08 January 2010

சிறு(தொடர்)கதை - 4

நான்காம் அத்தியாயம்

4500ரூ சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த நாட்களில் நான்கு இட்லி 12.50ரூ, மதியம் சாப்பாடு 25ரூ, ஒரு சப்பாத்தி 3 வீதம் 21ரூ என ஒரு நாளுக்கு 60ரூ வீதம் மாதம் 1800ரூ செலவாகி கொண்டிருந்தது, வாடகை 800ரூ, பஸ் பாஸ் 600ரூ (இன்னும் கலைஞர் விலையேற்ற வில்லை இதை, அதற்கு அவருக்கு ஒரு நன்றி ) என மாதம் 3200 செலவு போக மிச்சமாகும் 1300ரூவில் குளியல், சலவை சோப்பிற்கு போக மீந்தும் 1000ரூபாவினை வீட்டிற்கு அனுப்பி வைத்து கொண்டிருந்தேன்.

2000ரூ சம்பளம் உயர்வு பெற்றது, எனது சில்லரை கனவுகளான சத்யமில் சினிமா, உயர்தர அசைவ ஹோட்டல் சாப்பாடு, குறந்த பட்சம் இரண்டு செட ஆடைகள், பேக்டரியில் தரும் குண்டு ஷீவை மாற்றி காதிம்ஸ் அல்லது பாட்டாவில் கட் ஷு போன்றவையை நிறைவேற்ற எண்ணியிருந்தேன்.

கல்யாண வேலைகளில் தேய்ந்து போன அம்மாவின் உடல் நலம் கெட்டுப்போனது, அம்மாவின் ரத்த வாந்தி செய்தியை கேட்டு கம்பெனியில் 2500ரூ அட்வான்சாக பெற்றுக்கொண்டு மீண்டும் ஊருக்கு சென்றேன். டி.பி எனும் காசநோயின் ஆரம்ப பிடிகளில் சிக்கிய எனது அம்மாவை மீட்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன். (அப்பாவின் மரணத்தின் போது ரத்த வாந்தி எடுத்தது நியாபகம் வந்தது. மறைத்திருக்கிறார் )

தொடர்ந்து ஆறுமாத காலத்திற்கு விடாமல் மருந்து உட்கொள்ள வேண்டும் என மருத்துவர் எச்சரித்தார். அம்மாவை தங்கையின் இல்லத்தில் விட்டு மீண்டும் சென்னை பயணமானேன், இம்முறை வீட்டிற்கு அனுப்பும் தொகை 3000ரூ உயர்ந்தது. சத்யம், உயர்ரக உணவுகள், துணிகள் கனவு அல்பாயிசில் மடிந்து போனது.

இதற்கிடையே உணவகங்களில் உணவுகளின் விலைப்பட்டியலையும் 2 மாதத்திற்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டும், அறையின் வாடகை உயர்த்தப்பட்டதும் வீட்டிற்கு அனுப்பும் தொகை 2000ரூக்கும் குறைவாகி போனது. தங்கையின் தலை தீபாவளிக்கு செல்ல முடியவில்லை. தெரிந்த நண்பரின் உதவியுடன் மாதம் 1100வீதம் 12 மாத தவணையில் 10000ரூ பெற்றேன் - 9500 தான் கிடைத்தது டாக்மெண்ட் சார்ஜ் என்று 500ரூபாயை எடுத்துக்கொண்டார்கள். நவம்ப மாத, டிசம்பர் மாத தவணையை நண்பரின் உதவியுடன் கட்டிமுடிக்கப்பட்டு விட்டது.

அடுத்த மாதம் முதல் சம்பளம் 6500ல் 1100 கழிந்து போகும். அம்மாவின் காச நோய்கான மருந்தை ஒரு மாதம் நிறுத்தியிருக்கிறார்கள் மருத்துவர் சொன்ன கெடு முடியும் முன்னரே. தீபாவளி சமையத்தில் மீண்டும் ரத்தவாந்தி, அதனாலேயே நண்பரிடம் கடன்வாங்க வேண்டியதாக போய்விட்டது.

இன்னும் நான்கு மாதத்றிற்கு தொடர்ந்து மருந்து எடுத்துகொள்ள வேண்டும் என மருத்துவர் மீண்டும் நாட்களை நீட்டித்துவிட்டார். இன்னும் என் சில்லரை கனவுகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒரு வருடம். தேவையற்ற போது ஓடிப்போகும் காலம், தேவைப்படும் போது ஊர்ந்து செல்கிறது.

இருட்டிவிட்டது, இன்னும் ஒரு சில மணி நேரம்தான்.

இன்று கடைசி முறையாக சேட்டு கடையில் 7 சப்பாத்தி. நாளை முதல் எல்லாமே குறைக்கனும். பசியை குறைக்கனும். முடியாவிட்டாலும் முயலவேண்டும். காலையில் இட்லி ஒரு வடை கட். 8.50காசு சேமிப்பு. மதியம் 30ரூ அளவுச்சாப்பாடு. 10ரூ சேமிப்பு. இரவு 4 சப்பாத்தி. ரூ15 சேமிப்பு. . 600ரூ பஸ் பாஸ் இனி இல்லை. 400ரூக்கு பாஸ் -200ரூ சேமிப்பு - இனி சாதாரண கூட்டம் நிரம்பி வழியும் பஸ் மட்டுமே(சென்னையில் எல்லா பேருந்துகளும் கூட்டம்தான், இரவு 10 மணி வரை, தானியங்கி திறக்கும் கதவுகள் கொண்ட டீலக்ஸ் பேருந்துகளே இந்த பாதையில் அதிகம், அதிக பட்சம் ஒரு மணி நேரத்தில் இரண்டு மூன்று சாதாரண பேருந்துகள், படிக்க்கட்டில் தொற்றிக்கொண்டு பயணிக்க வேண்டும் இனி, இல்லையென்றால் இரவு பத்து மணி மேல் )

வாடகையை குறைக்க முடியாது.

= 8.50 + 10 + 15

= 33.5 * 30

= 1005 + 200

= 1205ரூ இனி மாதந்தோறும் சேமிக்கும் தொகை.

ம்ம். மாத தவணை போக மீதம் 105ரூ.

ஊருக்கு அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்த சுந்தரேசன் கையை குலுக்கி புத்தாண்டு வாழ்த்து சொல்லிக்கொண்டு ஓடினான்.

இன்னும் சில மணி நேரம்தான், அடுத்த மேலும் ஒரு புதிய ஆண்டு பிறக்க இருக்கிறது.
மேன்சன்வாசிகளின் அறைகளில் கண்ணாடிகளின் சிணுங்கல்கள், எப் எம், டிவிகளின் அலறல்கள்
பெரிதாகத்தொடங்கியது. இன்னும் சில மணிநேரங்களில் உலகம் அழிந்து போகும் பதட்டம், பரபரப்பு எல்லாருடைய நடவடிக்கைகளிலும்.

சேட்டு கடை பூட்டியிருந்தது, நிறைய கடைகள் வழக்கத்துக்கு மாறாக வியாழன் இரவான இன்று பூட்டிக்கிடக்கின்றன, செல்போன் டீலர்ஸ் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சிம்கார்டினால் பசியை தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை. ஹோட்டல் கம்போர்ட் உங்களை அழைக்கிறது என்ற ஆங்கில வாசக தட்டி. கண்டிப்பாக என்னை அழைக்காது, அதற்கு குறைந்த பட்சம் மூன்று இலக்க மதிப்பு பணத்தை எதிர்பார்க்கும்.

ரோட்டோர ப்ளாட்பாரவாசிகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த மார்கழி குளிரை அலட்சியப்படுத்தி ப்ளாட்பாரங்களில் தூங்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு வெளிநாட்டு பயணி அந்த ப்ளாட்பாரவாசி பெண்களில் ஒருவளுக்கு ஆங்கில பத்திரிக்கையில் ஆங்கிலம் கற்றுதந்துக்கொண்டிருந்தார். இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை இன்று அதிகமாகத்தெரியிகிறது.
சில வாகனங்களில் பின் இறுக்கையில் ஆண்கள், பல இறுக்கைகளில் பெண்கள்.

ஹோட்டல் அன்னப்பூரணா...

என்ன வேணும்

சப்பாத்தி,

சப்பாத்திக்கு தனியா சைட் டிஷ் வாங்கனும்,

எவ்ளோ

45ரூ.

பரோட்டா இருக்கா,

எத்தனை

இதுக்கு சைட் டிஷ்,

இதுக்குலாம் இல்லை.

ஒரு பரோட்டா எவ்வளவு

14ரூ. இந்த கார்டுல போட்டிருக்கு, பார்த்துக்கோங்க

இரண்டு பரோட்டா

28ரூ பில் கொடுத்துவிட்டு வெளியேறினேன், பெட்டிக்கடையில் இரண்டு பழம் வாங்கி கொண்டு
நேராக அறைக்கு திரும்பினேன் நேரம் 10.30 என்று காட்டிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு அறைகளிலும் புத்தாண்டு கொண்டாட்ட குதூகலம்.

2009ற்கும் 2010ற்கும் எனக்கு வித்தியாசம்.

மெல்லிய பசி. தூக்கத்தை உறுத்திக்கொண்டிருந்தது. விளக்கணைத்துவிட்டேன்.

முற்றும்

சிறு(தொடர்)கதை - 3

மூன்றாம் அத்தியாயம்

நண்பர்களது எந்தவொரு ஊக்குவிப்பையும் செயல்படுத்தாமுடியாமல் ஒன்று தடுத்தது, சமீபகாலங்களில்தான் அதற்கும் ஒரு பெயர் உண்டு என்பதை அறிந்துகொண்டேன்.

நாளிடைவில் அவளது வருகை குறைய தொடங்கியது. அவள் வராத நாட்களில் பசியின் இடம் மாறிப்போனது. வலி மட்டும் மாறாமலே இருந்தது. இரவு தூக்கம் நள்ளிரவை தாண்டியே தொடங்கியது. எலும்புக்கூடாக மாறிக்கொண்டிருந்தேன். சில தினங்களில் அவளது சிறிய அத்தியாயம் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவளை வேறொருவருடன் மெரினாவில் பார்த்ததும் முற்றுப்பெற்று போனது.

மீண்டும் அதே வேலை, அதே சம்பளம், அதே செலவு. நாளிடைவில் அவளிடம் தோற்றுப்போனதும் மீண்டும் பசியிடம் தோற்க ஆரம்பித்தேன்.

என்னுடன் ஐடிஐயில் ஒன்றாக படித்த சுந்தர், எதோ ஒரு இழையை கைகளில் வைத்து நம்பியார் போல பிசைந்து அதை பீடியிலே வைத்து சுருட்டி புகைக்கும் போது “ டேய் மனுசன் எதுக்குடா உயிர் வாழ்றான். என்று அவனே கேள்வி கேட்டு அவனே பதிலும் சொல்லுவான், அவன் சொல்லுவது ஒன்று சாப்பாடு, மற்றொன்றை அவன் இதுவரை சொன்னதே இல்லை, அதற்கு பதிலாக சிரிப்பு மட்டுமே வரும் அவனிடம் இருந்து, நாள் பூரா சிரித்துகொண்டே இருப்பான்,

மேன்சனில் வாழ்ந்த 48 வயது அருள்தாஸ் சொல்லிதான் இரண்டாவதை புரிந்து கொண்டேன் 10 வருடங்கள் களித்து. அருள்தாஸ் கவிதை, கதை எதாச்சிம் கிறுக்கி கொண்டிருப்பார், ஊரில் அப்பா, அம்மா இன்னும் இவரின் அண்ணாவின் பாதுகாப்பில்தான். அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே நாளில் திருமணம், அண்ணனுக்கு பெண் பார்க்க போன போது அந்த இடத்திலே பெண்ணின் தங்கைக்கும் அருள்தாசுக்கும் நிச்சயிக்கப்பட்டு ஒரே நாளில் இரண்டு திருமணமும் நடந்தேறியது.

திருமணமான இரண்டாவது வாரம் , அந்தப்பெண் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். அவமானம் தாங்காமல் சென்னை ஓடி வந்துவிட்டார் அருள்தாஸ், 25 வருடங்களாக சென்னையிலே பிரம்ச்சர்யம். சென்னையிலே எந்தெந்த இடத்தில் என்ன இருக்கும் என்பது இவருக்கு அத்துப்படி. மாடி ரூம் சுந்தரேசன், தனது மார்கெட்டிங்க் ஆர்டர்களை பிடிக்க இவரைத்தான் பயன்படுத்திக்கொள்கிறான், கமிசனே 5000ரூ வாங்கி விடுவார் அருள்தாஸ்.

சினிமாத்துறையில் ஆல் இன் ஆல், ஒரு முறை ஜெயிலுக்கும் போய் வந்தாயிற்று, சென்னை செண்ட்ரல் ஜெயிலுக்கு கடைசியா போனது நாந்தான்னு சொல்லி பெருமையடித்துக்கொள்வார்.

இருட்டையும், பனியையும் தின்று தீர்த்தன் சூரியன் நடு உச்சியில் பெருமூச்சி விட்டுக்கொண்டிருந்தது. இன்று வாராந்திர விடுமுறை, ஒவ்வொரு வியாழனும் விடுமுறை. இது ஒரு வகையில் எனக்கு நல்லதாகவேபட்டது, மேன்சன் நண்பர்கள், என்னை ஞாயிறுகளில் சினிமாவிற்கு அழைக்கமாட்டார்கள். எனக்காக செலவழிக்க அவர்கள் முற்படலாம், இப்போது இருக்கும் மரியாதையும் அப்போ இருக்குமா என்ற பயம்.

கர்ணனை போல் துரியோதனர்களுக்கு நன்றிக்கடன்பட நான் விரும்பவில்லை.

முன்பு அவர்கள்தான் என் காலை வேளை தேனீர் ஆசையை இலவசமாக தீர்த்து வைப்பவர்கள்.
அருகில் இருக்கும் கடைகளுக்கு செல்லாமல் எப்போதும் தொலைவில் உள்ள கிருஷ்ணன் கடைக்கே செல்லுவது வாடிக்கை, காலை நேர நடைபயிற்சி என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
நாளிடையில் எனக்கு புரிய ஆரம்பித்தது. அப்போதெல்லாம் அவர்கள் எழுப்பும் முன் தயாராக இருப்பேன். நடுவில் சொந்த கிராமத்துக்கு சென்று வந்தேன்.

என் தங்கைதான் வாசல் தெளித்து கோலமிட்டு கொண்டிருப்பாள். அவர்களுடன் தேனீர் குடிக்க செல்லுவதை நிறுத்திக்கொண்டேன். ஒரு நாள் கீழ் அறை ராஜூ ஏன் என்று கேட்ட பொழுது அவனிடம் மட்டும் சொன்னேன். எங்கள் வீட்டுல வேலைக்கார கிழவிதான் கோலம் போடும்னு அலறலாக சிரித்தான்.

மனிதர்களுக்கு என்றே பிரத்யேகமான உணர்வு சிரிப்பு. காரணங்கள் மட்டும்தான் வெவ்வேறாக இருக்கின்றன. அருள்தாஸ் ஒரு முறை குரங்குகளும் சிரிக்கும் என்று சொன்னது நியாபகம் வந்தது. நானும் சிரித்தேன்.

வேலை நாட்களை விட விடுமுறை தினத்து பசி மென்மையானது. பாக்டரி அருகில் இருக்கும் ஒரே ஒரு ஹோட்டலில் புதுப்பட சினிமாவிற்கு போவது போல் கூட்டதை மீறி சென்று சாப்பிட அமரவேண்டும், அந்த போராட்டத்திலேயே பசியின் வலி உச்சமடையும். சாம்பார், காரக்குழம்பு, ரசம் முடித்து மோர் சாதத்திற்கு வரும் முன்னரே அடுத்த பந்திக்கு தயாராவதற்காக நம்மையே வெரித்து பார்த்து பலர் இருப்பார்கள், ஆரம்ப காலங்களில் மோரை புறக்கணித்து எழுந்துவிடுவேன், இப்போது பழகிவிட்டது.

விடுமுறை தினங்களில் எந்த பிக்கல் பிடுங்களும் இல்லாமல் திருவல்லிக்கேணி ஆந்திரா சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கலாம். முன்பெல்லாம் ஆந்திரஹோட்டலில் வேலை செய்யும் சிறுவர்கள் ஆம்ப்லேட் வேணுமான்னா, முட்டைபொறியல் வேணுமா, சிக்கன் வேணுமா என்று கேட்டுத்துளைப்பார்கள், இப்போது யாரும் கேட்பது இல்லை, ஒவ்வொரு மாத சம்பள தினத்திலும் இன்னு சிக்கன் சாப்பிடனும்னு வைராக்கியமாக கிளம்புவேன். சிக்கன் விலை 100கிராம். 40ரூ என்பதை பார்த்ததும்
வைராக்கியம் பொடிப்பொடியாகி இருக்கும்.

தங்கைக்கு சென்ற வருடத்தின் மத்தியில் திருமணம் நடந்தேறியது. எங்கள் அய்யா ரத்தவாந்தி எடுத்த சில தினங்களில் அமரராகி போனார், அவரது எல் ஐ சி பாலிசியில் கிடைத்த பணத்தை கொண்டு 5 பவுன், 10000 ரொக்கத்தில் எங்கள் சொந்தத்திலேயே- அப்பாவின் தங்கை - திருமணம் நடத்தி கொடுத்துவிட்டோம். திருமணத்தில் என்னுடைய பணம் முழுவதும் கரைந்து போனது, ஊருக்கு திரும்ப பணமில்லாமல் அம்மாவின் உதவியை நாடினேன். அம்மா வீட்டில் எதையும் விற்க முடியுமா என்று தேடிக்கொண்டிருந்தார்கள், தங்கையின் மூலம் இதை அறிந்த அத்தை மகன் தனியாக என்னை அழைத்து 1000ரூ கொடுத்துதவினான், அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்ட சுயமரியாதை அவன் காலடியில் போட்டு அழத்துவங்கி விட்டேன். நீண்ட கதறலுக்கு பின்பே இயல்பாகி போனேன்.

சென்னை திரும்பியதும் முதல் முறையாக கிங்பிஷரும் சிக்கனும் உள்ளே போனது. தங்கையின் கணவரால் வரதட்சனை பிரச்சனை வராது என்ற நம்பிக்கையினால் வந்த சந்தோசத்திலும், 2000ரூ சம்பள உயர்வு - என்னுடைய சகாக்களுக்கு 1000ரூதான்- பெற்றதாலும் கிடைத்த சந்தோசத்திலும், தங்கையின் கணவர் - அத்தை மகன் - தந்த 1000ரூபாயில் 70ரூ டாஸ்மாக்ல் பீருக்கும், 50ரூ ஆந்திரா மெஸ் சிக்கனுக்கும் 30ரூ ஆறு பரோட்டாவுக்கும் செலவானது. 4500ரூபாயில் ஆரம்பித்த சென்னை வாழ்க்கை இரண்டு வருடங்கள் களித்து 6500ரூ ஆகிப்போன குஷியிலும், பீரின் குளுமையிலும்
அன்று இரவு நன்றாக தூங்கி போனேன்.

மாதம் இனி இரண்டாயிரம் என் சேமிப்பு. ஐந்து மாதத்தில் சில ஆயிரங்களுக்கு சொந்தக்காரன் என்ற
நினைப்பே மேலும் போதையூட்டியது.

அடுத்து சிலநாட்களில் எனது போதை தெளிந்து போனது, போதை தெளிந்தால் தலைவலி நிச்சயம்.

நெறுக்க ஆரம்பித்தது


(தொடரும்ம்ம்)