டுல கடைசிக்கா போனா ஒரு ஒரு லாட்ஜ் இருக்கு சார்.

லாட்ஜ் எப்படி நல்ல டீசண்டான லாட்ஜ்தானே.

அட, ரொம்ப நல்ல லாட்ஜ் சார், உங்களை பார்த்தாவே ராசா வீட்டு கன்னுக்குட்டி மாதிரி இருக்கீங்கனு அந்த லாட்ஜை சொன்னேன், இல்லாங்க்காட்டி, இங்க இருந்து மூனு தெரு தள்ளி ஒரு லாட்ஜ் இருக்கு, அதை சொல்லி இருப்பேன், படு கலீஜ் சார்,

கடைகாரன் பேசியது முதலில் சொன்ன லாட்ஜின் மார்கெட்டிங் எக்ஸிக்கூட்டிவாக இருப்பானோ என்று குரு மனதில் நினைத்தான், சுமார் மூன்று நான்கு மணி நேரம் சிரம பரிகாரம் செய்ய எந்த லாட்ஜா இருந்தாலும் சரியே என்று நினைத்தான், முதலில் சொன்ன லாட்ஜை நோக்கி நடக்க ஆரம்பித்தான்,
அந்த சாலையின் இருபுறமும் கடைகள் இருந்தன, ஆனால் கடைகள் இன்னும் திறக்கப்படாமல் இருந்தன, அந்த சாலையின் வலது பக்கம் திரும்பி சென்று கொண்டே இருந்தான், அவன் மனதில் யாரோ பின் தொடருவது போல இருந்தது, ஆள் நடமாட்டமே இல்லாடமல் சாலை வெறிச்சென்று ஓடியது, பின் யார் வருகிறார்கள் என்று பார்க்க மெதுவாக திரும்பினான்,

யாரும் பின்னாள் இல்லை, மனப்பிரம்மையாக இருக்கலாம் என்று தனக்குதானே சமாதானம் செய்து கொண்டு மீண்டும் நடக்கலானான்,

பாதி தூரம் சென்றது மீண்டும் யாரோ தொடருவது போல காலடிச்சத்தம் கேட்டது.
உடல மெலிதாக சிலிர்த்து நடுங்கியது, இம்முறை சட்டென திரும்பினான்,

(தொடரும்)

(தொடரும்)

15 May 2009

திரு(வின்) விளையாடல் ஆரம்பம் - 7

சாரி மச்சான், சும்மா ஒரு பில்ட் அப்புக்கு அப்படி சொல்லி இருந்தேன், சாரிடா

சாரி கேட்டு என்னடா பண்றது, நாளைக்கு என் பேரே நாற்ப்போகப்போகுதே,,,

எதுக்கு இப்ப தேவையில்லாத பேச்சு நான் போலிஸ்க்கு போன் போடுறேன்.

(உடனே நம்ம நவ்யா) மேடம் போலிஸ்கெல்லாம் போன் போடாதீங்க அவங்க அவரை அடிப்பாங்க, ப்ளீஸ் பண்ணாதீங்க.

அவர்ர்ர்ரா எவர்ர்ர்ரு, யம்மா தாயே இவ்ளோ நல்லவளா இருக்கியே அப்படியே நான் யாருன்னு தெரியலைனு சொல்லி ரொம்ப நல்லவளா ஆகக்கூடாதா

யாரும் எதும் பேசக்கூடாது, நான் 100க்கு போன் பண்ரேன்,
மேடம் அவர்க்கு பண்னாதீங்க அவர் எங்க அப்பாவோட ப்ரண்டு, வேணும்னா அப்துல்லாக்கு பண்ணுங்க
மேடம் தேவையில்லாம என்னை கொலை கேசுல மாட்டிக்குவேனோனு பயமா இருக்கு நீங்களே பண்ணிடுங்க, பண்ணாட 100 நம்பர்க்கு பண்றாங்கடா,

100ஆ, அது

ஸ்டாப், நீ என்ன கேட்க்கப்போறேனு எனக்கு தெரியும் 100 பேர்க்கு பண்ணலை 1 பேருக்குதான், சே ஒருத்தற்க்கு தான் போதுமா, அவசர போலிஸ் 100க்கு இப்ப விளங்குதா,

அவசர போலிஸ் 100ஆ, அது தமிழ் நாட்டு போலிஸ் தானே, அவங்க லிமிட் ஹோசூரோட முடியுதே, இங்க எல்லாம் வரமாட்டாங்களே,

அக்கா நீங்க பண்றீங்களா இல்லை நானே பண்ணட்டுமா

தேவையில்லை, அவங்களுக்கு முன்னாடியே தகவல் போயாச்சி, அதோ இன்ஸ்பெக்ட்டர், இன்ஸ்பெக்டர் இவ தான் நீங்க தேடின பொண்ணு,

மச்சி முடி நீளமா வளர்த்துட்டு, மீசையை முழுசா எடுக்காதேனு சொன்னா கேட்கிறியா, பாரு அவங்க டவுட் படுறாங்க,

ஷட் அப். நான் இந்த பொண்ணைத்தான் சொன்னேன்,

மேடம் என்ன சொல்றீங்க நீங்க......

எஸ், இவ ஒரு சீட்டிங் கேர்ள், பெங்களூர்க்கு வர தமிழ் பசங்ககிட்ட பேசி வங்களை ஏமாத்தி பணம் சம்பாதிக்கிரது இவளோட ஸ்டைல், இவளை பத்தி நியுஸ் காலைலதான் எங்க சங்கத்துக்கு வந்துச்சி, அவ போட்டோவும் வந்துச்சி, அதை வச்சி தான் கண்டுபிட்டிச்சேன், இன்ஸ்பெகடர் அவளை அரெஸ்ட் பண்ணூங்க,

அப்பாடி ஒரு வழியா எல்லாம் முடிஞ்சி போச்சு,

இன்னும் ஒன்னு பாக்கி இருக்கு, உன்னை மறுபடி சேலத்துக்கே பேக் பண்றேன்,

இனிமேலயாச்சும் பார்த்து நடந்துக்கோங்க பசங்களா,

சரிங்க்கா, அப்போ நாங்க வரோம்கா, வாடா போலலம்
அக்கா உங்க பேரு சொல்லலியே......


*முற்றும்*

திரு(வின்) விளையாடல் ஆரம்பம் - 6

என்ன சொல்றாங்க இந்த பொண்ணு

யாரு இந்த பொண்னோட லவ்வர்,

என்னது லவ்வரா? யாருனு தெரியலையே.

யாரும்மா அந்த பையன்.

இவர்தாங்க என்று தமிழில் சொல்லி கை காமித்தால் நவ்யா.....................................

மச்சி நவிக்கு தமிழ் தெரியும் போலடா, ஐ ஜாலி,,,

அட கூறுகெட்ட குப்பா, இப்ப எதுக்குடா குஷி ஆகுர, இவ உன்னைய லவ்வர்னு சொல்றாடா, என்னடா நடக்குது இங்க, எக்ஸ்க்யூஸ் மீ அக்கா, இவ யாருனே எனக்கு தெரியாது, இவன் தான் பஸ் ஸ்டாண்டல மீட் பண்ணதா சொன்னான், இவங்கிட்டயே கேளுங்க,

அது எப்படி அவன்கிட்ட கேட்கிறது, இந்த பொண்ணு உங்களை தானே சொல்லுது,
என்னது என்னையா, என்னங்க சொல்றீங்க நீங்க நான் இந்த பொண்ணை இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே,

உங்க போன் நம்பரை கரைக்க்டா சொல்றா, உங்க ஊரு சொல்றா, இவளுக்கு எப்படி தெரியும்,

டேய்ய்ய் ஸ்ரீ எல்லாம் உன்னாலதாண்டா.

ஸ்ரீ சும்மா இருடா, நானே லவ் பெயிலியர்ல இருக்கேன், என்னைய சொல்லாம உன்னைய சொல்லிட்டாளேனு பீல் பண்ணிட்டு இருக்கேன்,

படுபாவி நானே ஷாக்காகி இருக்கேன், நீ ஏண்டா நேரங்கெட்ட நேரத்துல ஒருதலை ராகம் பாடுறே. அக்கா நிஜமா சொல்றேன் இவ யாருனே எனக்கு தெரியாது, இவன்கிட்ட கேளுங்களேன் இவந்தான் இவளை கூட்டிட்டு வந்தான்,

அவர் உங்க ப்ரண்டாச்சே, அவர் எப்படி உண்மை சொல்லுவார்,

மேடம் சத்தியமா எனக்கு தெரியாது மேடம், அந்த பொண்ணு நாடகம் ஆடுது, நான் ஒரு பஞ்சப்பரதேசி எங்கிட்ட எதுவுமில்லேனு சொல்லுங்க அந்தப்பொண்ணிகிட்ட, பணத்துக்காகத்தான் இப்படி பண்றானு நினைக்கிறேன்,

மச்சான் நான் நீ ஒரு கோடிஸ்வரன் வீட்டு பையன்ன்னு பிட்டு போட்டேன் அதனாலையா இருக்குமோ..........

பாவீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ

சாரி மச்சான், சும்மா ஒரு பில்ட் அப்புக்கு அப்படி சொல்லி இருந்தேன், சாரிடா
சாரி கேட்டு என்னடா பண்றது, நாளைக்கு என் பேரே நாறிடுமே

(தொடரும்)

திரு(வின்) விளையாடல் ஆரம்பம் - 5

அது ஒரு பெண்கள் சங்கம்டா,அதுக்கு பேர் கூட என்னமோ தாமசமோ என்னமோதானே. தாமசமா

என்னடா பேர் இது.

ஆங் நியாபகம் வந்துட்டது,

*த.த.ம.ச* - *த*ங்க *த*மிழ் *ம*கள் *ச*ங்கம்

மச்சி கிளம்புடா....

எங்க எப்படி எப்போ,

கேள்விலாம் கேட்காத கிளம்பிட்டே இரு, எச்.ஏ.எல் 3ர்ட் ப்ளாக் போறோம், பஸ் நம்பர் என்னனு தெரியலையே.

பஸ்ஸா...? மச்சி ஆட்டோல போலாம்டா, நான் நடுவிலே உட்காந்துக்கிறேன், அந்த பொண்ணு எனக்கு இடப்பக்கம், நீ வலப்பக்கம் ஓகேவா?

டேய் ஒரு சமயம் நீ பேசறது பார்த்து அப்பாவித்தனமாதான் இருக்கு, ஆனா பல சமயம் உன் பேச்சு கொஞ்சம் கோக்கு,மாக்காத்தான் இருக்கு, கொஞ்சம் கம்முனு பஸ்ல வறீயா

இல்லடா மறுபடி அந்த பொண்ணை எப்போ பார்ப்போமோ, மாட்டோமோ, அதான் ஒரு தடவை..... சரி விடு.. பஸ்லயே போவோம் வா

(மாலை 4 மணி)

மச்சி அதோ அந்த ரோடு கட்டாகிதுல்ல அங்கத்தான் ததமச இருக்கு,

டேய் ஸ்ரீ ப்ரூட் ஜூஸ் சாப்பிடலாமா, பாவம் அந்த பொண்ணும் பசிக்கும் இல்லே.

அடிங்கொ----------------- , நானே காலைல இருந்து சாப்பிடாமத்தான் இருக்கேன் என்ன, ரொம்ப ஓவரா போகாதே, சரி சரி நீங்க மட்டும் சாப்பிடுங்க, எனக்கு வேணாம்.

சரி வேண்டாம் விடு அதான் பக்கத்துல வந்துடுச்சி இல்லே, வா போகலாம்

(த.த.ம.ச வாசலில்)

ஐயா,,,, அம்மா, யாராச்சும் இருக்கீங்களா....

(அப்போ ஒரு கணீர் குரல்) நான் சென்ஸ் இது பெண்கள் சங்கம், பெண்க்கள் மட்டும்தான் இருப்பாங்க,

அய்யோ சாரிம்மா, இது த.த,ம.ச தானே.

நான்-சென்ஸ் இது த.த,ம.ச நான் ஒன்னும் அம்மா இல்லே, வேணும்னா அக்கா சொல்லிக்கோ.

சரிங்க்கா,

ஓகே மேன் வாட் யூ வாண்ட்

இது தங்கத்தமிழ் மகள்......

யெஸ், அப்கோர்ஸ் வாட் யூ வாண்ட், வாட் யூ நீட்

அக்கா இதுல தமிழே வரலையே

தம்பி தமிழ்ல பேர் வைக்கிறதுலாம் ஒரு பேருக்குத்தாண்டா, சும்மா சும்மா தமிழிலேயே பேசினா யாரு மதிப்பா அப்பப்போ நுனி நாக்கு ஆங்கிலம் பேசினாத்தான் மதிப்பு, அவனவன் மிரண்டு போவான். அதிருக்கட்டும் உனக்கென்ன பிரச்சனை, உனக்கு இங்கே என்ன வேலை....

அக்கா இந்த பொண்ணு பேரு நவ்யா, தமிழ் தெரியாது,

ஓ ஷீ டோண்ட் நோ டமில், வாட் அ பிட்டி,

(ம்க்கூம் இதுக்கொண்ணும் குறைச்ச்லில்லை) அக்கா இவ ஒரு கன்னடப்பொண்ணு, பஸ் ஸ்டாண்ட்ல எங்க போறதுனு தெரியாம முழுச்சிகிட்டு இருந்தா, அப்புறம் உங்க சங்கத்தை பத்தி தெரிஞ்சி இங்க கூட்டிட்டு வந்தோம்.

ஏய் மேன், உண்மையை சொல்லு, இல்ல போலிஸ்க்கு போக வேண்டி வரும்.

என்னது போலிஸ்ஸா, ஏன் மேடம்?

உன்மேல எனக்கு டவுட்டா இருக்கு, நீ ஏதோ ஒரு பொன்னை ஏமாத்திட்டு அவளை வந்திருக்கியோனு சந்தேகப்படுறேன்ன்.

அக்கா அக்கா அப்படிலாம் அவசரப்பட்டு சந்தேகப்படாதீங்க, இருங்க என் ப்ரண்டையும் அந்த பொண்ணையும் கூப்பிடுறேன்.

(உள்ளே இருவரும் வர) இவன் என் ப்ரண்ட் ஸ்ரீ, இது அந்த பொண்ணு நவ்யா.

உன் பேரை சொல்லு

நான் ஸ்ரீ.

என்னடா பேரைக்கேடா ஸ்ரீ ஸ்ரீனு விளையாடுறீங்களா,

அய்யய்யோ அக்கா அப்படிலாம் இல்லை, 2 பேரோட பேரும் ஸ்ரீ தான்,

இந்த பொண்ணை எங்கயோ பார்த்தமாதிரி இருக்கே. யாக்கே ரீ கன்னடம் கொத்தா?

டேய் என்னடா கன்னடம் கொத்து கறியா என்ன சொல்றாங்க.

டேய் இது கன்னடம், அவங்க பேசி முடிக்கட்டும் அப்புறம் என்ன பேசினாங்கனு கேட்டு சொல்றேன்)

என்ன சொல்றாங்க இந்த பொண்ணு

யாரு இந்த பொண்னோட லவ்வர்,

என்னது லவ்வரா? யாருனு தெரியலையே.

யாரும்மா அந்த பையன்.

இவர்தாங்க என்று தமிழில் சொல்லி கை காமித்தால் நவ்யா.....................................

(தொடரும்)

திரு(வின்) விளையாடல் ஆரம்பம் - 4

எனக்கு உன் மேல டவுட்டாவே இருக்கு, நீ ஏன் இப்படி பண்றேனு தெரியலை பொதுநலம், பொது தொண்டுனு ஓட்டினே பின்னி புடுவேன். ஸ்கூல் வாசல்ல்ல இருந்த அந்த பாட்டிகடைல 250ரூ அக்கவுண்ட் வச்சி ஏமாட்தினவன் நீ, மறைக்காம உண்மையை சொல்லு, யார் இவ?

மச்சி உனக்கே தெரியும், என்னோட ஸ்கூல் லைப்ல ஆரம்பிச்சி, காலேஜ் லைப், கம்ப்யூட்டர் க்ளாஸ், ஏன் வேலைக்கு சேர்ந்த இடத்துலனு ஒரு இடத்துல கூட ஒரு பிக்ரும் இல்லைனு உனக்கு தெரியாதாடா. அப்பும் எப்படிடா இப்படி கேக்கலாம்.

சரி நான் ஊருல இல்லாத 6 மாசதுல எதாவது உஷார் பண்னிட்டு அவ்ந்திட்டயோனு கேட்டுட்டேண்டா

6மாசத்துல ஒரு பொண்ணு பின்னாடி நான் வேணும்னா ஓடலாம். ஒரு பொண்ணு எங்கூட வருமா டா,

சரி சரி விடு. என் இனமடா நீ செல்வமே. உனக்கு நான் ஆறுதல் எனக்கு நீ.

மச்சி நீ----------------- சாதியாடா, நீ----------- சாதினுள்ள உன் சர்டிபிகேட்ல பார்த்தேன்.

அட அற்பபதரே நான் சொன்னது பிகர் மடக்க தெரியாத பசங்க நாமனு சொல்ற மீனிங்களில் சொன்னேண்டா, ப்டுபாவி கொஞ்சம் இருந்தா *இளன், ரமேசு, கமல்ராஜன்*கிட்ட திட்டு வாங்கவிட்டு இருப்பியேடா,

சரி இப்ப என்ன பண்ணலாம்.

அந்த பொண்ண நான் சொல்ற ஒரு இடத்தில சேர்த்து விடலாம். அது அபலை பெண்களுக்கு உதவி செய்றதுக்காகவே இருக்கு. வெளிநாட்டில கூட அதுக்கு ப்ராஞ்ச் இருக்கு, தாய்லாந்து, மலேசியாவிலெல்லாம் இருக்கு.

என்னது கோபால் பல் பொடியா...

பிரச்சனையை கொண்டுவந்ததுல்லாம கிண்டல் வேறையா, அது ஒரு பெண்கள் சங்கம்டா,அதுக்கு பேர் கூட என்னமோ தாமசமோ என்னமோதானே.

தாமசமா என்னடா பேர் இது.
ஆங் நியாபகம் வந்துட்டது,

*த.த.ம.ச* - *த*ங்க *த*மிழ் *ம*கள் *ச*ங்கம்


(தொடரும்)

திரு(வின்) விளையாடல் ஆரம்பம் - 3

அவ என்னென்னமோ பேசினாடா என் கையை பிடிச்சிகிட்டு. சுமார் 1.30 ஹவர்ஸ் பேசி இருப்பா.

1.30 மணிநேரமா என்ன பேசினா?

என்ன பேசினானு எனக்கு என்ன தெரியும்? எனக்கு தான் கன்னடம் தெரியாதே.

டேய் ஸ்ரீ என்னடா சொல்ற அப்ப அவ தமிழ் கிடையாதா. சுத்தம் எதாவது பிரச்சனைனா பிரிச்சி எடுத்துடுவானுங்களே.

மச்சி கன்னடம் தெரியாட்டா என்னடா எனக்கு தெரிஞ்சா ஓட்ட இங்க்லீஸ்ல அவகிட்ட பேச, அவளும் அவளுக்கு தெரிஞ்ச இங்க்லீஸ்ல எங்கிட்ட பேசினா, மேட்டர் என்னடானா அவளுக்கு ஒரு வேலை வேணும்.

படுபாவி. நானே நல்ல வேலை கிடைக்காமதான், காலைல சிஸ்டம் அட்மினாகவும், நைட் லாட்ஜ்ல சூப்பரவைசாராகவும் இருக்கேன், நான் எப்படிடா

மச்சி உன்னால முடியும் மச்சி, டிரை பண்ணுடா

சரி, அவ என்ன படிச்சிருக்கா, டிப்ளோமாவா

இல்ல.

பின்னே ஆர்ட்ஸ் க்ரூப் ஸ்டூடண்டா

இல்ல

அதுவும் இல்லனா சைன்ஸ் க்ரூப் இல்ல பிஸினெஸ் மேனேஜ்மெண்ட் எதுடா சொல்லி தொல

எதுவும் இல்ல, அவ 8த் பெயில்.

இதுக்கு என்னை என்ன வேலை பார்க்க சொல்ற கண்ணா

மச்சி நீ இருக்கிற லாட்ஜ்லயே ஒரு வேலை கொடுத்துடல்லாம்டா

லாட்ஜ்ல,, அதுவும் சிவாஜி நகர்ல இருக்கிர லாட்ஜ்ல, நான் வேலையை ரிசைன் பண்ணிட்டு சென்னை போறேன்

டேய் என்னடா இப்படி சொல்றே, பாவம்டா அந்த பொண்ணு

டேய் அவளுக்கு நான் பாவம் பார்த்தேன் நான் பாவமாயிடுவேன். லாட்ஜ்ல எப்படிடா ஒரு பொண்ணுக்கு வேலை வாங்கி தர முடியும். ஒரு பொண்ணு ப்ராஸ்ட்டியூஸன் தான் அங்க பண்ண முடியும்.

அப்ப அதுவே இருக்கட்டும்டா.

அடிச்செருப்பால நாயே. இது மட்டும் நம்ம ஆளுங்களுக்கு தெரிஞ்சது உன்னையும் என்னையும் 3 வாரத்த்க்கு உடாம சோறு தண்ணியில்லாம திட்டுவாங்க மெயில்ல.ப்ராஸ்ட்டீயூசன்னா பாலியல் தொழில்டா.

ஓ ஐம் சாரி. அப்போ என்ன பண்ணலாம்

முதல்ல அவ யாரு என்னனு சொல்லு

அவ ஒரு அநாதையாம் அப்பா அம்மா இல்லை.

அப்பா அம்மா இல்லாட்டிதாண்டா அநாதை.

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ். அவள் இதுக்கு முன்னாடி இருந்த காப்பகத்துல சரியான வசதிகள் இல்லையாம், அதானால இவளை வேறொரு காப்பகத்துக்கு போக சொல்லிட்டாங்களாம். அங்க போக பிடிக்காமதான் வேலை எதாவது கிடைக்குமானு பார்த்துகிட்டு இருக்கா

ஆமாம் அவனவன் எம்சிஏ, பி.ஈனு படிச்சிகிட்டு லோ லோனு அலையிறான் அவளுக்கு என்ன வேலை கிடைக்கும், நீ அவ கிட்ட அந்த காப்பகத்துக்கே போக சொல்லு, வேலை கிடைச்சா சொல்றோம் அப்போ கூப்பிடுறோம்னு சொல்லு, என்ன புரியுதா,

சரிடா, ஆனா அவகிட்ட இப்ப காசில்லேடா, எப்படி போவா, வா நாமளே போய் பத்திரமா சேத்திடுவோம்.

எனக்கு உன் மேல டவுட்டாவே இருக்கு, நீ ஏன் இப்படி பண்றேனு தெரியலை பொதுநலம், பொது தொண்டுனு ஓட்டினே பின்னி புடுவேன். ஸ்கூல் வாசல்ல்ல இருந்த அந்த பாட்டிகடைல 250ரூ அக்கவுண்ட் வச்சி ஏமாட்தினவன் நீ, மறைக்காம உண்மையை சொல்லு, யார் இவ?


(தொடரும்)

திரு(வின்) விளையாடல் ஆரம்பம் - 2

மச்சி, ஒரு சின்ன பிரச்சனைடா....

என்ன பிரச்சனை நம்ம ஊரு ஞாபகத்துல டிக்கெட் எடுக்காம வித் அவுட்ல வந்தியா.

அதெல்லாம் இல்லடா.

பின்ன என்ன பிரச்சனை

ஒரு பொண்ணு....!

பொண்ண்ன்ன்ன்ன்ன்னா.............................................

என்னடா இப்படி அலர்ற, சீக்கிரம் பஸ்ஸ்டேண்ட் பக்கத்துல இருக்கிற சர்ச்க்கு வாடா.

நீ வாசல்லயே நில்லு. வந்துட்டேன்.

(ஓவர் டூ சர்ச் பார்க் கான்வெண்ட் வாசல், சாரி சர்ச் வாசல் மட்டும்)

நீ 7.30க்கு கால் பண்ணும் போதே நினைச்சேன், 7.30 வந்துடுச்சினு, ஆனா இவ்ளோ சீக்க்ரத்தில உண்மையாவே எதிர் பார்கலை டா, என்ன பொண்ணு என்ன பிரச்சனை.....

மச்சி அங்க பாரு அந்த பெஞ்ச் உட்காந்திருக்குல்ல அந்த பொண்ணுதான்.

நீ என்ன பண்ண, இல்ல அவ என்ன பண்ணா, தெளிவா சொல்லுடா.

அந்த பொண்ணு பேரு நவ்யா. அதுக்கு ஒரு வேலை வேணும்.

வேலையா? என்ன வேலை என்ன படிச்சிருக்கு? அதை விடு. இனக்கு எப்படி தெரியும் இந்த பொண்ணை?

உண்மையை சொல்லு ஊரை விட்டு ஓடி வந்துட்டீங்களா?

அந்த பொண்ணை இந்த பஸ்ஸேட்ண்ட்ல காலைல தான் பார்த்தேன்.

அப்புறம் எப்படி? கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு.

சொல்றேன். நான் வந்து இறங்கினதும், இந்த பொண்ண பார்த்தேனா, அவளும் பார்த்தா. அவ பார்த்தானு
நானும் பார்த்தேனா.

நிறுத்து, எப்போ பார்கிறதை நிறுத்தினே? எப்போ பேசினே?

சொல்றேன். அவளுக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோனு நான் எதுவும் பேசலை. சரி எதுக்கும் உதவியா இருக்கட்டுமேனு உன் நம்பரை ஒரு சீட்டில எழுதி அவ பக்கத்துல தூக்கி போட்டேன். எடுக்கிறாளா இல்லையானு பார்த்தேன்.

அடப்பாவி என் நம்பர் ஏண்டா யூஸ் பண்ணே

எனக்குதான் நம்பர் இல்லையேடா, இருந்தா நான் ஏன் உன்னோடது யூஸ் பண்றேன்.

நம்பர் மட்டும்தானே கொடுத்த என் பேரை எதுவும் யூஸ் பண்ணலையே.

இல்லடா. ஆனா என் பேர் மட்டும் எழுதிட்டேன்.

சூப்பரப்பு....

முழுசா சொல்ல விடுடா. அவ அந்த சீட்டை எடுக்கவே இல்லை. உடனே நான் அங்கிருந்து கிளம்பிட்டேன். ஆனா மனசு கேட்காம மறுபடி அங்கே போனேன். ஆனா அவ அங்க்கெ இல்ல.

மச்சி நீ என்ன லாசாரா, ஜெயகாந்தனா டா. இப்படி எக்ஸ்ப்ளைன் பண்றே. மணி ஸ்டைல்ல டப்பு டிப்ப்னு சொல்லி தொலைடா

சொல்றேண்டா, ஊடால பேசி என்னை கன்ப்யூஸ் பண்ணாதே. அங்க ஒரு பூத்கிட்ட நின்னுகிட்டு இருந்தா நான் கொடுத்த சீட்டை கையிலே வச்சிகிட்டு, நான் பக்கத்துல போனவுடனே என் பக்கத்துல வந்து அழுதுகிட்டு நின்னா.

அழுதாலா? ஏன்? எதுக்கு?

அவ என்னென்னமோ பேசினாடா என் கையை பிடிச்சிகிட்டு. சுமார் 1.30 ஹவர்ஸ் பேசி இருப்பா.

1.30 மணிநேரமா என்ன பேசினா?

என்ன பேசினானு எனக்கு என்ன தெரியும்? எனக்கு தான் கன்னடம் தெரியாதே.


*(தொடரும்)*

திரு(வின்) விளையாடல் ஆரம்பம் - 1

இந்த சிறுகதையின் நாயகர்கள் இருவர். 1. ஸ்ரீநிவாசன். 2.ஸ்ரீகாந்த். இவர்கள் போட்ட ஆட்டமே திருவிளையாடலாக)


(அதிகாலை 7.30 மணி(!?) அளவில், பெங்களூரூ பெங்களுராக இருந்த காலத்தில் மெஜ்சஸ்டிக் பஸ் ஸ்டேண்ட் டெலிபோன் பூத்தில்)

மச்சான் ஸ்ரீ, நான் ஸ்ரீ பேசறேண்டா, நான் இப்ப மெஜஸ்டிக்கில நின்னுட்டு இருக்கேன். உன் ரூம் எங்கடா

ஸ்ரீ.. நான் ஸ்ரீதாண்டா பேசறேன். என்னடா காலங்காத்தால வந்து நிக்குற.

டேய் மணி 7.30 ஆச்சுடா.

அட இந்த டூபாக்கூர்ல 9 மணி ஆனாதாண்டா விடியலே. சரி சரி சிவாஜி நகர் பஸ்டேண்ட் வந்திடு அங்க இருந்து, என் ரூம் பக்கத்திலதான் இருக்கு

மச்சி பைக்ல வந்து பிக் அப் பண்ண மாட்டியாடா,

(பைக்கா அடப்பாவி) டேய் இது என்ன சேலமாடா ஈசியா வண்ண்டியோட்ட, இங்க லைசென்ஸ், ஆர்சி எல்லாம் இல்லாம கூட ஓட்டிடலாம், ஆனா KA ரெஜிஸ்ட்ரேஷன் இல்லாம வண்டியோட்டினே, எதாச்சும் ஒரு காரணத்தை கண்டுபிடிச்சி சிட்டிசன் அங்கிள் அது கொத்தா, இது கொத்தானு சொல்லி நம்ம வண்ண்டியை கொத்திட்டு போய்டுவாங்க. டேய் சென்னன சிட்டிசன் அக்கிளுக்கே நான் 50ரூ மேல கொடுட்ததில்லே. ஆனா இங்க நான் 2 தடவ எங்கிட்ட இருந்து 500 கறந்துட்டாங்கடா

அப்படியாடா...

என்ன நொப்பிடியா, கிளம்பி வாடா சீக்கிரம்.

இன்னும் அரை மணிநேரத்தில் உன் அறையில் இருப்பேன் (கவித கவித)

(மதியம் 11.30)

எங்க போனான் இந்த பய. 4மணி நேரமாச்சி. மெஜஸ்டிக் டூ சிவாஜி நகர் 30 நிமிசம்தானே. (அப்போது செல் சிங்காவுது, அதாவது ரிங் ஆவுது)

ஹலோ, டேய் ஸ்ரீ எங்கடா போன ஏண்டா இவ்ளோ நேரம். உன்னால நான் இன்னிக்கு லீவுடா.

மச்சி, ஒரு சின்ன பிரச்சனைடா....

என்ன பிரச்சனை நம்ம ஊரு ஞாபகத்துல டிக்கெட் எடுக்காம வித் அவுட்ல வந்தியா.

அதெல்லாம் இல்லடா.

பின்ன என்ன பிரச்சனை

ஒரு பொண்ணு....!


பொண்ண்ன்ன்ன்ன்ன்னா.............................................



(தொடரும்)

திருவிளையாடல் - 7

இல்ல என் பேர் ப்ரியா.

ஓ சாரி நான் வேற பேரா இருக்கும்னு நினைச்சேன்

வேற பேரா என்ன வேற பேர், என் முழுப்பேர் சொல்லட்டா

இல்ல வேணாம், நான் தேடி வந்தது வேற பொண்ணு

என் முழுப்பேர் மோகன ப்ரியா

ஓஓஓ, அப்போ அது நீங்க தானா.

எது

மோகனா

அப்போ இல்ல எப்பவும் நான் மோகனாதான்.

ஹா ஹா குட் ஜோக் குட் ஜோக்

என்னோட பேர் உங்களுக்கு ஜோக்கா இருக்கா

ஏங்க இப்படி கடிக்கிறீங்க. நீங்க தானே அது

எது?

மோகனா, மோகனா நீங்க தானே

ஆமாம்...

அப்போ நீங்க தான் அது.

ஹலோ என்ன ஈவ் டீசிங்க் பண்றீங்களா.

டீசீங் இல்லீங்க, ஒரு சின்ன க்ளாரிபிகேசன், எனக்கு மெயில் பண்ணீங்களானு கேட்க வந்தேன்,

எஸ்க்யூஸ் மீ, நீங்க என்ன லூசா......

(லூசாவா) நீங்க மெயில் பண்ணீங்களா இல்லையா..

இல்லை.

அப்ப எப்படி நீங்க மோகனாவா இருக்க முடியும்.

ஹலோ நான் சின்ன பொண்ணா இருந்தப்ப இருந்தே மோகனாதான்.

(வீராவிடம் இருந்து அழைப்பு வருகிறது) ஒரு நிமிசம் போன் பேசிட்டு வந்திடுறேன்.

ஹலோ....

எதுக்குய்யா இப்ப கால் பண்றே.

பார்த்தாச்சானு கேட்கத்தாண்டா பண்ணேன், அதுக்கு ஏன் டென்ஷன் ஆகிற.

பார்த்தாச்சி, பேசியாச்சி, ஆனா மெயில் பண்ணலைனு சொல்றா, ஆனா மோகனானும் சொல்றா

உங்கிட்ட பொய் சொல்றானு நினைக்கிறேன், இப்ப எங்க இருக்க

தி.நகர் பஸ்டேடண்ட் பக்கத்துல அனைத்து மகளிர் காவல் நிலையம் இருக்கில்ல

அடப்பாவி போலிஸ் ஸ்டேஷன்லயா இருக்கே, மாட்டிக்கிட்டியா

அடிங்க, அந்த ரோட்டுல நடந்து போய்ட்டு இருக்கேன் டா, அய்யய்யோ..........

ஏண்டா என்னாச்சி, போலிஸ்ல சொல்லிட்டாளா

உன் நார வாய்ல ஆசிட் ஊத்தி கழுவு, அவ கிளம்பி போய்ட்டே இருக்கா,

போன் பேசிகிட்டே பாலே பண்ணு,

என்னடா இவ்ளோ கூட்டமா இருக்கு, திடிர்னு காணாம போயிட்டா

பின்னே தி.நகர்னா சும்மாவா, ஒரு ரயில்வே பாலம் சப்வே வரும் பாரு, அப்படித்தான் போயி இருப்பா,

ஆமா இருக்க்க்க்க்கே, அடடா பார்த்துட்டேன், அடடா ஏதோ ஸ்கூல் வருதே ஒரு வேளை ஸ்கூல் பொண்ணா இருக்குமோ, +2னாக்கூடா 17 வயசு கூட இருக்காதேடா,

அதனால என்னடா

அதுனால என்னவா ஸ்கூல் பொண்ணு பின்னாடி சுத்திட்டான் ஸ்ரீனு நாளைக்கு வரலாறு தப்பா பேசாதா.
ஓ க்ரேட் எஸ்கேப் அந்த பொண்ணூ ஸ்கூல் உள்ளே போகலை, அப்போ அது +2 கிடையாதுடா, காலேஜாத்தான் இருக்கும்.

இப்ப எங்க போறா.

மச்சி கோயிலுக்கு உள்ளே போறாடா.

நீயும் போடா,

என்னது நான் கோவிலுக்குல்லயா, நெவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நான் ஒரு தீவிர நாத்திகன், நான் கோவிலுக்குல்லே போறதா, நடக்காது, நடக்கவும் கூடாது.

மச்சி ஷூ போட்டிருக்கியா, அதுக்கு ஏன் இவ்ளோ பில்ட் அப். தயவு செஞ்சு ஷூ வ கழட்டிட்டு போற ஐடியா இருந்தா மாத்திக்கோ, கம்முனு வெயிட் பண்ணு.

(எப்படித்தான் கண்டுபிடிக்கிறானுங்களோ) அது இல்லடா, என் சாக்ஸு.........

மச்சி எதுவும் சொல்ல வேணாம், பாம்பின் கால் பாம்ப்றியும், கம்முனு வெயிட் பண்ணு, நீ பாலோ பன்றது தெரியாத மாதிரி பண்ணி திடிர்னு போய் பேசு,

வந்துட்டா, வந்துட்டா. இப்ப நான் என்ன செய்ய

ஆமா இவரு தம்பி மாதவனு, 2 பேரை பொறட்டி போட பெர்மிசன் கேட்க்கிறாரு, கொஞ்சம் மறஞ்சி நில்லுடா,

ம்ம்ம். மறைஞ்சிக்கிட்டேன். வெளிவந்துட்டா, செப்பல் போட்டாச்சி, என்னடா வந்த வழியிலேயே திரும்பி நடக்கிறா, மச்சி மறுபடி அதே ஸ்கூல். போச்சி போச்சி போச்சி, அப்பாடி அத தாண்டி போயிட்டா. மறுபடி ரெயில்வே சப்வே ல போறா, என்னடா என்னை அலைய வைக்கனும்னே இவ்ளொ தூரம் சாமி கும்பிட வந்திருப்பாளோ.

நீ ரொம்ப விளையாடிட்ட அதான் உன்னை வெச்சி இப்ப விளையாடறாங்க.

என்னைய வச்சி விளையாடுறாங்களா, யாரு.

நீ விளையாடினதுக்கு பழிக்கு பழியா விதி சதிராடுதுனு சொன்னேண்டா.

என்னமோ போடா, ஐயய்யோ, அவ பேக் கீழே விழுந்துடுச்சி, இதான் சமயம் நான் ஓடிப்போயி உதவிபண்றேன்.

ஹலோ மோகனா, என்னாச்சி, எப்படி பேக் கீழே விழுந்தது,

கால்தவறி விழப்போனப்போ விழுந்துடுச்சி

உனக்கெதும் அடிப்படலையே, ஆர் யூ ஆல்ரைட்,

இல்ல, பேக்தான் கிழிஞ்சிடுச்சி

அடடா புக்ஸ்லாம் கீழே விழுந்துடுச்சே, என்ன புக் இது, தமிழ் புக்கு, என்னது பத்தாம் வகுப்பு தமிழ் புக்கா. அப்போ நீ 10ம் க்ளாஸா,

ஆமாம்..........


(தொடரும்)

திருவிளையாடல் - 6

எப்படிடா பாலோ பண்றது, யாராவது பார்த்துட்டு எதாவது ஆகி போலிஸ் கீலிஸ்னு மாட்டி, எப்.ஐ.ஆர் போட்டு என் பாஸ்போர்ட் அதாலே பிரச்சனை ஆச்சினா நான் எப்படி குவைத் போவேன், எப்படி ஸ்டேட்ஸ் போவேன்.

அது உன் சாமர்த்தியம், உன் நோவுக்கு நீ தான் மருந்து சாப்பிடனும்,

அப்போ நாளைக்கு பாலோ பண்ணனுமா என்ன

கண்டிப்பா பண்ணு

(அடுத்த நாள் காலை பஸ் நிறுத்தத்தில்)

வீரா தயவு செய்ஞ்சு நீ என் கூட வராத ப்ளீஸ்.

ஏண்டா உனக்கு ஒரு சப்போர்ட்டுக்குடா

ஏற்கனவே நான் பார்த்த ஒரு ஜோசியத்தில உனக்கு எதிரி உன் பக்கத்திலேதான் இருப்பான்னு சொன்னாங்க,

ஓ அந்த அளவிற்க்கு ஆச்சா, இருடா இரு, உனக்கு நான் வெப்பேன் பாரு ஒரு நாள் ஆப்பு.

சரி பேக்கு மாதிரி பேசாம போவீயா (அப்பாடி ராகு பெயர்ச்சி ஆயிடுச்சி, இனி குரு பார்வை கை கூடனும்)

(அடடா உண்மையாவே குரு பார்வை படும் போல இருக்கே)

ஹேய் கமல், கமல் இங்கே... இங்கே பாரு.

ஹாய் ஸ்ரீ, எப்படி இருக்கே, எங்கே கிளம்பிட்டே

நான் தி.நகர் வரை போறேன், நீ?

நான் கோடம்பாக்கம் டா,

அங்கே உனக்கென்ன வேலை.

வேலைக்கு போறேண்டா...

டேய்ய், நீ இன்னும் மாறலைடா, இன்னும் அப்படியே சிரிக்காமலேயே ஜோக் அடிக்கிற

பாவி, இப்பத்தாண்டா நான் ஜாயின் பண்ணி ஒரு வாரம் ஆச்சி, கண்ணு வைக்காத.

அடப்பாவி கடைசி வ்ரை வேலைக்கே போகக்கூடாதுனு லட்சியத்தோட இருந்தியே டா, ஏண்டா திடிர்னு இப்படி?

பின்னே என்ன பண்ணடா விலைவாசி ஏறிப்போச்சி, இன்னும் எங்கப்பா அதே 10000 மாச மாசம் அனுப்பினா கட்டுபடியாகுமா, அதான் வேலைக்கு போய் செலவு பண்ணலாம்னு வேலைக்கு,

(என்னது 10000ரூ மாச மாசமா, அய்யோ அப்பா நீ ஏன்பா அந்த் மாதிரி இல்லாம போனே)

அடக்கொடுமையே இப்படியா உங்கப்பா உனக்கு கொடுமை பண்றாரு, சரி விடு, நாம இந்த சோகத்தை மறக்க தி.நகர் போறோம்.

அதுக்கு ஏண்டா அவ்ளோ தூரம் போகனும், வடபழனியிலேயே இறங்கிடுவோம்.

ஓ, நீ ரெடியாத்தான் இருக்கியா,

(அடடா இவனை துணைக்கு இழுத்திட்டு போனோம்னா, அப்பிடியே காபி டே, பிஸ்ஸா ஹட்னு போயிடலாமே)

எனக்கு ஒரு சின்ன வேலை தி.நகர்ல அங்கே அத பார்த்துட்டு அப்படியே அங்கேயே எல்லாம்.. ஓகே வா.

சரி வா போவோம்.

(தி.நகர் பேருந்து நிலையத்தில்)

கமலு, மச்சான் ஒரு 500ரூ தாயேன்.

எதுக்கு

எங்கிட்ட 1000ரூ நோட்டா இருக்கு, என் ப்ரண்ட்கிட்ட கொடுக்கனும், நான் கொடுத்திட்டு வந்துடறேன்,

இங்கேயே வெயிட் பண்ணிட்டு இருடா.

இந்தாடா 500ரூ, பாதியாச்சிம் கொடுத்திடுடா,

பாதினா கிழிச்சா கொடுக்கனும்.

டேய்ய், 250ரூ ஆச்சும் திருப்பி தாடா,

பார்க்கலாம், பார்க்கலாம், இங்கேயே இரு வறேன்ன்.

டேய் என்னடா ப்ரண்ட் பார்க போறேன்னு சொல்லிட்டு, அந்த ஆரஞ்சு சுடிதார் பின்னாடி போற,

(விடமாட்டான் போல இருக்கே)
உனக்கு 250 வேணுமா வேணாமா,

ஐயய்யோ, நீ பின்னாடியே போடா, நான் எதுவும் கேட்கலை.

அந்த பயம் இருக்கட்டும்..

(எங்கே போனா, அடடா மிஸ் ஆயிட்டாளே, மை காட் அதோ அங்கே,)

ஹலோ ஹலோ மேடம், ஹலோ ஆரஞ்சி

கிலோ 35ரூ பா,

என்னது 35ரூ யா, அட நான் அந்த பொண்ணை கூப்பிட்டேங்க,

ஹலோ ஆரஞ்சி சுடிதார், எஸ்க்யூஸ் மீ ஒரு நிமிஷம்

யார் நீங்க எனக்கு பயமா இருக்கு.

என்னது பயமா, என்னை பார்த்தா பயமா வருது, என்னை ஞாபகம் இல்லையா அன்னிக்கி கண்டக்டர், செக்கிங்க், டிக்கெட் ஞாபகம் வரலை?

இல்லையே, நான் உங்களை பார்த்ததே இல்லை,

(அடடா இவள் இல்லையோ, ஒரு வேளை பொய் சொல்றாளோ, சே வீராவையே கூப்பிட்டு வந்திருக்கலாம்)

சரி அதை விடுங்க உங்க பேர் என்னானு சொல்லுங்களேன்

அத ஏன் கேட்கிறீங்க, நான் சொல்ல மாட்டேன்,

அடடா அடம் புடிக்காதீங்க, பேர் தானே சொல்லிடுங்களேன், சொல்ல கஷ்டமா இருந்தா எழுதி காட்டுங்க, இல்லாட்டி ஐடி இருக்கா,

என் பேர், என் பேர்

உங்க பேர் என் பேரா, என்ன பேருங்க,

இல்ல என் பேர் ப்ரியா.

ஓ சாரி நான் வேற பேரா இருக்கும்னு நினைச்சேன்

வேற பேரா என்ன வேற பேர், என் முழுப்பேர் சொல்லட்டா

இல்ல வேணாம், நான் தேடி வந்தது வேற பொண்ணு

என் முழுப்பேர் மோகன ப்ரியா


(தொடரும்)

திருவிளையாடல் - 5

என்ன சொல்றே, ஒன்னும் புரியலையே

நீ ஒரு துண்டு சீட்டு எடுத்தியே அதான் பஸ் டிக்கெட்டு, அந்த பொண்ணு அங்கே இருந்தா போயி கேளு இல்லாட்டி, 500ரூ தண்டம் அழுவு

கிராதகா

சாரி மச்சி எதுவும் கேட்கலை, டாடா


எங்கே அந்த பொண்ணு.....................

ஹலோ எஸ்க்யூஸ்மீ மேடம்

ஹலோ சார் முதல்ல சீட்டு எடுங்க. இல்லாட்டி பைன் கட்டுங்க, உங்க ரொமான்ஸ்லாம் அப்புறம்,

ரொமான்ஸா? அதெல்லாம் இல்லை சார்? இந்தாங்க என் செல் போன் நான் டிக்கெட்டை கொடுத்திட்டு இதை வாங்கிக்கிறேன், வெயிட பண்ணுங்க....

ஹலோ மேடம், ஹலோ, ஹாய்

யார் நீங்க,

நான் ஸ்ரீ. சுருக்கமா ஓம் ஸ்ரீனு சொல்லுவாங்க, என்னோட டிக்கெட் உங்ககிட்ட.....

டிக்கெட்? புரியலையே..., என்ன டிக்கெட்?

அது வந்து நான் என் பேர் எழுதின டிக்கெட். நான் டிக்கெட்.. உங்க சீட், இல்லாட்டி பைன், போன் நம்ப்ர்ர்ர், (ஐயோ எனக்கே புரியலையே)

நான் பஸ் பாஸ் வச்சி இருக்கேன், எனக்கு டிக்கெட்லாம் தெரியாது, உங்களை பார்த்தா பயமா இருக்கு, நான் போலிஸ் கூப்பிடுவேன், போலிஸ்....

என்னது என்னைய பார்க்க பயமா இருக்கா, சரி விடுங்க, நான் கிளம்பிட்டேன், எதுக்கு அங்கிள்ஸ டிஸ்டர்ப் பண்றீங்க அவங்களுக்கு 1000 வேலை இருக்கும், தேங்க்ஸ் பை

(சே ஒரு பொண்ணுகிட்ட கூட பேச தெரியலையே நமக்கு)
(அப்போ அந்த சீட்டில் தான் இருக்குமோ, போய் அந்த சீட்டில் தேடுடனும்)
காணோமே, 2ரூ-3ரூ டிக்கெட்லாம் இருக்கு 5ரூ டிக்கெட் இல்லையே, எங்கே போயிருக்கும்,

சார் பைன் கட்டுறீங்களா, இல்ல செல்ல வித்து எடுத்துக்கவா, எங்களுக்கும் வேற வேலை இருக்கு சார்.

சார் பைன் எவ்வளவு சார்.....

(மீண்டும் இன்று.....)

ஹலோ, ஸ்ரீ நான் வீரா பேசறேண்டா, என்னடா ரொம்ப நாளா உங்கிட்ட இருந்து போன்னே இல்ல,
என்னைலாம் மறந்துட்டியாடா புது வேலை கிடைச்சவுடனே,

உன்னை மறக்கமுடியுமாடா, இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன் மறக்க முடியுமாடா, சுளையா 500ரூ, அநாமத்தா போச்சேடா, உன்னால,

அத இன்னுமா ஞாபகம் வச்சி இருக்கே, சரி நான் ஈவ்னிங் ஆபிஸ் வறேன், நாம 2 பேரும் நெற்குன்றம்ல இருக்கிற நாடி சோதிடர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மூர்த்தியை பார்க்க போவோம்,

மறுபடியும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீயா, வேணாம்யா நான் வரலை, ஒரு தடவ போனதே போதும், நானும் ஒரு வாரமா தலைய பிச்சிகிட்டு இருக்கேன்,

ஏன் என்னாச்சி

(அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ

என்ன புரியலையா அ முதல் அக் வரை சொல்லிட்டான்)

மச்சி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மூர்த்தி சொன்னா கண்டிப்பா நடக்கும், இப்படித்தான் எங்க அண்ணன் பொண்ணு நடக்க முடியாம இருந்துச்சி, இன்னும் 2 நாள்ல நடப்பானு சொன்னார், அதே மாதிரி நடந்துடா தெரியுமா,

அப்படியா என்ன வயசு உங்க அண்ணன் பொண்ணுக்கு

என்ன வயசு 1 வயசாகுது,

அப்ப கண்டிப்பா பெரிய ஆளுதான் அவரு,

சரி, அன்னிக்கு அந்த பொண்ணுகிட்ட போன் நம்பர், மெயில் ஐடி கொடுத்தியே அவளா இருக்குமோ அந்த மோகனா குமாரி,

எந்த பொண்ணு.....

அடப்பாவி 500 பிரச்சனைல என்னை மறக்க மாட்டேன் சொன்னவன் அந்த லாஸுக்கு காரணகர்த்தாவானா அந்த பொண்ணை மறந்துட்டியே,

ஓஹோ, அப்படி இருக்குமா என்ன, எப்போவோ வந்திருக்கனும்மே,

உன் நேரம் இப்போ வருது,

எப்படி கண்ண்டு பிடிக்கிறது,

நாளைக்கு லீவுதானே, அவ பின்னாடியே பாலோ பண்ணீ எங்க போறான்னு பாரு, முடிஞ்சா அவகிட்ட பேரை கேளு, இல்லாட்டி எங்க போறான்னு பார்த்து பின்னாடியே போயி பேர் கண்டுபிடி.

என்னது பின்னாடியே போறதா, என் ஸ்டேட்டஸ் என்ன ஆறது, என் பேர் என் கௌரவம் என்ன ஆகும்,

என்னடா உன் ஸ்டேடஸ், கௌரவம் அதே பொண்ணுக்கு பஸ்ல டிக்கெட் போன் நம்பர் எழுதி தந்தவந்தானே நீ,

அது அப்போ

என்ன அப்போ இப்போனுகிட்டு, அது என்ன 3 வருஷம் முன்னாடியா நடந்துச்சி, இப்பதானே 2-3 மாசம் முன்னாடிதானே நடந்துச்சி,

எப்படிடா பாலோ பண்றது, யாராவது பார்த்துட்டு எதாவது ஆகி போலிஸ் கீலிஸ்னு மாட்டி, எப்.ஐ.ஆர் போட்டு என் பாஸ்போர்ட் அதாலே பிரச்சனை ஆச்சினா நான் எப்படி குவைத் போவேன், எப்படி ஸ்டேட்ஸ் போவேன்.

அது உன் சாமர்த்தியம், உன் நோவுக்கு நீ தான் மருந்து சாப்பிடனும்,

அப்போ நாளைக்கு பாலோ பண்ணனுமா என்ன

கண்டிப்பா பண்ணு

*(தொடரும்)*

திருவிளையாடல் - 4

( வேணாம் அனுப்பாதே, அனுப்பாதே டிஸ்கார்ட் பண்ணு, உன்னால பாதிக்கப்பட்டவன் எவனோதான் உன்னை டீஸ் பண்ண அனுப்பி இருக்கான், வேண்டாம் வேண்டாம் அனுப்பாதே, அனுப்பாதே, அனுப்ப்ப்ப்......)

*(Mail Has Sent Successfully)* **


(சுமார் 3 மாதங்களுக்கு முன்பு ஒரு திங்கள் கிழமையில்)

டேய் ஸ்ரீ இன்னிக்கு ஆபிஸ் போலயா நீ,

இன்னிக்கு லீவு போட்டேன், தி.நகர் போனும் ப்ரண்ட் பார்க்க, அவன் அடுத்த வாரம் GULF போறான், அதான் சின்ன ட்ரீட் வாங்க போறேன்,

அவனா கொடுத்தாதாண்டா ட்ரீட் நீயா வாங்கினா அது ட்ரீட் இல்லை, கொள்ளை,

எதுவா இருந்தா என்ன எனக்கு தேவை ட்ரீட் அவ்வளாவுதான், வீரா இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவான், அவனும் நானும்தான் அவனோட தண்டர் பேர்ட்ல பந்தாவா போறோம்,

போ, போ ஏதோ நல்லா இருந்தா சரி.


தட் தட் தட்.....

யாரோ கதைவை உடைக்கிறாங்க, வீரா வந்துட்டான்ன்ன்.

ஹாய் வீரூ, கமான் லெட்ஸ் மூவ்.....

என்ன மூவ், பைக் ரிப்பேர் பஸ்லதான் போகனும், உங்கிட்ட பைக் இருக்கா.

பைக்க்க்க் ரிப்பேரா.... அடப்பாவி அதுல போயி பந்தா காட்டலாம்னு நினைச்சேனே, எங்கிட்ட ஏதுடா பைக்கு, அதான் சென்னை வரதுக்கு முன்னாடியே வித்து காசாக்கிட்டேனே...

அப்போ 27C புடிச்சி கிளம்பனும், கிளம்பு போலாம்.

(பஸ் ஸ்டாப் போயாச்சி, பஸ்சும் கிடைச்சாச்சி, டிக்கெட்டும் எடுத்தாச்சி)

டேய் ஸ்ரீ அங்கே பார் ஒரு பொண்ணு என்னையே லுக் விடுறா, இப்பவாச்சும் தெரிஞ்சிக்கோ என்னோட அழகபத்தி

அது ஒன்னுமில்லடா மனுசாள் நடமாடுற இடத்தில்...

டேய்ய்ய்ய்ய்

சரி விடு வேறு உதாரணம் சொல்றேன்.

ஒன்னும் சொல்ல வேணாம், கம்முனு வாடா.

டேய் அந்த பொண்ணையா சொன்னே...

ஆமா

அந்த சாண்டல் கலர் சுடியா

ஆமாம்,

அந்த ரெட் துப்பட்டாவோட

ஆமாம்,

அழகா மூக்குத்தி இருக்கே அவளா

ஆமாம்பா ஆமாம், ஏண்டா இப்ப என்ன பிரச்சனை அதுல உனக்கு.

மச்சி அவள நான் டெய்லி ஆபிஸ் போகும்போது பஸ்ல பார்ப்பேன், பேசனும்னு ரொம்ப நாள் நினைச்சேன், ஆபிஸ் டைம் ஆய்டும்னு பேசாம போயிடுவேன், இன்னிக்கு பேசிட வேண்டியதுதான்.

டேய் பஸ்ல ஏறின இன்பிட்வீன் கேப்ல என்னடா புது கதை விடுறே, வேணும்னா பாரு அந்த பொண்ணு தி.நகர்தான் போவா.

சே 27C தி.நகர் போகும்னு இத்தனை நாளா தெரியாம போச்சே,

என்ன நக்கலா, ஏன் வ்டபழனில இறங்கலாம், கோடம்பாக்கம்ல இறங்கலாம், ஏன் பாண்டி பசார்ல கூட இறங்கலாம், ஆனா தி.நகர்லதான் இறங்குவா வேணும்னா பாரு.

சரி பார்க்க்லாம், டேய் அவளுக்கு சீட் கிடைச்சிடுச்சி

என்னடா மெடிக்கல் சீட் கிடைச்ச மாதிரி சொல்ற, நமக்கும் இடஒதுக்கீடு கிடைக்கும்டா,

டேய் ஆமாம்டா அவ பின்னாடி சீட் இப்போ ப்ரீயாயிடுச்சி வா வா....

இங்கே இருந்தே பேசட்டுமா, இல்லே பஸ் ஸ்டேண்ட் போயிட்டு பேசட்டுமா,

அது உன் சவுகர்யம்டா, எல்லாரும் மொத்தனும்னா பஸ் சரியானது, அந்த பொண்ணு கழட்டி அடிக்கனும்னா அவ எங்க போறாளோ அப்படியே பாலோ பண்ணி போய் அடிவாங்கலாம்,

என்னடா இப்படி சொல்றே, பின்னே வேற வழியே இல்லையா,

ஒரு ஐடியா தரேன், கொஞ்சம் ரிஸ்க் கம்மி, ஆனாலும் ரிஸ்க்தான்,

என்ன?

ஒரு துண்டு சீட்டில் உன் போன் நம்பர் பேரோட முன்னாடி தூக்கி போடு, கால் பண்ணா உன் அதிர்ஷ்ட்டம்,

பண்ணாட்டி

அவ அதிர்ஷ்ட்டம்.

ஐயோ துண்டு சீட்டு இப்பனு பார்த்து எதுவிம் இல்லியே எங்கிட்ட, ஒரு பத்து ரூபாய் இருக்கு இது ஓகேவா, ரூபாய் நோட்டுல எழுதுறது சட்டப்படி தப்பாச்சே, உன் பாக்கெட்ல இருக்கா,

டேய் டேய் பாக்கெட்ல கைவைகாதே,

ஆங், கிடைச்சாச்சி, இதோ துண்டு சீட்டு

டேய் அது...

கம்முனு கிடடா, முதல்ல என் நம்பர், அப்புறம் என் மெயில் ஐடி போட்டுடறேன், அவ சீட்டில் போட்டாச்சி, வா வா எழுந்திருச்சிடலாம், எதாவது பிரச்சனை வந்தா ஓட வசதியா இருக்கும்.

ஒன்னும் பிரச்சனைவராது, இங்கேயே இரு நான் இந்த ஸ்டாப்ல இறங்கிறேன், தி.நகர்லயே வெயிட்
பண்ணு 10 நிமிஷத்துல வறேன்,

எங்கடா போற, எதுவும் பிரச்சனையாயிடாதே,

அட நில்லு மச்சி ஸ்ரீ.. ஒரு பிரச்சனையும் ஆகாது, உனக்கு ரொம்ப நாளா ஒரு பாடம் சொல்லி தரனும்னு நினைச்சிட்டு இருந்தேன் அதான் அந்த விஷயமாதான் போறேன். நீ பஸ் ஸ்டேண்ட்ல வெயிட் பண்ணு வந்துட்டேன்,

ஓகே, டேக் யுவர் ஓன் டைம்ம்.

(ம்ம்கூம் இதுக்கொன்னும் குறைச்சலில்லை) பை...

(பஸ் தி.நகர் பஸ் ஸ்டேண்டில் நுழைகிறது)

(செக்கிங் இன்ஸ்பெக்டர்) டிக்கெட், டிக்கெட் சார் டிக்கெட் காட்டுங்க,

டிக்கெட்ட்ட், ஓ சாரி அது என் ப்ரண்ட்கிட்ட இருக்கு, அவர் இன்னும் ஒரு 5 மினிட்ஸ்ல வருவார்,

வெயிட் ப்ளீஸ்

யோவ் என்ன விளையாடுறியா, டிக்கெட் கேட்டா ப்ரண்டுங்கிறே, 5 நிமிஷம்ங்கிரே, டிக்கெட் எடு இல்லாட்டி பைன் கட்டு 500ரூ

ஹலோ மரியாதையா பேசுங்க சார், ஒரு நிமிஷம் இருங்க நான் கால் பண்ணி கூப்பிடுறேன்,

ஹலோ வீரா டிக்கெட் எங்கடா, இங்க செக்கிங்ல மாட்டிகிட்டேன், வந்து சீக்கிரம் கொடு இல்லாட்டி 500ரூ பைன் னாம்,

ஹா ஹா ஹா

ஏண்டா சிரிக்கிறே

ஹாஹாஹாஹா

ஏண்டா மறுபடியும் சிரிக்கிறே,

இல்ல உனக்கு பாடம் கத்துதரனும் நினைச்சேன் கத்துக்கொடுத்துட்டேன்,

என்ன சொல்றே, ஒன்னும் புரியலையே

நீ ஒரு துண்டு சீட்டு எடுத்தியே அதான் பஸ் டிக்கெட்டு, அந்த பொண்ணு அங்கே இருந்தா போயி கேளு இல்லாட்டி, 500ரூ தண்டம் அழுவு

கிராதகா

சாரி மச்சி எதுவும் கேட்கலை, டாடா

எங்கே அந்த பொண்ணு.....................


*தொடரும்*

திருவிளையாடல் - 3

போடா லூசு, அதையெல்லாம நம்புவாங்க, அதுவுமில்லாம மின்னல் மாதிரி நேரா இல்ல வருவானு
சொன்னான். இவ ஈ மெயில் இல்ல வந்திருக்கா.

கரைக்ட் தான் ஈமெயிலுக்கு தமிழில் என்ன??

மின்னஞ்சல், அது எதுக்கு உனக்கு இப்போ,

மின்ன(ஞ்ச)ல் லயே மின்னல் இருக்கே மசசி, அப்புறம் என்னடா, ஜோசியம்னா அப்படித்தான் சூசகமா சொல்லுவாங்க, அப்படியேவா சொல்ல முடியும், நீ வேணும்னா பாரு, இவந்தான் அவ, இவ இல்லாட்டி நீ அவ்வளவுதான், பார்த்துக்கோ,

டேய் டேய் என்னோட ஆர்குட்ல பார்த்துட்டு எதாவது பசங்க இந்த மாதிரி பொன்னுங்க பேர்ல அனுப்பி

இருப்பாங்க, இதுக்கெல்லாம் ரிப்ளை டைம் வேஸ்டபண்ண நான் ரெடியா இல்லே, கிளம்பலாம் வா.

இருடா அட்லீஸ் ஹாய் ஆச்சிம் அனுப்புடா,

அது அப்படியே இருக்கட்டும், நீ கிளம்பு, நான் சைன் அவுட்ட் பண்றேன். ம்ம்ம் பண்ணிட்டேன், வா போலாம்.

ஓகே. நல்லா இருந்த சரிதான். வா போகலாம்.

(சனிக்கிழமை மாலை 6 மணி)

ஹலோ நான் ஸ்ரீ பேசுறேன், நீங்க, ஆமாங்க ஓம் ஸ்ரீ தான் பேசுறேன்.

அண்ணா நான் அனந்தன் பேசுறேன், முடிவிலான்,

சொல்லு அனந்தன், அண்ணாலாம் எதுக்கு ஸ்ரீனே சொல்லுப்பா,

சரிடா ஸ்ரீ,

அடப்பாவி, இதுக்கு அண்ணாவோட நிறுத்தி இருக்கலாம், சரி என்ன விஷயம் சொல்லு.

என் ப்ரண்ட் ஒருத்தனோட ரெசும் அனுப்பி இருக்கேன், அதான் சொல்ல கூப்பிட்டேன், நீங்க உங்க
கம்பெனிக்கு அனுப்பிடுங்களேன்.

நான் திங்கள்கிழமை போகும் போது பார்க்கிறேன்

இல்லைனா நீங்க இப்பவே போய் பார்த்தா நல்லா இருக்கும், எதாவது சேஞ்ச் பண்ணணும்னா நான் உடனே இப்பவே மாத்திட சொல்லி அனுப்பி வைப்பேன், சரி நான் ஒரு 7 மணி பக்கமா கால் பண்ணி சொல்றேன், ஓகேவா, பை

ஓகே பை

டேய் குரு, வாடா ப்ரௌசிங் செண்டர் போலாம்.

நான் சினிமா போகிறேன், நான் வரலை நீயே போ,

ஓகே, பை

(6.30மணி ப்ரௌசிங் செண்டரில்)

(மெயில் எதுவும் புதுசா வரலையே, தப்பா அட்ரஸ் எதுவும் அனுப்பிட்டானா, இந்த மோகனா மெயில் தானே கடைசியா வந்திருக்கு. ./..................................../ இந்த மெயிலுக்கு ஒரு ரிப்ளை போடலாமா, ஒரு வேளை அந்த ஜோசியர் சொன்னது உண்ண்மையா இருக்குமோ. வேணாம் ஸ்ரீ, கண்ட்ரோல் கண்ட்ரோல், ரிப்ளை தானே அனுப்பித்தான் வைப்போமே, )


ஹாய்,

நான் நல்லா இருக்கேன், நீங்க யாருனு தெரிஞ்சிக்கலாமா?

( வேணாம் அனுப்பாதே, அனுப்பாதே டிஸ்கார்ட் பண்ணு, உன்னால பாதிக்கப்பட்டவன் எவனோதான் உன்னை டீஸ் பண்ண அனுப்பி இருக்கான், வேண்டாம் வேண்டாம் அனுப்பாதே, அனுப்பாதே, அனுப்ப்ப்ப்......)


*(Mail Has Sent Successfully)* **


*தொடரும்*

திருவிளையாடல் - 2

கிண்டல் பண்றீங்க, நாளைக்கு மட்டும் என்ன ந்டக்குது பாருங்க அந்த தேவதைக்காக நீங்க அலையோ அலைனு அலையப்போறீங்க, இது மட்டும் நடக்காட்டி என் பேரை மாத்திக்கிறேன் நான்,

உங்க மாத்தாத பேரை இப்ப சொல்லுங்களேன்,

நாடி சோதிட சக்கிரவர்த்தி " ஸ்ரீ ஸ்ரீ *ஸ்ரீ மூர்த்தி*"

ஓகே மிஸ்டர் மூர்த்தி குட் பை, தேங்க் யூ பார் யுவர் இன்பார்மேஷன்,

டேய் தமிழ்ல பேசுடா இங்க தமிழை நாங்கதான் கண்டுபிடிச்சோம்கிற நினைப்புல நிறைய பேர் சுத்துறாங்க, கண்டனக்குரல் கொடுத்திட போறாங்க பார்த்து,

அய்யா நான் வறேன் அய்யா, நான் செல்கிறேன் அய்யா.

தம்பி இன்னொரு விஷயம் பொண்ணு கண்டிப்பா உங்க ஊராத்தான் இருக்கும், நல்ல படியா போங்க, லட்சுமி உங்களை தேடி வரப்போறா.

(சனிக்கிழமை அதிகாலை 8 மணிக்கு)

டேய் ஓம் ஸ்ரீ, ஏந்திரிடா என்னடா 8 மணியாகியும் எழுந்திரிக்காம் இருக்க,

சனிக்கிழமைதானேடா, வாரத்துல 5 நால் வேலை செஞ்சுட்டு டயர்டா தூங்கிட்டு இருக்கேன், டிஸ்டர்ப் பண்னாதே குரு.

தோடா டயர்டாமாம். நீ என்னை செக்கிழுத்தியா இல்ல கல் உடைச்சியா டயர்டானியா, புது ப்ராஜக்ட் வரலைனு சொல்லிகிட்டு பொன்னுங்க கூட கடலை போடுவ, இல்லாட்டி பசங்க கூட அரட்டை, அதுவுமில்லாட்டி இருக்கவே இருக்கு ப்ளாக், அங்கே போயி கத எழுதறேன் கட்டுரை எழுதறேன்னு உட்காருவ, இதுக்கே நீ டயர்டா,

சரி இப்ப உனக்கு என்ன வேணும் பாக்கெட்ல 10ரூ எடுத்துகிட்டு போயி டீ சாப்பிட்டு தம் அடிச்சிட்டுவா, தேவையில்லாம துக்கத்தை கெடுக்காதே.

மச்சி அதைவிடுடா, உன்னைத்தேடி லட்சுமி வரப்போறா.

வாட்ட்ட். என்னடா சொல்றே? யார் அந்த பொண்ணு/? என்னை எப்படி அவளுக்கு தெரியும்.

என்னது பொண்ணா? டேய் எப்ப பார்த்தாலும் பொண்ணு நினைப்பாவே இருக்காதடா, நான் சொல வந்தது

உன் வேலை விஷயமா, இனிமேல் நீ சாட் பண்னும் போது எம்.என்.சி, எம்.என்.சி னு பொண்ணுங்க கிட்ட பிட்டு போட வேண்டாம், ஸ்டேட்ஸ் போறேன் ஸ்டேட்ஸ் போறேன்னு பிட்டு போடலாம்,

என்னடா உளர்றே. ஸ்டேட்ஸ் எப்படி போக முடியும் நான், நான் என்ன சாப்ட்வேர் எஞ்சினியரா?

எங்க அண்ணனோட ப்ரண்ட் கம்பெனில ஆட்டோ கேட் டிராப்ட்ஸ்மேன் தேவையாம், உன்னை ரெபர்
பண்றேன்னு எங்க அண்ணன் சொல்லி இருக்கார், உன்னை உடனே ரெசுமே பார்வேர்ட் பண்ணனுமாம், உடனே கிளம்பு ப்ரௌசிங் சென்னடருக்கு.

அட பாவி இவ்வளவு லேட்டா சொல்றியேடா, கிளம்பு கிளம்பு எங்கே என் சர்ட், எங்கே என் பேண்ட்,
சீ, இடர்வுயூக்கா போகப்போற, ரெசுமே பார்வேர்ட் பண்ணத்தானே போற இப்படியே இந்த் அழுக்கு லுங்கியோடவே வா.

(ப்ரௌசிங் செண்டர் காலை 8.30 மணி)

சீக்கிரம் அனுப்புடா நமக்குத்தான் காலைல அவங்களுக்கு ராத்திரி இது,

இருடா, சிஸ்டம் படு ஸ்லோ டா, மெதுவாத்தான் வரும்,

அப்பாடி ஓப்பன் ஆய்டுச்சி, சீக்கிரம் ரெசுமே அட்டாச் பண்னி அனுப்பு,

ம்ம்ம்ம்ம், யெஸ், அனுப்பியாச்சி, ஒரு 5 மினிட்ஸ் வெயிட் பண்ணு கிளம்புவோம். நான் மெயில் செக் பண்ணிட்டு வறேன்.

ஏ மச்சி, யாருடா மோகன குமாரி, ஹாய்னு ஒரு மெயில் போட்டிருக்கு..

ம்ம்ம். தெரியலையே, நோக்ரி, மான்ஸ்டர்ல இருந்து வந்த மெயிலா இருக்கும்.



ஹாய்
ஐம் மோகனா, மோகன குமாரி,
ஹௌ ஆர் யூ...



மச்சி உன்னோட ஜோசிய பலன் லைட்டா பலிக்குது போல இருக்கே,

போடா லூசு, அதையெல்லாம நம்புவாங்க, அதுவுமில்லாம மின்னல் மாதிரி நேரா இல்ல வருவானு சொன்னான். இவ ஈ மெயில் இல்ல வந்திருக்கா.


கரைக்ட் தான் ஈமெயிலுக்கு தமிழில் என்ன??


*தொடரும்*

திருவிளையாடல் - 1

(திருவிளையாடல் பேரை வச்சுட்டேனு யாரும் திட்டாதீங்க, ஸ்ரீயைதான் திருவாக்கி விளையாடிட்டேன், தப்பு,தவறு,குத்தம் குறை எதுவும் இருந்தா எல்லாரும் என்னைய உங்க வீடு புள்ளையா நினைச்சி மன்னிசிடுங்க, மன்னிப்பு கேட்டு நான் மனுசனாகிட்டேன், மன்னிச்சி நீ சாமி ஆயிடுங்க)

இனி...

(வெள்ளி மாலை 6 மணி)

மச்சி ஸ்ரீ, எங்க இருக்க, கிளம்பிட்டியா நீ...

இன்னும் இல்லை தணிகை, ஏன் என்ன விஷயம்..

இன்னிக்கு எங்க வீட்டில நாடி ஜோசியம் பார்க்க போறோம், நீயும் வாயேன், நீ வேற குவைத்

போகப்போற, அதுவுமில்லாம மதம் வேண்டாம் குலம் வேண்டாம் I want only குணம் பணம் வேண்டாம் நிறம் வேண்டாம் I want just want only மனம் மலாய் மலரோ துபாய் குயிலோ சென்னை கோவை நெல்லை நிலவோ...னு மாதிரி ஸ்டேட்டஸ் மெஸேஜா வேற மாத்திகிட்டே இருக்க, அது பத்தியும் கேட்டுக்குவோம்டா, வாடா.

ஏண்டா எது எதுக்குதான் நாடி பார்க்க்ணும்னு விவஸ்த்தையே இல்லையா, விட்டா கனவிலே நமீதா வரனும்னுலாம் நாடி பார்ப்பீங்க போல இர்க்கே, நான் வரலை, எனக்கு அதிலே நம்பிக்கையும் இல்ல,

டேய் என்னடா இப்படி சொல்லிட்டே, நான் தேனாம்பேட்டைலதாண்டா இருக்கேன், நெர்குன்றம்

போகனும்டா, இப்பவே லேட் ஆய்டுச்சி,

அதைச்சொல்லு லிப்ட் வேணும்னு கேளேன் அதுக்கு எதுக்கு இந்த நாடி பில்ட் அப்லாம்,

அங்கயே இரு நான் ஒரு 10மினிட்ஸ்ல வரேன்.

மச்சி யூ ஆர் மை பெஸ்ட் ப்ரண்ட் மச்சி.

(10நிமிடம் கழித்து)

வா மச்சி, வந்து குந்திக்கோ, என்னை நம்பி வண்டில வரனும்னு ஆசைப்பட்டுட்ட உன் துணிச்சலுக்கு என் பாராட்டுக்கள்.

ஏண்டா பயமுறுத்துற, கிளம்பு நேரம் ஆச்சி, அங்கே எல்லாரும் நாடி பார்த்துட்டு இருப்பாங்க, நீயும் வா உனக்கும் பார்க்க சொல்லலாம்.

பார்க்கலாம்..........

(8.30 நெற்குன்றம் நாடி பார்க்குமிடத்தில்)

எல்லாருக்கும் பார்த்தாச்சா, மச்சான் நீ பாருடா இப்போ,

டேய் எனக்க்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லெடா, கம்முனு இருடா தணிகை

நீ சும்மா இரு, ஐயா இவரு பேரு ஸ்ரீ சுருக்கமா ஓம் ஸ்ரீனு கூப்பிடுவாங்க, இவருக்குதான் நாடி பார்க்கனும், இன்னும் கொஞ்ச நாள்ல குவைத் போயிடுவாரு அதுக்குள்ள அவரு மனசில இருக்குறது நடக்கனும்மாம்,

தம்பி உட்காருங்க தம்பி, தம்பி கையை நீட்டுங்க

நாடினு சொன்னீங்க, ரேகை பார்க்கிறார்,

உங்களுக்கு ரேகையே போதும்னு நினைச்சேன், வேணும்னா சொல்லுங்க பார்ப்போம் 2500 தான்,

வாயு நாடி, பித்த நாடினு சொல்லி 7 நாடிதான் மனிதனுக்கு படிச்ச ஞாபகம், நீங்க2500னு சொல்றீங்களே.
தம்பி தமாசா பேசுதே, நான் பீஸூ சொன்னேன் தம்பி,

2500 பீஸா, அப்ப ரேகைக்கு எவ்ளோ.

அது ப்ரீ....

ப்ரீயா ஏன் அது மட்டும் ப்ரீ,

உங்க ப்ரண்ட் 4 பேர்க்கு பார்த்தாங்க 4 பேர் பார்த்தா ஒரு கைரேகை ஜோசியம் ப்ரீப்பா.

என்னது 4 பேரா 2500 * 4 =(அடடா பாஸ்கரன் இருந்தா இப்படி அப்படினு எதாவது சூத்திரம் வச்சி கண்டுபிடிச்சிடுவாரு, நான் எங்க்கே போவேன் அந்த பார்முலாக்கு, அட செல்போன் கால்குலேட்ட்டர்ல பார்க்கலாமே அய்ய்யோ...) 10000 யா, மச்சி ரொம்ப அதிகமாச்சேடா,

மச்சி அதனாலதாண்டா உன்னை கூட்டி வந்தேன், ப்ரீயா பாரு, அப்புறம் எங்கிட்ட தனியா பில் கட்டிடு,

நண்பன் மாதிரியே பேசினியேடா, நல்லா இரு,

தம்பி கையை காட்டுங்க, ம்ம்ம் நல்ல தீர்க்காயுசு, அட தம்பி கடல் கடந்து போவீங்க,

பின்ன குவைத்க்கு கடல் கடந்து போகாம, நடந்தா போவாங்க,

இருங்க தம்பி, ம்ம்ம் அதிர்ஸ்ட்ட தேவதை மின்னல் மாதிரி வரப்போறா. அதுவும் நாளைக்கே வரப்போறா.

நாளைக்கா எப்படி,

எப்படினு என்னை கேட்டா உங்க கை சொல்லுது தம்பி,

இடியட் கை, நான் கேட்கும் போது எதுவே சொல்லமாட்டேங்குதே.

தம்பி விளையாடாதீங்க தம்பி உங்க தேவதை நாளைக்கு மின்னலா வரப்போறா, நீங்களே அடுத்த நாள் என்னை பார்க்க வருவீங்க.

யாரு நானு, உங்களை? பார்க்க வருவேன்? நாளைக்கு முழுதும் நான் ரூம் விட்டே போக மாட்டேன்,
எப்படி நீங்க சொன்னது பலிக்குதுனு பார்க்கலாம்.

தம்பி கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிகிட்டும் கொடுக்கும் தம்பி,

நல்ல வேளை எங்க ரூம் காங்ரீட் ரூப், எதுவும் ஆகாது,

கிண்டல் பண்றீங்க, நாளைக்கு மட்டும் என்ன ந்டக்குது பாருங்க அந்த தேவதைக்காக நீங்க அலையோ அலைனு அலையப்போறீங்க, இது மட்டும் நடக்காட்டி என் பேரை மாத்திக்கிறேன் நான்,

உங்க மாத்தாத பேரை இப்ப சொல்லுங்களேன்,

நாடி சோதிட சக்கிரவர்த்தி " ஸ்ரீ ஸ்ரீ *ஸ்ரீ மூர்த்தி*"


தொடரும்

தேடி கிடைப்பதில்லை - 3

பிரதர், நான் இறங்க வேண்டிய இடம் வந்துட்டது நான் இறங்கிடறேன், அங்கே பாருங்க உங்களுக்கு ஏத்த பொண்னு அங்க மஞ்ச கலர் ட்ரெஸ்ல இருக்கு,அதுவா, நல்லாத்தான் இருக்கு, ஆனா கல்யாணம் ஆகி இருக்கும் போல இருக்கே.நான் அங்கீள்னு கூப்பிடது தப்பே இல்லை, நீங்க ஏன் மஞ்ச சேலை கட்டின பொண்ண பார்த்தீங்க, அந்த சுடியை சொன்னேன்.எங்கே...................................................................



மஞ்சகலர் சாரிக்கு பக்கத்திலிருந்த, அந்த வெள்ளை சல்வார் மற்றூம் சிவப்பிலால் ஆன துப்பட்டா பெண் கொஞ்சம் நல்லாவே இருந்தாள்,



தங்காய் நன்றி, கிளம்பும் போது நல்ல பிகரை காட்டிகொடுத்து போனதுக்கு,



அண்ணாத்தே ஓவரா ஜில்லாகதே, பக்கத்துல மீசைக்காரர் இருக்காரு, அப்பாவா இருக்கும், எதுக்கும்ம் கொஞ்சம் பார்த்து நிதானமா டீல்ல இறங்கு, வர்ட்டா



என்ன கொடுமை இது, டாடட்டா



அப்படி இப்படி நகர்ந்து நகர்ந்து முன்னேறிவிட்டேன்,( இத படிப்பில காட்ட்டிருந்தா எப்பவோ முன்னேறி இருப்பனு ஏதோ அசரீரி மாதிரி கேட்டது, விவேக் சொல்ற மாதிரி அப்பன் சாபம்தான் வெப்பன் மாதிரி தாக்குது போல)


அப்பாடி, உப்பலீயப்பா கால்ல மெட்டி இல்லை, ஹா ஹா, ஐய்ய்யா கழுத்துலயும் தாலி இல்லை,

அப்போ அநாவசியாமாக என் பாக்கெட்டில் இருந்து எட்டி குதித்து என் எதிரில் நின்றது என்னை போலவே ஒருவன்,

வெள்ளை உடை தரித்திருந்தான், மற்றபடி என்னை போலவே இருந்தது அது, என்னை போல இருந்ததால் அது என அழைக்க எனக்கு பிடிக்கவில்லை. அவர் என்றே இனி சொல்கிறேன்

அவர் சொன்னார், “ ஏண்டா கஸ்மாலம் (மரியாதை கொடுத்தாலும் மரியாதை கிடைக்கமாட்டேங்குதே), இப்படியே ஒவ்வொரு பெண்ணா சுத்திட்டு இருக்கியே உனக்கு வெட்கமா இல்லை,

நான் சொன்னேன், “ அட மானம் ரோசம் வெட்கம் சூடு சுரணைலாம் பார்த்தா ஒரு பிகரை உசார் பண்ண முடியுமா இல்லை, பீச், பார்க், சினிமானுதான் சுத்தமுடியுமா, என்னை போல இருக்கியேனு கொஞ்சம் மரியாதை கொடுத்தா எங்கிட்டயே எகிர்ர,

என்னை போல இருந்தது என் மனசாட்சி என்பதை சொல்ல வேண்டும் என்று அவசியமில்லைதானே, அது எதுக்காக வந்துச்சோ அது செவ்வென நடந்தேறியது

(தொடரும்)

14 May 2009

மீண்டும் வந்தியதேவன் - 1

(இரவு 10 மணி சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம்)

பற்பல ஊர்களுக்கு செல்ல பயணசீட்டு பெற்றூக்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது கவுண்டரில் கூட்டம் அலைமோதிகொண்டிருந்தது, அந்த நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கிறான் நம் கதையின் நாயகன் (அதாவது என் கதையின் நாயகன், நம்னு சொன்னதும் கதைக்கு சொந்தம் கொண்டாடாதீங்க)

நம்ம நாயகன் பேரு திரு, ஆறடிக்கும் ஒரு சில அங்குலமே குறைவு, அளவான உடல், கருநீல ஜீன்ஸ் அணிந்திருந்தான். மரியாதையா கூப்பிடுவோமா, கருநீல ஜீன்ஸ் அணிந்திருந்தார். மேலே அடிக்கும் மஞ்சள் வண்ண டி-ஷர்ட், முழுசாக ட்ரிம் பண்ணின தாடி மீசை, கையில் பெரிதும் இல்லாமல் சிறிதும் இல்லாமல் மீடியமான ட்ராவல் பேக்


மெது மெதுவாக க்யூவில் முன்னேறிக்கொண்டிருந்தார் திரு.திரு அதாவது மிஸ்டர். திரு, அதேசமயம் அவன் சட்டை பையில் இருந்த செல்லிடை பேசி கிச்சுகிச்சு மூட்ட, கையிலெடுத்து காதில் வைத்தான்

திரு ‘ ஹலோ சொல்லுடா மச்சான், இப்பதான் டிக்கெட் கவுன்டரை பாதி தாண்டி இருக்கேன், இன்னும் 20 நிமிடம் ஆகலாம்,

எதிர்முனையில் திருவின் நண்பன் பேசினான், “பிரச்சனை இல்லடா மணி 10தான், எப்படியும் 11 மணிக்குதான் அடுத்த ட்ரெயின், செவ்வாய் கிழமைதானே, கூட்டம் இருக்காது, கல்யாணநாளும் இல்லை, ப்ரீயா வரலாம், காலைல சேலம் 5.30 வந்து சேரும், சேலம் பக்கம் வந்ததுமே ஒரு கால் பண்ணிடு, நான் உடனே வண்டியை கிளப்பிட்டு வந்துடறேன்,

திரு’ , சரி மச்சி, நீ தூங்குடா நான் காலைல கால் பண்றேன்.

சிறிது நேரத்தில் சேலத்துக்கு டிக்கெட் பெற்றுக்கொண்ட திரு, நேராக 11ம் ப்ளாட்பாரமில் இவனுக்காகவே காத்த்திருந்தது போல நின்ற ரயில்பொட்டியில் ஏறிக்கொண்டான், கூட்டம் அதிகமில்லாமல் இருந்தது, அவன் லக்கேஜை மேலே வைத்துவிட்டு ஜன்னலோலரமாக சென்று அமர்ந்தான், நேரம் சரியாக 10.45என்று காட்டியது,

தனியாக வைத்திருந்த ஒரு பேக்கில் இருந்து சில புத்தகங்களை எடுத்து பார்த்தான், கல்கியின் பொன்னியின் செல்வன அட்டைபடத்தில் இருந்த கல்கியின் படத்தையே உற்றுபார்த்து கொண்டிருந்தான்,

சென்ற மாதங்களின் நடந்த நிகழ்சிகள் ஒவ்வொன்றாக நினைவுபடுத்த ஆரம்பித்தான், தஞ்சாவூர் சென்றது, பெரியகோவில் தரிசனம், சரஸ்வதி மஹால் , சரபோஜி மன்னர் அரண்மனை, சிவங்கங்கை பூங்கா ஒவ்வொன்றாக் நினைவுக்கு வந்தது,

சரஸ்வதி மஹாலில் சந்தித்த அந்த சித்தர் பெரியவர் உருவம் ஞாபகத்திற்கு வந்தது, நினைத்த மாத்திரத்தில் அந்த உருவம் எதிரி தோன்றுவது போல இருந்தது

அப்போது

(தொடரும்)

நினைத்தேன் சொல்கிறேன்

ரஜினி எப்படி தமிழக முதல்வராகலாம்னு (பாவம் அந்த ஆளு கட்சி கூட இன்னும் ஆரம்பிக்கலை, அதுக்குள்ளே முதல்வராக கூடாதுன்னு கூச்சல் வேற). கேட்டுகிட்டு இருக்காங்க நிறைய பேர்

ஏன்னு கேட்டா பக்கத்து ஊராம் நம்ம ஊர் இல்லையாம், அப்படினு சில கறுப்பு சொக்காய்காரர்கள் கூச்சலிடுகிறார்கள், இன்னிக்கு எம்.ஜி.ராமச்சந்திரர் தமிழின தலைவராம், அன்னிக்கு மலையாளினு சொன்னவர்ல்கள் அந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள்,

சே குவாராவை எத்தனை பேருக்கு தெரியும், அவர் என்ன தமிழக கிராமத்திலே பிறந்தவரா, எங்கோ இருக்கும் லத்தீன் அமெரிக்காவை சேர்ந்தவர் அவரை பனியன்ல படம் போட்டுகிட்டு அலையறார்கள் சிலர், அவர் அவர் பிறந்த அர்ஜெண்டிலாவிலா அமைச்சரா இருந்தார், கியூபாவிலேதானே அமைச்சரா இருந்தார்,

அவரோட நண்பர் பிடல் காஸ்ட்ரோ மட்டும் என்ன கீயூபாகாரரா, இல்லையே, ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவராச்சே, அவர் அப்பா ஸ்பெயின் போர் தளபதி, பின்பு கியூபாவில் குடியேறி பண்ணையாரானவர்,அவர் மகன்தானே பிடல் காஸ்ட்ரோ.

அன்னிக்கு ஒருத்தர் சொன்னார் தமிழகத்துக்கு தமிழந்தான் ஆட்சிக்கு வரணுமாம், அதுக்கு ஒரு விளக்கென்ன விள்ளக்கம் வேற உங்க பையனுக்கு நீங்கதானே அப்பாவ இருக்கனும்னு ஒரு பதில்,

தமிழனால் மட்டுமே கேவலமான வார்த்தைகள் உபயோகிக்க முடியும்னு நினைக்கிறேன்.
அதுல ஒரு ஆறுதல் நாம பேசறதோட சரி, வெளிநாட்டுக்காரனுங்க அதுக்கும் அடுத்தபடி போயிடறாங்க

ரோம் - தி வாரியர் ( இடைவேளை)

மீண்டும் கார் சாலையில் தன் பயணத்தை நால்வரோடு தொடங்கியது.
கார் விஸ்வா ஹாஸ்டலின் உள்ளே நுழைந்தது, அங்கே.........
அங்கே ஒன்னும் நடக்கலை, பசங்க ஹாஸ்டலில் சேர்ந்துட்டாங்க, முதல் நாள் க்ளாஸ்லாம் எதுவும் இல்லை பசங்க எல்லாம் பெஞ்ச் மேல ஏறி ஆடறாங்க, விளையாடறாங்க பாடறாங்க, கத்தி கலாட்டா பண்றாங்க, அவங்க சின்ன பசங்க அப்படித்தான் இருப்பாங்க முதல் நாள் க்ளாஸ்ல. நாம சனி, ஞாயிறு விடுமுறை கழிச்சி வந்து பார்ப்போம் பசங்களை
ஓகே வா, டாடா பை பை சி யூ

(மீண்டும் திங்கள் கிழமை தொடரும்)

ரோம் - தி வாரியர் - 6

அப்போது தூரத்தில் 4-5 பேர் சூர்யா சூர்யா என சத்தம்போட்டு கொண்டு வருவது கேட்டது)
நீலாம்பரி அவர்களை பார்த்து கை அசைத்தாள்,
ரோ : யார் அவங்க
நீலா : என் அண்ணன்கள்
ரோ : சூர்யானு கூப்பிடுறாங்க
நீலா : அது என் பேர்தான், வீட்டில் சூர்யாதான்
ரோ : சூர்யா பேர் நல்லா இருக்கு
நீலா : தேங்க்ஸ்
ரோ : ஓகே நாங்க கிளம்புறோம், எங்களைய தேட போறாங்க.
நீலா : வாங்களேன் என்னோட அண்ணன்களை இண்ட்ரோ கொடுக்கிறேன்,
ரோ : சாரி அதுக்கு டைம் இல்லை, நாங்க கிளம்புறோம் வாடா லக்ஸ் டைம் ஆச்சி
நீலா அவர்களை பார்த்துகொண்ட்டே இருந்தாள், அவர்கள் அவளை திரும்பி கூட பார்க்காமல் சென்று கொண்டிருந்தனர்
லக்ஸ் : அவள்கிட்ட போன் நம்பர் வாங்கி இருக்கலாம் நீ
ரோமியோ : எதுக்கு
லக்ஸ் : சும்மா பேசத்தான்,
ரோமியோ : வாங்கனும்னு தோணலை, அப்படி தோணிச்சினா வாங்கி இருப்பேன்
லக்ஸ் : ஏன் தோணலை
ரோ : தோணலை, சரி வா டிரைவர் வந்துட்டார், கிளம்பலாம்
மீண்டும் கார் சாலையில் தன் பயணத்தை நால்வரோடு தொடங்கியது.
கார் விஸ்வா ஹாஸ்டலின் உள்ளே நுழைந்தது, அங்கே.........

(தொடரும்)

ரோம் - தி வாரியர் - 5

மீண்டும் நல்லதொரு நாளில் தன் புதல்வர்களை விஸ்வா நடத்தும் ஹாஸ்டலுக்கு அனுப்பி வைத்தார்,
ஹாஸ்டலுக்கு நால்வரும் தாஸ் அனுப்பிய காரில் சென்று கொண்Dஇருந்தனர்,
அவர்கள் அயோநீர் பங்களாவில் இருந்து வெகு தொலைவில் இருந்தது, அந்த ஹாஸ்டல் கம் ஸ்கூல், சூரியன் கிழக்கில் உதித்த்து கொஞ்சம் கொஞ்சம்மா மேலே ஏறி நடு உச்சிக்கு வந்து, பின்னாடி கொஞ்சம் கொஞ்சமா கீழே இறங்கி கொண்டிருந்தது, அதாவது அந்தி சாயும் நேரத்தில் பயணித்து கொண்டிருந்தனர்,
அவர்கள் வந்தகார் பழுதடைந்து நின்றது, டிரைவர் இவர்கள் நால்வரையும் தனியாக விட்டுசென்றார் மெக்கானிக்கை கூட்டிவர.
அப்போது
சற்று தொலைவில் ஒரு சிறுமியின் கூச்சல் கேட்டது.
நான்கு சிறுவர்களும் கூச்சல் வந்த திசையை நோக்கி சென்றனர்

சற்று தொலைவில் ஒரு சிறுமியின் கூச்சல் கேட்டது.
நான்கு சிறுவர்களும் கூச்சல் வந்த திசையை நோக்கி சென்றனர்
எங்கு தேடியும் யாரும் கண்னில் படவில்லை, ப்ரணடன் மற்றும் சரத் பயந்துவிட்டனர், அவர்கள் பயந்து மறுபடி கார் அருகில் சென்று விட்டனர், லக்ஸும் ரோமியோவிடம் போகலாம் என்றான் ஆனால் அந்த 13 வயது டீன் ஏஜ் ரோமியோ சப்தம் எங்கிருந்து வருகிறது என நோட்டமிட்ட படியே இருந்தான்,
கடைசியில் ஒரு சிறிய குழியில் அவளை கண்டனர், அவள் மயங்கி இருந்தாள். ரோமியோ தைரியமாக கீழே இறங்கி அவன் வைத்திருந்த வாட்டர் பாக்கெட்டில் இருந்து அவள் முகத்தில் தண்ணிரை தெளித்தான்,
விழித்து பார்த்த அந்த சிறுமி பயந்து போனாள், அவள் பிறகு சுதாரித்து வந்தவர்கள் தன்னை காப்பாற்ற வந்தவர்கள் என அறிந்தாள்,
ரோமியோ : யார் நீ எப்படி இங்கே வந்தே
அவள் : என் பேர் நீலாம்பரி, நான் சிலோன்ல இருந்து வந்திருக்கேன், நான் என் அண்ணன்கள் எல்லாம் தஞ்சை பெரிய கோவிலை பார்க்க வந்தோம்,
ரோ : அவங்கெல்லாம் எங்கே, நீ எப்படி இந்த குழியில் விழுந்த.
நீலா : நான்ங்க சும்மா பீச்சுக்கு வந்தோம், எல்லாரும் பீச்சுல இருக்காங்க, நான் அப்படியே போன் பேசிட்டே வந்தேன், தெரியாம இங்கே வந்து விழுந்துட்டேன்.
ரோ : சரி பார்த்து போம்மா, துணைக்கு நாங்க வேணும்னா வரட்டுமா
நீலா : நோ தேங்க்ஸ், உங்க பேர் என்னானு நான் தெரிஞ்சிக்கலாமா
ரோ : நான் ரோமியோ, இது என் தம்பி லக்ஸ்,
நீலா : நைஸ் நேம், சரி நான் கிளம்பறேன், அண்ணா தேடுவார், ரொம்ப தேங்க்ஸ் நீங்க பண்ண உதவிக்கு.
ரோ : ஆபத்துல இருக்கிறவங்களுக்கு உதவுறது தானே மனித பண்பு. அதானே நான் செஞ்சேன்
(அப்போது தூரத்தில் 4-5 பேர் சூர்யா சூர்யா என சத்தம்போட்டு கொண்டு வருவது கேட்டது)

ரோம் - தி வாரியர் - 4

தாஸ் தன் 4 வாரிசுகளுக்கும் பேர் சூட்டும் விழாவை தடபுடலாக ஏற்பாடு செய்தார்,
கௌஷிகாவிற்கு பிறந்த முதல் குழந்தைக்கு ரோமியோ என பேர் சூட்டினார், கனிகாவிற்கு பிறந்த குழந்தைக்கு பிரண்டன் என வைத்தனர், சுபாவிற்கு இரட்டை குழந்தை பிறந்தது அதில் மூத்தவனுக்கு லக்ஸ் எனவும் இளைய்வன் கடைகுட்டிக்கு சரத் எனவும் பேர் சூட்டி மகிழ்ந்தனர்.
பிள்ளைகள் நாலொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தனர்(அதெப்படி ஒவ்வொரு நாளும் ஒரு மேனி இருக்கும்னு அசட்டுத்தனமா கேட்க்கப்படாது புரிஞ்சுதா)
அவர்கள் வால்தனம் நாலுக்கு நால் அதிகரித்தது, தாஸால் அவர்களை அடக்க முடியவில்லை, அதனால் குழந்தைகள் நால்வரையும் ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்க நினைத்தார், குழந்தைகள் தன்னுடன் இருந்தால் தன்னைப்போல் ஆகிவிடுவார்களோ என்று பயப்பட்டார், மேலும் அவரின் பிள்ளைகள் பணக்காரரின் பிள்ளைகள் என்று ஆணவத்துடன் வளர்வதை அவர் விரும்பவில்லை,
பிள்ளைகள் படிக்க நல்ல ஹாஸ்டல் தேடினார், லடைசியில் கிடைத்தது விஸ்வா மெட்ரிகுலேசன் பள்ளி, அதன் பிரின்ஸிபால் விஸ்வாவை போனில் தொடர்பு கொண்டார்
பிள்ளைகள் படிக்க நல்ல ஹாஸ்டல் தேடினார், லடைசியில் கிடைத்தது விஸ்வா மெட்ரிகுலேசன் பள்ளி, அதன் பிரின்ஸிபால் விஸ்வாவை போனில் தொடர்பு கொண்டார்
பிரின்ஸ் விஸ்வா மிகப்பெரிய செல்வந்தர், அவர் டாக்டர் வசியின் நண்பரும் ஆவார், ஆனால் ஒரு காலத்தில் இருவருக்கும் பெரிய போட்டியே நடந்திருக்கிறது, அதையெல்லாம் மறந்துவிட்டு நல்ல நண்பர்களாகவே இப்போது இருக்கிறார்கள்,
தாஸ், டாக்டர் வசியின் மூலம் விஸ்வாவை பற்றி அறிந்தார், அவரே தன் புதல்வர்களை கண்டிப்புடன் வளர்க்க சரியானவர் என நினைத்தார்.
மீண்டும் நல்லதொரு நாளில் தன் புதல்வர்களை விஸ்வா நடத்தும் ஹாஸ்டலுக்கு அனுப்பி வைத்தார்,

ரோம் - தி வாரியர் - 3

டாக்டர் ஈஸ்வர் சிகிச்சைக்கு நாள் குறித்தார், நல்லதொரு நாளில் சிகிச்சையை டாக்டர் ஆரம்பித்ததர்
என்னத்தான் டாக்டர் ஸ்பெஷல் சாதாவாக இருந்தாலும் சோதா இல்லை, அவரது சிகிச்சை பலனளித்தது, தாஸை அழைத்தார் டாக்டர் கௌஷிகாவிற்கு குழந்தை முதலில் பிறக்கும் என்றார். அந்த அடுத்து கனிகா பிறகு சுபாக்கு பிறக்கும் என்றார்.
இதை கேட்டு தாஸ் மிகவும் சந்தோஷப்பட்டார். 3 மனைவியரையும் நல்லதொரு நர்சிங் ஹோமில் சேர்த்தார்.
3வருக்கும் பிரசவக்கும் பிரசவ நாள் நெருங்கியது

3வருக்கும் பிரசவக்கும் பிரசவ நாள் நெருங்கியது
முதல் குழந்தை நவமியில் பிறந்தது (மற்ற குழந்தைகள் எந்த திதில பொறந்தா என்ன நமக்கு முதல் குழந்தைதான் கதையின் நாயகன் அவனை பத்தி மட்டுமே கதையிலே பில்ட் அப் தருவோமே)
தாஸ் சோதிடரை அழைத்து அவனின் ஜாதகத்தை கணிக்க சொல்லி கேட்டான் , சோதிடர் முதல் குழந்தையின் ஜாதகத்தை கணிக்க ஆரம்பித்தார், சிறுது நேரத்திற்க்கு பின் முதல் குழந்தையின் ஜாதகத்தை கணித்து முடித்தார் (இத சொல்ல ஏண்டா 4வரி ஆச்சினு கேட்காதீங்க என்ன இருந்தாலும் இது மெகா தொடர் ஆக்கும்)
முதல் குழந்தை கண்ணி துறையில் பெரிய இவனாக வருவான் என சொன்னார், கடல் தாண்டி அவன் விடும் பட்டம் பறக்கும் என ஆருடம் கூறினார், இப்படியே 2ம் குழந்தையின் ஜாதகத்தையும் கணித்தார், 3ம் குழந்தையின் ஜாதகத்தையும் கணித்தார், நான்காம் குழந்தையின் ஜாதகத்தையும் கணித்தார், அப்புறம்.... அப்புறம் என்ன காசு வாங்கிட்டு வீட்டுக்கு போயிட்டார்,
தாஸ் தன் 4 வாரிசுகளுக்கும் பேர் சூட்டும் விழாவை தடபுடலாக ஏற்பாடு செய்தார்,

ரோம் - தி வாரியர் - 2

அவரது குடும்ப டாக்டர் வ.சி (வ.சித்ராமையர் என்பதன் சுறுக்கம்) போய் சந்தித்தார், தாஸ்,
டாக்டர் வ.சி. தாஸை பரிசோதனைக்கு அனுப்பினார், பரிசோதனை முடிவு தாஸுக்கு எதிராகவே இருந்தது, தாஸ் கண் கலங்கினார். வ.சியின் காலில் விழுந்தார், எவ்வளவு செலவு செய்யவும் தயாராக இருந்தார் தாஸ், வ.சி டெஸ்ட் ட்யுப் பற்றி கூறினார், தாஸுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது, ஆனால் வ.சி சாதாரண டெஸ்ட் ட்யுப் முறையில் சாத்தியமில்லை, ஸ்பெஷல் சாதா முறையில் மட்டுமே சாத்தியம் என்றார், ஸ்பெஷல் சாதா ஸ்பெஷலிஸ்ட் டாக்ட ஈஸ்வரை அறிமுக படுத்துவதாக டாக்டர் வசி கூறினார்.

ஸ்பெஷல் சாதா ஸ்பெஷலிஸ்ட் டாக்ட ஈஸ்வரை அறிமுக படுத்துவதாக டாக்டர் வசி கூறினார்
ஸ்பெஷல் சாதா டாக்டர் ஈஸ்வரை இருவரும் சந்தித்தார்கள். நீண்ண்ண்ண்ட நேர காத்திருப்புக்கு பின்னர் அவர் அப்பாயின்மெண்ட்கிடைத்தது, இருவரும் அவரை சந்தித்தார்கள்,
தாஸ் தனது மனைவிகளில் கௌஷிகாவிற்கே டெஸ்ட் ட்யூப் மூலம் குழந்தை வேண்டும் என கேட்டார், அதற்க்கு ஸ்பெஷல் டாக்டர் ஈஸ்வர், இந்த ஸ்பெஷல் சாதா மூலம் குழந்தை பிறப்பது 50% தான் வாய்ப்பிருக்கிறது, அதனால் தாஸின் மற்ற மனைவிகள் கனிகா, கௌசிகா அவர்களுக்கும் டெஸ்ட் ட்யுப் பேபி சிகிச்சை செய்யலாம் என்றார். தாஸ் நீண்ட யோசனைக்கு பின் அதற்க்கு சம்மதித்தார், இந்த சிகிச்சைக்காக அவர் தன் சொத்தில் பாதியை கூட இழக்க தயாராக இருந்தார், டாக்டர் ஈஸ்வர் சிகிச்சைக்கு நாள் குறித்தார், நல்லதொரு நாளில் சிகிச்சையை டாக்டர் ஆரம்பித்ததர்.

(தொடரும்)

ரோம் - தி வார்ரியர்

அயோநீர் மஹால்.
இந்தியாவின் மிகப்பெரிய பங்களா, அந்த மஹாலுக்கு சொந்தக்க்காரர், தாஸ், அவருக்கு இந்த பங்களாவை தவிர நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நிறைய பங்களாக்களை சொந்தமாக்கி வைத்திருந்தார். கூடவே நிறைய சின்ன வீடுகளையும் தான்.
அவர் ஏர் ரைபிலிங் எனும் ஷூட்டிங்கிலும் கெட்டிக்காரராக இருந்தவர், மிகப்பெரிய கோடிஸ்வரர், அவரும் தமிழக அரசியல் தலைவர்களை போல 3 கல்யாணம் செய்தவர், அவர்கள் இவரும் அந்த மஹாலிலேதான் இருக்கிறார்கள்,
ஏக போகமாக வாழ்ந்த தாஸ்க்கு ஒரே ஒரு குறை, அவர் சொத்துக்களை அவருக்கு பின் கட்டி காப்பாத்த ஒரு வாரிசு இல்லை என்பதே ஆகும், அது சம்பந்தமாகத்தான் அவரது குடும்ப டாக்டர் வ.சி (வ.சித்ராமையர் என்பதன் சுறுக்கம்) போய் சந்தித்தார், தாஸ்,

டாக்டர் என்ன சொன்னார், காத்திருங்கள், சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடரும்,

தேடி கிடைப்பதில்லை - 2

ஆழ்வார் பேட்டை ஆண்டவா எல்லா பிகரை நல்லா வச்சிருப்பா)

எஸ்க்யூஸ் மீ இந்த 27C தி.நகர் போகுமா மேடம்

ஹலோ மிஸ்டர் இது உங்களுக்கே இது ஓவரா இல்லை, நீங்க இந்த வண்டிலதானே டெய்லி தி.நகர் போறீங்க, இன்னிக்கு மட்டும் என்ன டவுட்டு, என்ன பேசறதுக்கு பிட்டு போடுறீங்களா

நோ நோ நான் ரொம்ப டீசண்ட்டானவன்,

நாங்கெல்லாம் ஸ்கூல் முடிச்சி, காலேஜ் முடிச்சிட்டு வேலைக்கு போயிட்டு இருக்கவங்க, உங்களை மாதிரி எத்தனை பேரை பாத்திருப்போம், வேற ஆளை பாருங்க, அல்ரெடி புக்குடு.

(பார்த்தப்பவே நினைச்சேன்) தாங்க் யூ, ஆல் த பெஸ்ட்,

எஸ்க்யூஸ் மீ, தி நகர் ஒன்னு கொடுங்க,

உள்ளே போங்க சார்,

சார் கேர்ஸ்லாம் நிக்குறாங்க சார், எப்படி போறது, சின்னதா இடிச்சாலும் காச் மூச்னு கத்துவாங்க சார்,

பரவாயில்லே சார், ஆபத்துக்கு பாவமில்லே, பீக் ஹவர்ஸ்ல இதெல்லாம் கண்டுக்காதீங்க சார்,

சார் பிகர் நல்லா இருந்தா கூட திட்டு வாங்கலாம், போனதும் வந்ததும்தான் சார் திட்டுறாங்க,

யோவ் உள்ளே போய்யா, பீக் ஹவர்ல தொண தொணனுட்டு,

தாங்க்ஸ், இன்னிக்கு யார் முகத்துல முழிச்சேன்னே தெரியலையே, ரொம்ப டெர்ரர்ரா போயிட்டு
இருக்கே, (அப்பாடி 2 பேரு இறங்க பாக்கூறாங்க, ஜன்னலோரமை பிடிச்சிட வேண்டியதுதான், அப்பாடட சீட் கிடைச்சிடுச்சி, இனிமே ஜாலியா சைட் அடிச்சிட்டே போக வேண்டியதுதான்)

அடடா பால் போல 16ல் ஒரு பொண்ணு வருதே. ம். ஆழ்வார் பேட்டை ஆண்டவா, கொஞம் கருணைகாட்டப்பா. அடடா என் பக்கத்துல வருதே, என் பக்கத்து சீட் ஆளை தொறத்திட்டு உட்கார வச்சுடனும்.

அங்கிள் அங்கிள்,

சார் உங்களைதான் கூப்பிடுது இந்த பொண்னு

உங்களைதான் அங்கிள்,

என்னையா, அங்கிளா (அடடா ஷேவ் பண்ணாம வந்தது எவ்ளோ பெரிய தப்பா போச்சி)

ஆமாம் அங்கிள், இந்த பேக் வச்சிக்கோங்க, அங்கிள்,

இங்க பாரு, வேணும்னா என் சீட்ல உட்கார்ந்துக்கோ, இப்படி அங்கிள்னு சொல்லாதே

நோ தாங்ஸ் அங்கிள், உங்க பக்கத்துக இருக்கவர் இப்போ இறங்கிடுவார், இதோ இறங்கிறார், அப்பாடி

என் பேக் தாங்க அங்கிள்.

ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்ன்ன சோதனை இது, உன் திருவிளையாடலை எங்கிட்டயேவா
அங்கிள், நீங்க எங்க இறங்கறீங்க வடப்ழனிலையா

இல்ல

அப்போ கோடம்பாக்கமா அங்கிள்,

இங்க பாரு வேணும்னா அண்ணா சொல்லிக்கோ, அங்கிள்னு சொல்லி என்னை டென்ஷன் பண்ணாதே.

ஹா ஹா ஏன் அங்கிள், சாரி சாரி ஏன் அண்ணா

இங்க பாரு என்னை பார்த்தா அங்கீள் மாதிரி இருக்கா, இப்ப கூட நான் யூனிபார்ம்ல போனா

என்னைப்பார்து +2 ஸ்டூடண்ட்னு சொல்லுவாங்க,

அப்போ +2 ஸ்டூடண்ட்ச்லாம் ப்ளே ஸ்கூல்ல இருப்பாங்களா, கோவிச்சிக்காதீங்க, நம்ம ஊர்ல ஸ்கூல் பசங்களே 1000 பேர் இருப்பாங்க, காலேஜ்ல் ஸ்டூடண்ட்ஸ் ஒரு 10000 பேர் இருப்பாங்க, இதுல உங்களை மாதிரி ஆளுங்க வேற. இத்தனை பேர்கிட்ட இருந்து நாங்க எஸ்கேப் ஆக இப்படி எதாச்சும் சொன்னாதானே உண்டு,

ஏய், என்னை பார்த்தா எப்படி தெரியுது, நான் என்ன பொறுக்கி மாதிரியய இருக்கேன், நான் ஆபீஸ் போவேனா இல்ல உன் பின்னாடி சுத்திட்டு இருப்பேனா.

அங்கிள் சாரி அண்ணா, பார்த்தேனே, உங்க பார்வையே சரியில்லை, அதான், உங்களை ஓட்ட அப்படி சொன்னேன்,

நல்லா ஓட்டினே, என் பார்வையே அப்படித்தான் ( ஸ்ரீ வர வர உன் பார்வையை எல்லாரும் கண்டுபிடிச்சிடுறாங்களே, அந்த அப்பாவி பார்வை மறுபடி வரவழைச்சிடு, இல்லே எல்லாமே இப்படித்தான் ஆகும்)

பிரதர், நான் இறங்க வேண்டிய இடம் வந்துட்டது நான் இறங்கிடறேன், அங்கே பாருங்க உங்களுக்கு
ஏத்த பொண்னு அங்க மஞ்ச கலர் ட்ரெஸ்ல இருக்கு,

அதுவா, நல்லாத்தான் இருக்கு, ஆனா கல்யாணம் ஆகி இருக்கும் போல இருக்கே.

நான் அங்கீள்னு கூப்பிடது தப்பே இல்லை, நீங்க ஏன் மஞ்ச சேலை கட்டின பொண்ண பார்த்தீங்க, அந்த சுடியை சொன்னேன்.


எங்கே...................................................................


தொடரும்

தேடி கிடைப்பதில்லை - 1

மச்சி மச்சி எழுத்துருடா,

ஏண்டா கடுப்பேத்துற இன்னும் ஒரு அரை மணிநேரம் போகட்டுமே

டேய் ஸ்ரீ, டைம் 7டா, இப்பவே நீ அரை மணிநேரம் லேட்டு,

என்னது 7ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

டேய் டேய் அப்படியே குளிக்க ஓடுர, துண்டுலாம் வேணாமா

அது குளிக்க தெரியாதவங்க செய்றது,

பேஸ் வாஷ், பண்ண போறேன்னு சொல்லு, அதுக்கு ஏன் இந்த பில்ட் அப். என்னடா அதுக்குள்ல வெளியே வந்துட்ட, குளிச்சிட்டியா

எல்லாம் ஆச்சி,

10நிமிடத்துலே காலை கடன் எல்லாத்தையும் உன்னால மட்டும்தான் முடியும்,

எஸ் நான் ரெடி ஆகிட்டேன், மச்சி வரட்டுமா, நான் கிளம்பிட்டேன் ஆபிஸ்க்கு, போறதுக்கு முன்னாடி சாமி கும்பிடனுமே, எங்கே என் ஆண்டவன்.

(அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே)

டேய் டேய் உனக்கே இது அதிகமாப்டலை, கமல் ப்டத்த கும்பிட்டு போறியேடா.

கமல்தான் என் ஆண்டவர், ஆழ்வார்பேட்டை ஆண்டவர், வரட்டா


(தொடரும்)

கத போல தோணும் - 5

ஹேய் கட்டம் போட்ட சட்டை, என்ன பண்றே அங்க

(வந்துட்டாய்யா வந்துட்டாயா)

இங்க என்ன பண்ணிட்டிருக்க. வா கிளம்பலாம்.

சாப்பிட்டாச்சா?

சாப்பிட்டாச்சு, சாப்பிட்டு ப்ரஷ் ஜூஸ் குடிச்சாச்சி, பில் கட்டியாச்சி இப்போ கிளம்பியாச்சி.

(அடிக்கிராதகி நீயே பில் பண்ணிடுவேனு முன்னாடியே தெரிஞ்சி இருந்தா அட்லீஸ்ட் ஒரு ஜூஸாவது குடிச்சிருப்பேனே.)

ஹ்லோ ஏன் இப்படி முழுக்கறீங்க, கிளம்பலாமா.

ம்ம். அதுக்கு முன்னாடி உங்க பேர்ர்ர்ர்ர்ர்ர்....

அட ஆரம்பிச்சிட்டீங்களா, கிளம்புங்க அடையாறு போனதும் சொல்றேன்.

என்னங்க மிஸ். எக்ஸ் 4 மணி நேரம் உங்களுக்காக வெயிட் பண்ணி இருக்கேன். உங்களை அடையாறுவரை கூட வந்து டிராப் பண்ண போறேன். சப்போஸ் வழியில எங்கயாவ்து எதிர்பாராத விதமா ஆக்சிடண்ட் ஆச்சினா உங்களை ஆஸ்பிட்டலில் சேக்கும் போது அங்க உங்க பேர் கேட்ப்பாங்களே. அதுக்காவ்து பேர் சொல்லுங்க

ஏங்க இப்படி அபசகுணமா பேசுறீங்க.

அப்ப சுபசகுணமா உங்க பேரை சொல்லுங்க, பேர் சொன்னாதான் நான் வருவேன்.

சும்மா அடம்பிடிக்காம கிளம்புங்க ஜெய்கர்.

எம் பேரு. என் பேர் எப்படி உங்களுக்கு தெரியும். உங்க ஊர் பேர், எங்க வர்க் பன்றீங்க எல்லா டிடெயிலும் தெரியும்.

எப்படி எப்படி? என் ஐடி கார்டை பார்த்திருப்பீங்க, ஆனா அது எங்கிட்டதானே இருக்கு. தென்?

அப்புறம் சுமதி பத்தியும் தெரியும் எனக்கு. அது கண்டிப்பா ஐடில வ்ர மேட்டர் இல்லை.

எப்ப்படி எப்படி எப்படி? நீங்க சுமதி ப்ரண்டா? அப்படி இருந்தாலும் சுமதி என்னை பத்தி உங்ககிட்ட சொல்ல வாய்ப்பே இல்லையே.

சொல்றேன், ஆனா அதுக்கு முன்னாடி அடையாறு. ஓகே.

(ஒரு வேளை பேய், பிசாசா இருப்பாளோ, சே காலேஜ்லேயே கால் இருக்கானு சரியா பார்த்துட்டு ஏறி இருக்கலாம்)
சரி உட்காருங்க, கிளம்புவோம்.

(மாலை 4 மணி அளவில்)
ஏங்க நீங்க சொன்ன இடம் வந்துட்டது. இப்பயாச்சும் சொல்லுங்க.

என்ன சொல்ல்னும்.

(வில்லியா இருப்பா போலிருக்கே)
சுமதியை எப்படி தெரியும்.

அப்போ என் பேர் வேண்டாமா?



(கன்பார்ம்டு,வில்லியேதான்)
முதல்ல உங்க பேர், அப்புறம் சுமதி பத்தி.

நான் ரெண்டுல ஒன்னுக்குதான் பதில் சொல்லுவேன்னா எதுக்கு சொல்ல சொல்லுவீங்க.

(கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானேகற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான். வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன் - அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அடநானும் ஏமாந்தேன்)

ஏன் இப்படி முழிக்கரீங்க. ஹலோ பேசுங்க... ஹலோ...

இல்ல கண்ணதாசனை நினைச்சேன். கொஞ்ச நேரம் வாயடைச்சி போய்ட்டேன்.

நான் என்ன கேட்டேன் நீங்க என்ன சொல்றீங்க.

ஏங்க ரெண்டும் சொல்லிடுங்களேன்.

ஓ கே என் பேர். ப்ரியா.

ஓ ஸ்வீட் நேம் ( தூ... 3 எழுத்து பேரை சொல்ல 30கிமீ பயணம்). சுமதி எப்படி.....


ம்ம் சொல்றேன். உங்க ப்ரண்ட்தான் சொன்னார்.

என் பிரண்ட்டா? யாரு? தெளிவா சொல்லுங்களேன்.

>
>
>
>
>
>
(மாலையில் அறையில்)

மச்சான் மேட்ச் ஜெயிச்சிட்டோம், இன்னிக்கு நைட் உனக்கு ப்ரியாணி, ஓகேவா

வேண்டாம் டா.

ஏண்டா, என்ன ஆச்சி, காலைல எதாவது பொண்ணுகிட்ட பிட்டு போட்டு கிக்கு எதாச்சும் வாங்கினயா.

அதெல்லாம் இல்ல, நீ ஏண்டா அந்த காலேஜ் 2007லதான் ஓப்பன் பண்ணாங்கனு சொல்லலை,
அதை விடு, அது ஒரு ஆர்ட்ஸ் & சய்ன்ஸ் காலேஜ்னாச்சும் சொல்லி இருக்கலாம் இல்லே. அதைக்கூட விடுடா, உன் ப்ரண்ட் ப்ரியாவை பத்தியாச்சும் சொல்லி இருக்கலாம் இல்லே.

இத்துடன் இக்கதை இனிதே முடிவுற்றது..........



(அப்படினு நினைக்காதீங்க கொஞ்சம் பாக்கி இருக்கு அது கீழே)


(செல் ரிங் அடிக்கிறது. சார்லஸிடம் இருந்து அழைப்பு) ஹலோ....

மச்சான் நான் சார்லஸ் பேசுறேண்டா, உன் மிஸ்ட்கால் பார்த்தேன் மாம்ஸ். நான் இப்பதான் போனை வச்சேன், சொல்லு மச்சி என்ன விஷேசம்.......

முற்றும்

கத போல தோணும் - 4

உடனே நம்ம சால்ஸ்க்கு ஒரு காலை போடனும். 9...8.... 4...1...0....5....5...2...0....2.

நீங்கள் டயல் செய்த சந்தாதாரர் வேரொரு லயனில் பிசியாக இருக்கிரார்.
லயனிலேயே காத்திருக்கவும். அல்லது தொடர்பௌ துண்டித்து மீண்டும் முயற்ச்சி செய்யவும்ம்ம்ம்

(கோவிந்தா கோவிந்தா......)

(மச்சி நீ போடும் கடலைக்கு ஒரு நன்றி, எப்பிடியோ நல்லா இரு)

அடுத்தது எவனை பிடிக்கலாம், பல்சர் பாண்டிக்கு கால் பண்ண வேண்டியதுதான். 9...8....8. (டொக்)

வேணடாம், அவன்கிட்ட கேட்பினும் கேட்காமை நன்று, எதுக்குனு கேட்ப்பான், எப்படியோ போட்டு வாங்கிடுவான், அப்புறம் அந்தா ஹால்ப் டவுசர் பல்சரை எடுத்துகிட்டு வந்து அலம்பல் பண்ணுவான்
(குறிப்பு - புல்டோசர் வண்டியின் தம்பி பல்சர், அதான் ஹால்ப் டவுசர்)

அடுத்தது யாருக்கு போன் பண்ணலாம். முரளி, மூர்த்தி, நாகு, நாராயணன், நிலா, பங்காளி, பட்டாபி...............

யுரேகா

நிலா. எஸ் எஸ், நிலா தான் சரி, நிலாக்கா, நீங்க இப்ப எனக்கு நிலா இல்லை, அண்ணபூரணீ, அஷ்ட லட்சுமி, 9.....8.....4......0......X......X......X......X......X.

யப்பா உப்பிலியப்பா, மறுபடியும் கண்ணை தொறந்துட்டயேப்பா

ரிங்க் போகூஊஊஊஊஊஊஊஊஉது, போய்ட்டே இருக்கு.

எஸ்...எஸ் ஹலோ நிலா நான் எப்படி இருக்கீங்க, எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனுமே நீங்க.

யார் நீங்க.....?

என்ன நிலா திடிர்னு ஆண்குரலில் பேசறீங்க.

ஹலோ, அவங்க மீட்டிங்கில் இருக்காங்க, நான் அவங்க கொலிக் பேசறேன்.

ஓ சாரி சாரி, அவங்க எப்போ மீட்டின்கில் இருந்து வெளிவருவாங்கனு சொல்ல முடியாது.

2 மணி நேரத்தில வந்துடுவாங்க.

2 மணி நேரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா.

யெஸ். எதாவது சொல்லனும்னா சொல்லுங்க அவங்ககிட்ட சொல்லிடறேன்.

அப்படியா, மீட்டிங்கில பெட்ரோல் விலையும், பிரியாணி விலையும் குறைக்க சொல்லி ஒரு மசோதாவை தாக்கல் செய்ய சொல்லுங்க.


வ்வ்வாட்ட்?


ம்ம். அது போச்சு 1000வாட்ஸ் தாண்டி, இன்னும் கொஞ்ச நேரம் போனா அதிர்ச்சி 2000வாட்ஸ் தாண்டிடும் போல இருக்கு.

சார், கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க.

நோ நோ, இது என்னோட சோகம், என் சோகம் என்னானு சொல்லாம ஏங்க அழுகையா வருது, நான் அழுது.....

ஹெலோ, ஹெலோ... வச்சிட்டான். நல்லாருங்கப்பா.

ஓகே, அடுததது யாருக்கு பண்ணலாம்.......

வினோத்??? அடக்கடவுளே இந்த நாட்டாமையை எப்படி மறந்தேன்.
9.....9.....4.....4......4......X......X......X......X......X.,
(you don't have sufficiant balance to make a cal, pls recharge imm)

(என் கதை முடியும் நேரமிது, என்பதை சொல்லும் ராகமிது)

சார்... அந்த ரேடியோ பொட்டியை ஆப் பண்றீங்களா....

ஹேய் கட்டம் போட்ட சட்டை, என்ன பண்றே அங்க

(வந்துட்டாய்யா வந்துட்டாயா)

(தொடரும்)

கத போல தோணும் - 3

திடுக்க்க்க்க்க்க்க்க்க்க்

(பயப்படாதிங்க எழுந்திருச்சேன்)
அடடா டைம் 12 தானே ஆகுது, இந்த பொண்ணு வ்ர இன்னும் ஒரு மணி நேரமாகுமே, எப்படியாசும், டைம் ஓட்டனுமே,
என்னது வயித்துல ஒரே வலியா இருக்கே..............
அச்சச்சோ பசி. பசிக்குதே. இப்ப என்ன பண்றது. போய் ஒரு தம் போடலாமா. அடடா 3.50ரூபா தானே இருக்கு. கிங்ஸ் 4ரூ ஆச்சே.
கடன் சொல்லி அடிச்சிடலாமா. ஓகே துணிந்த பின் மனமே டோன் பீ வித் துயரம். கோ கெட் இட்)

ஏங்க ஒரு கிங்ஸ் கொடுங்க.

கிங்ஸ் இல்லங்க,

அப்போ வில்ஸ் தாங்க

அதுவும் இல்லீங்க.

அதுவும் இல்லீயா அப்போ பில்டர்?

சிசர் பில்டர்தான் இருக்குங்க

சிசர் பில்டர்ரா (அய்யய்யோ அது ரொம்ப நாறுமே. அந்த பொண்ணுக்கு பிடிக்காம போயி உன் கூட வ்ரமாட்டேனு சொன்னா நான் இவ்ளோ நேரம் வெயிட் பண்ணதுக்கு அர்த்தமே இல்லாம போய்டுமே.)
வேணாம் ஒரு டீ மட்டும் கொடுங்க.

பால் இல்ல சார்.

சுடுதண்ணியாச்சும் இருக்க்க்க்க்க்கா

சீமெண்ணெய் வாங்க போய் இருக்காங்க, கொஞ்ச நேரம் பொறுத்தா வந்துடும்.

முடியலை. வேற கடை எதுனாச்சும் இருக்கா பக்கத்திலே?

பக்கத்துல ஒரு கசாப்பு கடை இருக்குங்க.

கசாப்பு கடை... பக்கத்துல... நல்லா இருங்க. (போய் மறுபடி தூங்க வேண்டியதுதான்)

ஹலோ மிஸ்டர். ஹலோ..... ஹேய் கட்டம் போட்ட சட்டை உன்னைத்தான்.

(இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே) ஓ ஹாய். ஒரு மணிக்கு தானே வருவேனு சொன்னே. அதுக்குல்ல வந்துட்ட. (அப்பாடி ஒர் வ்ழியா க்ளோசா பேச ஆரம்பிச்சிட்டேன்)

லாஸ்ட் ப்ரீயட் கட் அடிச்சிட்டு, ஜன்னல எகிறி குதிச்சி வந்துட்டேன்.

எகிறி குதிச்சா(மேலும் கீழும் பார்த்தபடி) இந்த ட்ரெஸ்ல யா. பசங்க முன்னாடியேவா.

என் க்ளாஸ்ல பொண்ணுங்க மட்டும்தான். நோ பாய்ஸ்

(அப்பாடி)

அப்படி இருந்தா என்ன????

(ம்கூம். கடவுளே உப்பிலியப்பா, கண்ணு தொறந்தியே கொஞ்சம் நல்லா தொறக்கக்கூடாதா? )

(ரவுடி பொண்ணா இருக்கும் போல இருக்கே, கொஞ்சம் கேர்புல்லா இர்க்கனும்)
சரி சரி போலாமா

ம்ம். அதுக்கு முன்னாடி சாப்பிடனும். ஒரு நல்லா ஓட்டல்லா பார்த்து நிறுத்துங்க.

(ஊஊஉஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ)

(ஹோட்ட்டலில்)

ம்ம் என்ன சாப்பிடுறே, இட்லி, தோசை?


fool. மதியானதிலே இட்லி, தோசையா? வ்வே எவ சாப்பிடுவா. ஒரு சிக்கன் ப்ரியாணி + சிக்கன் 65 + ஒரு கோக் ஹால்ப் லிட்டர்

யாருக்கு பார்சல் வாங்குறீங்க.

பார்சல் இல்ல இப்ப இங்க சாப்பிட

(ராட்சசி) அவ்ளோதானே, வேற எதாவது வேணுமா

போதும், நான் டைட்ல இருக்கேன்.

இப்படி சாப்பிட்டா டைட்தான் ஆகும். யம்மா அது டயட்.

டங் சிலிப் ஆய்டுச்சி. நீ சாப்பிடலயா.

இல்ல இப்பத்தான் காலேஜ் பக்கத்து ஓட்டல்ல சாப்பிட்டேன். பசிக்கலை
(அதுக்கு வேற யாரு பில் கட்டுறது). நீ சாப்பிட்டிலிட்டு இரு நான் உடனே வந்துடுறேன். (வனையாச்சும் பிடிக்கனுமே உடனடியா)

உடனே நம்ம சால்ஸ்க்கு ஒரு காலை போடனும். 9...8.... 4...1...0....5....5...2...0....2.

நீங்கள் டயல் செய்த சந்தாதாரர் வேரொரு லயனில் பிசியாக இருக்கிரார்.
லயனிலேயே காத்திருக்கவும். அல்லது தொடர்பௌ துண்டித்து மீண்டும் முயற்ச்சி செய்யவும்ம்ம்ம்

(கோவிந்தா கோவிந்தா......)

தொடரும்ம்ம்