08 January 2010

சிறு(தொடர்)கதை - 4

நான்காம் அத்தியாயம்

4500ரூ சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த நாட்களில் நான்கு இட்லி 12.50ரூ, மதியம் சாப்பாடு 25ரூ, ஒரு சப்பாத்தி 3 வீதம் 21ரூ என ஒரு நாளுக்கு 60ரூ வீதம் மாதம் 1800ரூ செலவாகி கொண்டிருந்தது, வாடகை 800ரூ, பஸ் பாஸ் 600ரூ (இன்னும் கலைஞர் விலையேற்ற வில்லை இதை, அதற்கு அவருக்கு ஒரு நன்றி ) என மாதம் 3200 செலவு போக மிச்சமாகும் 1300ரூவில் குளியல், சலவை சோப்பிற்கு போக மீந்தும் 1000ரூபாவினை வீட்டிற்கு அனுப்பி வைத்து கொண்டிருந்தேன்.

2000ரூ சம்பளம் உயர்வு பெற்றது, எனது சில்லரை கனவுகளான சத்யமில் சினிமா, உயர்தர அசைவ ஹோட்டல் சாப்பாடு, குறந்த பட்சம் இரண்டு செட ஆடைகள், பேக்டரியில் தரும் குண்டு ஷீவை மாற்றி காதிம்ஸ் அல்லது பாட்டாவில் கட் ஷு போன்றவையை நிறைவேற்ற எண்ணியிருந்தேன்.

கல்யாண வேலைகளில் தேய்ந்து போன அம்மாவின் உடல் நலம் கெட்டுப்போனது, அம்மாவின் ரத்த வாந்தி செய்தியை கேட்டு கம்பெனியில் 2500ரூ அட்வான்சாக பெற்றுக்கொண்டு மீண்டும் ஊருக்கு சென்றேன். டி.பி எனும் காசநோயின் ஆரம்ப பிடிகளில் சிக்கிய எனது அம்மாவை மீட்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன். (அப்பாவின் மரணத்தின் போது ரத்த வாந்தி எடுத்தது நியாபகம் வந்தது. மறைத்திருக்கிறார் )

தொடர்ந்து ஆறுமாத காலத்திற்கு விடாமல் மருந்து உட்கொள்ள வேண்டும் என மருத்துவர் எச்சரித்தார். அம்மாவை தங்கையின் இல்லத்தில் விட்டு மீண்டும் சென்னை பயணமானேன், இம்முறை வீட்டிற்கு அனுப்பும் தொகை 3000ரூ உயர்ந்தது. சத்யம், உயர்ரக உணவுகள், துணிகள் கனவு அல்பாயிசில் மடிந்து போனது.

இதற்கிடையே உணவகங்களில் உணவுகளின் விலைப்பட்டியலையும் 2 மாதத்திற்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டும், அறையின் வாடகை உயர்த்தப்பட்டதும் வீட்டிற்கு அனுப்பும் தொகை 2000ரூக்கும் குறைவாகி போனது. தங்கையின் தலை தீபாவளிக்கு செல்ல முடியவில்லை. தெரிந்த நண்பரின் உதவியுடன் மாதம் 1100வீதம் 12 மாத தவணையில் 10000ரூ பெற்றேன் - 9500 தான் கிடைத்தது டாக்மெண்ட் சார்ஜ் என்று 500ரூபாயை எடுத்துக்கொண்டார்கள். நவம்ப மாத, டிசம்பர் மாத தவணையை நண்பரின் உதவியுடன் கட்டிமுடிக்கப்பட்டு விட்டது.

அடுத்த மாதம் முதல் சம்பளம் 6500ல் 1100 கழிந்து போகும். அம்மாவின் காச நோய்கான மருந்தை ஒரு மாதம் நிறுத்தியிருக்கிறார்கள் மருத்துவர் சொன்ன கெடு முடியும் முன்னரே. தீபாவளி சமையத்தில் மீண்டும் ரத்தவாந்தி, அதனாலேயே நண்பரிடம் கடன்வாங்க வேண்டியதாக போய்விட்டது.

இன்னும் நான்கு மாதத்றிற்கு தொடர்ந்து மருந்து எடுத்துகொள்ள வேண்டும் என மருத்துவர் மீண்டும் நாட்களை நீட்டித்துவிட்டார். இன்னும் என் சில்லரை கனவுகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒரு வருடம். தேவையற்ற போது ஓடிப்போகும் காலம், தேவைப்படும் போது ஊர்ந்து செல்கிறது.

இருட்டிவிட்டது, இன்னும் ஒரு சில மணி நேரம்தான்.

இன்று கடைசி முறையாக சேட்டு கடையில் 7 சப்பாத்தி. நாளை முதல் எல்லாமே குறைக்கனும். பசியை குறைக்கனும். முடியாவிட்டாலும் முயலவேண்டும். காலையில் இட்லி ஒரு வடை கட். 8.50காசு சேமிப்பு. மதியம் 30ரூ அளவுச்சாப்பாடு. 10ரூ சேமிப்பு. இரவு 4 சப்பாத்தி. ரூ15 சேமிப்பு. . 600ரூ பஸ் பாஸ் இனி இல்லை. 400ரூக்கு பாஸ் -200ரூ சேமிப்பு - இனி சாதாரண கூட்டம் நிரம்பி வழியும் பஸ் மட்டுமே(சென்னையில் எல்லா பேருந்துகளும் கூட்டம்தான், இரவு 10 மணி வரை, தானியங்கி திறக்கும் கதவுகள் கொண்ட டீலக்ஸ் பேருந்துகளே இந்த பாதையில் அதிகம், அதிக பட்சம் ஒரு மணி நேரத்தில் இரண்டு மூன்று சாதாரண பேருந்துகள், படிக்க்கட்டில் தொற்றிக்கொண்டு பயணிக்க வேண்டும் இனி, இல்லையென்றால் இரவு பத்து மணி மேல் )

வாடகையை குறைக்க முடியாது.

= 8.50 + 10 + 15

= 33.5 * 30

= 1005 + 200

= 1205ரூ இனி மாதந்தோறும் சேமிக்கும் தொகை.

ம்ம். மாத தவணை போக மீதம் 105ரூ.

ஊருக்கு அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்த சுந்தரேசன் கையை குலுக்கி புத்தாண்டு வாழ்த்து சொல்லிக்கொண்டு ஓடினான்.

இன்னும் சில மணி நேரம்தான், அடுத்த மேலும் ஒரு புதிய ஆண்டு பிறக்க இருக்கிறது.
மேன்சன்வாசிகளின் அறைகளில் கண்ணாடிகளின் சிணுங்கல்கள், எப் எம், டிவிகளின் அலறல்கள்
பெரிதாகத்தொடங்கியது. இன்னும் சில மணிநேரங்களில் உலகம் அழிந்து போகும் பதட்டம், பரபரப்பு எல்லாருடைய நடவடிக்கைகளிலும்.

சேட்டு கடை பூட்டியிருந்தது, நிறைய கடைகள் வழக்கத்துக்கு மாறாக வியாழன் இரவான இன்று பூட்டிக்கிடக்கின்றன, செல்போன் டீலர்ஸ் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சிம்கார்டினால் பசியை தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை. ஹோட்டல் கம்போர்ட் உங்களை அழைக்கிறது என்ற ஆங்கில வாசக தட்டி. கண்டிப்பாக என்னை அழைக்காது, அதற்கு குறைந்த பட்சம் மூன்று இலக்க மதிப்பு பணத்தை எதிர்பார்க்கும்.

ரோட்டோர ப்ளாட்பாரவாசிகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த மார்கழி குளிரை அலட்சியப்படுத்தி ப்ளாட்பாரங்களில் தூங்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு வெளிநாட்டு பயணி அந்த ப்ளாட்பாரவாசி பெண்களில் ஒருவளுக்கு ஆங்கில பத்திரிக்கையில் ஆங்கிலம் கற்றுதந்துக்கொண்டிருந்தார். இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை இன்று அதிகமாகத்தெரியிகிறது.
சில வாகனங்களில் பின் இறுக்கையில் ஆண்கள், பல இறுக்கைகளில் பெண்கள்.

ஹோட்டல் அன்னப்பூரணா...

என்ன வேணும்

சப்பாத்தி,

சப்பாத்திக்கு தனியா சைட் டிஷ் வாங்கனும்,

எவ்ளோ

45ரூ.

பரோட்டா இருக்கா,

எத்தனை

இதுக்கு சைட் டிஷ்,

இதுக்குலாம் இல்லை.

ஒரு பரோட்டா எவ்வளவு

14ரூ. இந்த கார்டுல போட்டிருக்கு, பார்த்துக்கோங்க

இரண்டு பரோட்டா

28ரூ பில் கொடுத்துவிட்டு வெளியேறினேன், பெட்டிக்கடையில் இரண்டு பழம் வாங்கி கொண்டு
நேராக அறைக்கு திரும்பினேன் நேரம் 10.30 என்று காட்டிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு அறைகளிலும் புத்தாண்டு கொண்டாட்ட குதூகலம்.

2009ற்கும் 2010ற்கும் எனக்கு வித்தியாசம்.

மெல்லிய பசி. தூக்கத்தை உறுத்திக்கொண்டிருந்தது. விளக்கணைத்துவிட்டேன்.

முற்றும்

சிறு(தொடர்)கதை - 3

மூன்றாம் அத்தியாயம்

நண்பர்களது எந்தவொரு ஊக்குவிப்பையும் செயல்படுத்தாமுடியாமல் ஒன்று தடுத்தது, சமீபகாலங்களில்தான் அதற்கும் ஒரு பெயர் உண்டு என்பதை அறிந்துகொண்டேன்.

நாளிடைவில் அவளது வருகை குறைய தொடங்கியது. அவள் வராத நாட்களில் பசியின் இடம் மாறிப்போனது. வலி மட்டும் மாறாமலே இருந்தது. இரவு தூக்கம் நள்ளிரவை தாண்டியே தொடங்கியது. எலும்புக்கூடாக மாறிக்கொண்டிருந்தேன். சில தினங்களில் அவளது சிறிய அத்தியாயம் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவளை வேறொருவருடன் மெரினாவில் பார்த்ததும் முற்றுப்பெற்று போனது.

மீண்டும் அதே வேலை, அதே சம்பளம், அதே செலவு. நாளிடைவில் அவளிடம் தோற்றுப்போனதும் மீண்டும் பசியிடம் தோற்க ஆரம்பித்தேன்.

என்னுடன் ஐடிஐயில் ஒன்றாக படித்த சுந்தர், எதோ ஒரு இழையை கைகளில் வைத்து நம்பியார் போல பிசைந்து அதை பீடியிலே வைத்து சுருட்டி புகைக்கும் போது “ டேய் மனுசன் எதுக்குடா உயிர் வாழ்றான். என்று அவனே கேள்வி கேட்டு அவனே பதிலும் சொல்லுவான், அவன் சொல்லுவது ஒன்று சாப்பாடு, மற்றொன்றை அவன் இதுவரை சொன்னதே இல்லை, அதற்கு பதிலாக சிரிப்பு மட்டுமே வரும் அவனிடம் இருந்து, நாள் பூரா சிரித்துகொண்டே இருப்பான்,

மேன்சனில் வாழ்ந்த 48 வயது அருள்தாஸ் சொல்லிதான் இரண்டாவதை புரிந்து கொண்டேன் 10 வருடங்கள் களித்து. அருள்தாஸ் கவிதை, கதை எதாச்சிம் கிறுக்கி கொண்டிருப்பார், ஊரில் அப்பா, அம்மா இன்னும் இவரின் அண்ணாவின் பாதுகாப்பில்தான். அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே நாளில் திருமணம், அண்ணனுக்கு பெண் பார்க்க போன போது அந்த இடத்திலே பெண்ணின் தங்கைக்கும் அருள்தாசுக்கும் நிச்சயிக்கப்பட்டு ஒரே நாளில் இரண்டு திருமணமும் நடந்தேறியது.

திருமணமான இரண்டாவது வாரம் , அந்தப்பெண் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். அவமானம் தாங்காமல் சென்னை ஓடி வந்துவிட்டார் அருள்தாஸ், 25 வருடங்களாக சென்னையிலே பிரம்ச்சர்யம். சென்னையிலே எந்தெந்த இடத்தில் என்ன இருக்கும் என்பது இவருக்கு அத்துப்படி. மாடி ரூம் சுந்தரேசன், தனது மார்கெட்டிங்க் ஆர்டர்களை பிடிக்க இவரைத்தான் பயன்படுத்திக்கொள்கிறான், கமிசனே 5000ரூ வாங்கி விடுவார் அருள்தாஸ்.

சினிமாத்துறையில் ஆல் இன் ஆல், ஒரு முறை ஜெயிலுக்கும் போய் வந்தாயிற்று, சென்னை செண்ட்ரல் ஜெயிலுக்கு கடைசியா போனது நாந்தான்னு சொல்லி பெருமையடித்துக்கொள்வார்.

இருட்டையும், பனியையும் தின்று தீர்த்தன் சூரியன் நடு உச்சியில் பெருமூச்சி விட்டுக்கொண்டிருந்தது. இன்று வாராந்திர விடுமுறை, ஒவ்வொரு வியாழனும் விடுமுறை. இது ஒரு வகையில் எனக்கு நல்லதாகவேபட்டது, மேன்சன் நண்பர்கள், என்னை ஞாயிறுகளில் சினிமாவிற்கு அழைக்கமாட்டார்கள். எனக்காக செலவழிக்க அவர்கள் முற்படலாம், இப்போது இருக்கும் மரியாதையும் அப்போ இருக்குமா என்ற பயம்.

கர்ணனை போல் துரியோதனர்களுக்கு நன்றிக்கடன்பட நான் விரும்பவில்லை.

முன்பு அவர்கள்தான் என் காலை வேளை தேனீர் ஆசையை இலவசமாக தீர்த்து வைப்பவர்கள்.
அருகில் இருக்கும் கடைகளுக்கு செல்லாமல் எப்போதும் தொலைவில் உள்ள கிருஷ்ணன் கடைக்கே செல்லுவது வாடிக்கை, காலை நேர நடைபயிற்சி என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
நாளிடையில் எனக்கு புரிய ஆரம்பித்தது. அப்போதெல்லாம் அவர்கள் எழுப்பும் முன் தயாராக இருப்பேன். நடுவில் சொந்த கிராமத்துக்கு சென்று வந்தேன்.

என் தங்கைதான் வாசல் தெளித்து கோலமிட்டு கொண்டிருப்பாள். அவர்களுடன் தேனீர் குடிக்க செல்லுவதை நிறுத்திக்கொண்டேன். ஒரு நாள் கீழ் அறை ராஜூ ஏன் என்று கேட்ட பொழுது அவனிடம் மட்டும் சொன்னேன். எங்கள் வீட்டுல வேலைக்கார கிழவிதான் கோலம் போடும்னு அலறலாக சிரித்தான்.

மனிதர்களுக்கு என்றே பிரத்யேகமான உணர்வு சிரிப்பு. காரணங்கள் மட்டும்தான் வெவ்வேறாக இருக்கின்றன. அருள்தாஸ் ஒரு முறை குரங்குகளும் சிரிக்கும் என்று சொன்னது நியாபகம் வந்தது. நானும் சிரித்தேன்.

வேலை நாட்களை விட விடுமுறை தினத்து பசி மென்மையானது. பாக்டரி அருகில் இருக்கும் ஒரே ஒரு ஹோட்டலில் புதுப்பட சினிமாவிற்கு போவது போல் கூட்டதை மீறி சென்று சாப்பிட அமரவேண்டும், அந்த போராட்டத்திலேயே பசியின் வலி உச்சமடையும். சாம்பார், காரக்குழம்பு, ரசம் முடித்து மோர் சாதத்திற்கு வரும் முன்னரே அடுத்த பந்திக்கு தயாராவதற்காக நம்மையே வெரித்து பார்த்து பலர் இருப்பார்கள், ஆரம்ப காலங்களில் மோரை புறக்கணித்து எழுந்துவிடுவேன், இப்போது பழகிவிட்டது.

விடுமுறை தினங்களில் எந்த பிக்கல் பிடுங்களும் இல்லாமல் திருவல்லிக்கேணி ஆந்திரா சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கலாம். முன்பெல்லாம் ஆந்திரஹோட்டலில் வேலை செய்யும் சிறுவர்கள் ஆம்ப்லேட் வேணுமான்னா, முட்டைபொறியல் வேணுமா, சிக்கன் வேணுமா என்று கேட்டுத்துளைப்பார்கள், இப்போது யாரும் கேட்பது இல்லை, ஒவ்வொரு மாத சம்பள தினத்திலும் இன்னு சிக்கன் சாப்பிடனும்னு வைராக்கியமாக கிளம்புவேன். சிக்கன் விலை 100கிராம். 40ரூ என்பதை பார்த்ததும்
வைராக்கியம் பொடிப்பொடியாகி இருக்கும்.

தங்கைக்கு சென்ற வருடத்தின் மத்தியில் திருமணம் நடந்தேறியது. எங்கள் அய்யா ரத்தவாந்தி எடுத்த சில தினங்களில் அமரராகி போனார், அவரது எல் ஐ சி பாலிசியில் கிடைத்த பணத்தை கொண்டு 5 பவுன், 10000 ரொக்கத்தில் எங்கள் சொந்தத்திலேயே- அப்பாவின் தங்கை - திருமணம் நடத்தி கொடுத்துவிட்டோம். திருமணத்தில் என்னுடைய பணம் முழுவதும் கரைந்து போனது, ஊருக்கு திரும்ப பணமில்லாமல் அம்மாவின் உதவியை நாடினேன். அம்மா வீட்டில் எதையும் விற்க முடியுமா என்று தேடிக்கொண்டிருந்தார்கள், தங்கையின் மூலம் இதை அறிந்த அத்தை மகன் தனியாக என்னை அழைத்து 1000ரூ கொடுத்துதவினான், அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்ட சுயமரியாதை அவன் காலடியில் போட்டு அழத்துவங்கி விட்டேன். நீண்ட கதறலுக்கு பின்பே இயல்பாகி போனேன்.

சென்னை திரும்பியதும் முதல் முறையாக கிங்பிஷரும் சிக்கனும் உள்ளே போனது. தங்கையின் கணவரால் வரதட்சனை பிரச்சனை வராது என்ற நம்பிக்கையினால் வந்த சந்தோசத்திலும், 2000ரூ சம்பள உயர்வு - என்னுடைய சகாக்களுக்கு 1000ரூதான்- பெற்றதாலும் கிடைத்த சந்தோசத்திலும், தங்கையின் கணவர் - அத்தை மகன் - தந்த 1000ரூபாயில் 70ரூ டாஸ்மாக்ல் பீருக்கும், 50ரூ ஆந்திரா மெஸ் சிக்கனுக்கும் 30ரூ ஆறு பரோட்டாவுக்கும் செலவானது. 4500ரூபாயில் ஆரம்பித்த சென்னை வாழ்க்கை இரண்டு வருடங்கள் களித்து 6500ரூ ஆகிப்போன குஷியிலும், பீரின் குளுமையிலும்
அன்று இரவு நன்றாக தூங்கி போனேன்.

மாதம் இனி இரண்டாயிரம் என் சேமிப்பு. ஐந்து மாதத்தில் சில ஆயிரங்களுக்கு சொந்தக்காரன் என்ற
நினைப்பே மேலும் போதையூட்டியது.

அடுத்து சிலநாட்களில் எனது போதை தெளிந்து போனது, போதை தெளிந்தால் தலைவலி நிச்சயம்.

நெறுக்க ஆரம்பித்தது


(தொடரும்ம்ம்)

31 December 2009

சிறு(தொடர்)கதை - 2

இரண்டாம் அத்தியாயம்


எனது மாத சேமிப்பு 50-100ல் ஒரு 10 ரூபாயை இழந்த நாள் அது. பாக்டரியில் வேலை நேரம் 8.30 முதல் 5 மணி வரை. ஆனால் 5 மணியில் கிளம்புவது என்பது சிரமமான ஒன்று. கண்காணிப்பாளரின் அனுமதி கிடைத்தால் சாத்தியப்படும். அதிகபட்சம் மாதம் இரு நாட்கள் 5 மணிக்கே பாக்டரியில் இருந்து வெளியேற அனுமதி கிடைக்கலாம். மற்ற்படி 7 முதல் 8 வரை கூட பணி இருக்க நேரிடும்.
இரண்டு டீ, நான்கு உப்புபெறாத உப்பு பிஸ்கெட் கிடைப்பது மட்டுமே ஓவர்ர் டைம் பரிசு.

அன்றைய தினம் வழக்கத்துக்கு மாறாக 10ஐ நெருங்கிவிட்டது. எனது அலாரம் அடிக்க ஆரம்பித்து ஒரு மணி நேரமாகிவிட்டிருந்தது. எத்தனை லிட்டர் தண்ணியாலும் அந்த அலாரத்தை நிறுத்த முடியாமல் தோற்று போனது. டெஸ்பேட்ச் நாட்களில் 9 மணி தொடுமென்றாலும், அன்று அதிகபடியான டெஸ்பேட்சின் காரணமாக நேரம் அதிகரித்துவிட்டது. கடைசி பேருந்து 10.30 என்பது அலாரத்தின் அலறல் என் காதில் மேலும் அதிகமாக கேட்க வைத்தது. ஒரு வழியாக பணி மேற்பார்வையாளர் பிச்சை போடும் முகபாவத்தோடு கிளம்ப அனுமதி தந்தார். எல்லாம் முடித்துக்கொண்டு அறை வரும்போதே எஸ் எஸ் ம்யூசிக் சானலின் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் முடிந்து போய் ஒரு மணி நேரம் மேல் ஆனதை அடுத்த அறை 45 வயசு பிரம்மச்சாரி முருகேசனின் குறைட்டையில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

பசி, பயணம், வேளை பளு என்று எல்லாம் சேர்ந்து என்னை ஈவு இரக்கமில்லாமல் அடித்து போட்டது. அசதியில் அடுத்த நிமிடமே உறங்கி போனேன். தூக்கம் ஒரு நல்ல பொழுது போக்கு. கண்களை திறந்து கொண்ட கனவுகளையே கண்டிருக்கிறேன், தூக்கத்தில் கனவுகளை கண்டதில்லை அல்லது நியாபகம் வந்ததில்லை. என்றும் என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பி விடும் பசி அலாரத்தை முந்திக்கொண்டது அதிகாலை கனவு ஒன்று. கீழ் அறை ராஜூக்கு கனவில் அடிக்கடி நடிகைகள்தான் வருவார்களாம். எதோ நிஜமாகவே வந்துவிட்டதை போன்ற குதுகலிப்பான். ஏனோ எனக்கு கனவுகள் வருவதில்லை. வந்த அந்த கனவும் நடிகைகள் வரவில்லை. வந்தது ஒரு நடக்கடலில் ஒரு மரக்கலம் ஒற்றை துடுப்புடன்.

எதோ ஒரு கவிஞருக்கு போக வேண்டிய கனவு வழி தவறி எனக்கு வந்துவிட்டது போலும். அதிகாலை கனவு பலிக்குமாம். ஒரு வேளை கடல் தாண்டி பயணிப்பேனோ வழியில் எதும் கப்பலோ, விமானமோ நொருங்கி விழுந்து தண்ணீரில் தத்தளிப்பேனோ என்றெல்லாம் விபரீத கற்பனைகளாளும் காலை அலாரத்தை நிறுத்த முடியவில்லை. வழக்கமான சிற்றுண்டிக்கு பிறகு பேருந்து நிறுத்தம் வந்ததும்தான் நினைவுக்கு வந்தது பஸ் பாஸ் மறந்து போனதை. ம்ம் இன்று ஒரு அநாவசிய நட்டம்.

பாஸ் இருக்கும் நாட்களில் கண்டக்டரை தேடி கூட்டத்தில் நகர அவசியமில்லை, அவர் வந்து சோதிக்கும் போது நீட்டினால் போதும். பேருந்து நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. சென்னை எல்லா மாதமும் சித்திரைதான். எப்போது பெண்கள் வரிசையில் ஏறும் வழியிலேயே நடத்துனரின் இருக்கை இருக்கும். அதனால் பெண்கள் பகுதியில் கொடுத்து கண்காணிப்பதே ஷேமம்.

எதோ ஒரு பெண்மணியிடம் காசை தந்து பயணச்சீட்டுக்காக காத்திருக்கையிலே பின்னாளில் இருந்து ஒரு குரல். குரல் திசையை நோக்கி நான். அந்த குரல் என்னை கவரவில்லை. அவளும் என்னை கவரவில்லை. 4.50 ஒன்னு என்றாள். கையில் கைபை. கூட்டத்தில் ஒரு கையில் பாலன்ஸ் செய்து கொண்டு ஒரு கையால் ஒரு 5ரூபாய் நீட்டிக்கொண்டிருந்தாள். வாங்கி கொண்டு ஒரிரு நொடிகள் அவளை நோக்கினேன். சாத்தானின் பார்வை. உடையை சரி செய்து கொண்டால். எதையோ மிதித்தது போல் இருந்தது. அறை எண் 18 தாமு அதைதான் கடவுள் தரிசனம் என்பான். 36 வயது பிரம்மச்சாரி. இரண்டு தங்கைகள். கடைசி தங்கைக்கு சமீபத்தில்தான் திருமணமாகியது.

பேருந்து பயணத்தில் தினமும் காணும் முதியவர்களுக்கு இடம் தராத பெண்கள், கை குழந்தைகாரிகளுக்கு உதவாத இளம்பெண்கள், ஓயாத செல்பேசும் காரிகைகள், கூட்டத்தில் பிதுங்கும் நங்கைகள், மேற்கம்பியை பிடிக்க கையை உயர்த்தும் போது யாராவது கண்களால் கற்பழிக்கிறார்களா என நோட்ட்மிடும் குமரிகள் என பல்வேறு மறந்து போகும் முகங்களில் அவளும் ஒருவளாக இருந்தாள்.

அந்த ஒருவள் ஒரு நாள் எனது அத்தியாயங்களில் ஒன்றிபோகாவிட்டாலும், ஒன்றாகி போனாள். ஒன்று என்பதும் சரியில்லை எதோ சிலவரிகளாகி போனாள்

தொடர்ந்து அவள் இரண்டு வாரங்கள் என் பார்வையில் பட்டுக்கொண்டிருந்தாள். கோபபார்வை மறைந்து போனது. மெல்லிய புன்னகை படந்திருக்கும். அந்த இரண்டு வாரங்களில் எனது அலாரம் கொஞ்சம் பழுதடைந்தது போலும். நேரங்கள் தடம்புரண்டன. நான் இறங்கும் முந்தைய நிறுத்ததில் இறங்கி கொண்டிருந்தாள். மறுபடி குருவைதான் கேட்டேன்.

அநாவசியமா காதல் கீதல்னு இறங்காதே, என்று சுறுக்கமாக நிறுத்திக்கொண்டான். எனக்கு குருவை பிடிக்காமல் போனது. செந்தில் தான் என்னனென்னவோ சொன்னான். அவனை பிடித்துப்போனது. காதலுக்கும் காமத்துக்கு உள்ள வித்தியாசத்தை சொல்லிக்கொண்டிருந்தான்.

மீண்டும் பசி.


(தொடரும்ம்ம்)

சிறு(தொடர்)கதை - 1

முதல் அத்தியாயம்

மார்கழி பனியை மெல்ல மெல்ல தின்ற சூரியன் தன் பசியால் சிவந்த கண்களை வெண்மையாக்கி கொண்டிருந்தது.

எனக்கு மட்டும் ஏன் இப்படி?

கண்ணாடியில் தெரிந்த பிம்பத்திடம் எத்தனையோ முறை கேட்டும் விடை அது தந்ததில்லை. தரப்போவதுமில்லை. யாரிடமும் கேட்கவும் தோன்றியதில்லை.

கேட்டிருக்கிறேன். முன்பு ஒரு முறை. எல்லாருடைய நகைத்தலுக்கும் பாடுபொருளானேன். விடைதான் கிடைத்ததில்லை. உடைந்து போன செல்போன், நேரத்தை கண்டுபிடி என்று கண்ணாமூச்சி ஆடியது.

பசிக்கிறது. நேரம் 8ஐ நெருங்கிவிட்டது. ஆதிகாலத்தின் முதல் கடிகாரம் வயிறாகத்தான் இருக்க வேண்டும். புதியதாக வாங்கிய நோக்கியா போன் மின்னியது. காதில் மாட்டிக்கொண்ட ஹெட்போன் வெளிப்புற சத்தங்களை உறிஞ்சிக்கொண்டு இசையை துப்பியது.

செவிக்கு உணவில்லாத போது........... வள்ளுவர் பொய் சொல்லி இருப்பாரோ.

சென்னை வாகன நெரிசல்களில் உருமிக்கொண்டு ஊர்ந்து செல்லும் வாகனங்களை போல பசி ஏற்றம் இறக்கமாக நீள்கிறது.

சென்னையில் ஒன்று பெரிய உணவுவிடுதிகள் அல்லது கச்சடா உணவுவிடுதிகள். இரண்டு மட்டும்தான். நடுத்தர வர்கத்திர்ர்ர். நான்கு இட்லி - அதை இட்லி என செல்ல முடியாது கொஞ்சம் உப்பிய கையடக்க தோசை - இது பெரிய ஹோட்களில் விலை 22ரூ. குறைந்த பட்சம் 8 இட்லி தேவைபடும் என் பசியில் பாதி குறைய. 10ரூபாய்க்கே நாலும் கிடைக்கிறது கச்சடா ஹோட்டல்களில். மணி அங்கேதான் சாப்பிடுறான். எனக்கு அது ஒவ்வுவதே இல்லை.

நீ ஏன் இப்படி இருக்க... குருவின் கேள்விக்கு இன்றுவரை என்னிடமே பதில் இல்லை.

எனக்கு மட்டும் ஏன் இப்படி...

சென்னையில் வீடு கிடைப்பது குதிரை கொம்பு. அதும் நமது விரும்பும் பட்ஜெட்ல அமைனும்னா சும்மாவா. சென்னை வந்ததும் நண்பனின் நண்பனோட நண்பனின் அறையிலேதான் வாசம். ஒரு வாரம் தங்கிக்கனு தாராள மனதுடன் சொல்லிவிட்டார் ந.ந.ந. ஆனா ஒரு வாரத்திலே எப்படி பிடிக்க வீட்டை.

அடுத்த நாளே ஒரு வீட்டை பார்த்தாச்சி. 2200 வாடகை. 15000 அட்வான்ஸ். வாங்கிற 4500 சம்பளத்துக்கு எப்படி சாத்தியப்படும். அதுக்கு அடுத்த நாளும் டிட்டோ. குருதான் ஒரு யோசனை சொன்னான். உன் நண்பர்கள் யாராச்சும் சென்னையிலே இருந்தா ஷேர் பண்ணிக்கோ என்று. குரு ந.ந.நவின் நண்பர். இந்த மூன்று நாட்களில் எனக்கும் நல்ல நண்பராகிருந்தார்.

குரு, இப்போ சென்னையில இருக்க ஒரே நண்பன் நீ மட்டும்தான். பத்மாசுரனுக்கு வரம் தந்த சிவனாக குரு. இங்கே ஏற்கனவே 5 பேர் இருக்கோமே. நான் எதும் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. நான்காவது ந. சாப்பிடலாமா - இதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

8தானே இப்போ, ஒரு 9.30 சாப்பிடலாம். கொஞ்ச நேரம் கேரம் விளையாடிட்டு வரோம். சமையல்காம்மா செஞ்சி வச்ச சப்பாத்தி குர்மா வாசனை படந்தது, 7.30 என் அலாரம் அடித்தாகிவிட்டது.
அவர்களை விட்டு சாப்பிடவும், பசிக்கிறதென்று சொல்லவும் சங்கோஜமாகவே இருந்தது. வீட்டுக்கு பேசனும்னு பொய் சொல்லி வெளியேறி விட்டேன். கையிலே 200க்கும் குறைவுதான், அதில்தான் இந்த வாரத்தையே ஓட்டியாகனும். பசிக்கு இந்த சிந்தனையே கொஞ்சமும் இல்லை.

2 பரோட்டா.....

சாப்பிடவா, பார்சலா

சொன்னேன். சுட சுட வந்தது. சாப்பிட்டேன். ம்ம் 9.30 வரை கண்டிபாக தாக்கு பிடிக்கலாம்.

இன்னும் செல்போன் வாங்கலையா, குருதான், அவனை தவிர யாருக்கும் என்னிடம் பேசினதில்லை. எதிரில் வரும் போது புன்சிரிப்பு, அதிகபட்சம் பாஸ் அந்த கதவை சாத்திடுங்களேன்,

இல்லை குரு, அதான் வீட்டுக்கு பேச.... சின்ன வயசிலே இருந்தே சின்ன சின்ன பொய்க்கும் நடுங்கும் கால்கள்.

என்னோட நம்பரை கொடுத்துருங்க, எதாச்சும் அவசரம்னா கூப்பிட உதவியா இருக்குமில்லே.

ரொம்ப தேங்ஸ் குரு... நான் நினைந்திருந்த சென்னை மெல்ல மெல்ல மூழ்கி கொண்டிருந்தது.

எல்லாரும் ஆட்டத்தில் மும்முரமானார்கள், பாதி பசி என்னோடு தனியாவர்த்தனம் புரிந்து கொண்டிருந்தது. பசி மயக்கம். அரை தூக்கத்தில் அண்ணே உங்க ஐடி கார்டு என்ற சத்தம் கேட்டுதான் விழித்தேன். ஹோட்டலிலேயே விட்டுட்டு போயிட்டிங்க. சாப்பிட்ட இடத்தில் தவறவிட்டிருக்கிறேன். அவர்கள் என்னையும் அந்த பையனையும் மாறி மாறி பார்த்தார்கள். பையன் வந்த வேலை முடிந்தது என ஓடிப்போனான். அவர்கள் எதும் கேட்கவில்லை. கேட்டால் என்ன பதில் சொல்லுவது. அவமானமாக இருந்தது.

குரு மெல்ல ஆரம்பித்தான் நீ வேணும்னா சாப்பிட்டு படுத்துக்க. இல்லே எல்லாரும் ஒன்னாவே சாப்பிடலாம். பசியில் குரல் கம்மி போனது.

எல்லாரும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு சாப்பிடவந்தார்கள். எனக்காகவே என்பது புரிந்தது, சந்தோசத்தையும் கொஞ்சம் கூச்சத்தையும் தந்தது. குருவோடு சேர்ந்து செந்தில், சுரேஷ், மாரிமுத்து, பாலாஜி எல்லாரும் நண்பர்களாகி போனார்கள் அன்றே. பாஸ்.

குருதான் தனியாக வந்து கேட்டான் ஏன் இப்படி இருக்க? பசிச்சா இங்கயே சாப்பிட வேண்டியதுதானே.
அநாவசியமா ஏன் ஹோட்டல் போற இங்கயே இருக்கும் போது. எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. ஒரு மணி நேரம் கூட பசியை தாங்க முடியாமல் ஏன் எனக்கு மட்டும் இப்படி.

பழைய நிகழ்ச்சி அசைப்போட்ட படியே வந்து சேர்ந்தாயிற்று ஹோட்டலுக்கு.
என்ன வேணும் என்று சர்வர் கேட்கவே இல்லை, கடந்த 7-8 மாதமாகவே காலையிலே 4 இட்லி ஒரு வடைதான். சரியாக 25ரூ. குரு மற்றும் அவரது நண்பர்கள் எல்லாம் திசைக்கொரு பக்கம் பிரிந்து போன பின் என் முக்கிய பிரச்சனையே சாப்பிட்டில்தான். காலை 25ரூ, மாலை 40ரூ, இரவு 35ரூ, சரியாக ஒரு நாளைக்கு சாப்பாட்டுக்கு 100ரூபாய். இந்த வரிசையை மாற்ற விரும்ப வில்லை. இத்தனை வருட சென்னை அனுபவத்தில் பசியை அடக்க முடியவில்லை, கொஞ்சமாக குறைத்து இருக்கிறேன். தினமும் ஒரே வகை சாப்பாடு. அலுத்துபோனாலும் மாற்ற முடியவில்லை. மதியம் ஆனந்தாவில் முழுசாப்பாடு. இரவு சேட்டு கடையிலே ஏழு சப்பாத்தி. வாங்கும் 6500 சாப்பாட்டில் 3000ரூ சாப்பாட்டிற்கே போய்விடுகிறது.

அறையிலயே சமைக்கலாமில்லே, குரு ஒரு பழைய அறையின் தட்டு, முட்டு பாத்திரங்களை தர தயாராகத்தான் இருந்தான். இடம்தான் இல்லை. 10x10 அறை. இந்த அறைக்கு 1200ரூபாயாம். பஸ் பாஸ் வாங்க ரூ 600 போக. மாசம் 1700 மீந்தும். அதும் வீட்டுக்கு அனுப்பிவிட மிஞ்சுவது 50ஓ 100ஓ.
100ரூ மிச்சமாகும் நாட்களில் மாதம் ஒரு படம். அதுவும் இரண்டாம்தர தியேட்டர்களில் மட்டும், அங்குதான் முதல் வகுப்பு 30ரூ. மிச்சம் 20 முதல் 70வரை. அதில் தான் குளியல் சோப், துவைக்கும் சோப் இன்ன பிற சில்லரை தேவைகள். மிச்சமாகும் 50ரூ நாட்களில் சினிமா பக்கத்து அறை நபர்களின் டீவியில் வரும் சத்தம் மட்டும். சில நாட்களில் கமல். ரஜினி, அஜித், விஜய் குரல்கள் குழப்பும். நால்வரும் சேர்ந்து எதோ சினிமாவில் நடித்திருக்கிறார்கள் என்றே நினைப்பேன்.

உனக்கு எப்போ கல்யாணம்? எதேச்சையாக சந்திக்கும் பழைய தெரிந்த முகங்கள் துக்கம் விசாரிக்கும். பார்த்துகிட்டு இருக்காங்க என்பேன். வேறு எதும் சொல்லும் எண்ணமில்லை. நானிருக்கும் நிலைமையில் திருமணம் செய்து கொடுக்க சுற்றத்தில் யாருக்கும் விருப்பமும் இல்லை. ஏண்டா 30 தாண்டியாச்சே இன்னும் எத்தனை நாள் தனியாக இருப்ப, எதாச்சிம் பொண்ணை லவ் பண்ணியாச்சும் கல்யாணம் பண்ணிக்கலாமில்லே, கேட்பது என் மேலதிகாரி. அதில் கொஞ்சம் இழக்காரம் கலந்திருக்கும்.

ஆரம்ப நாட்களில் செந்தில் சொல்லி இருக்கிறான். சென்னையிலே கடல் காற்றும் காதலும்தான் சுலபமாக கிடைக்கும். வெள்ளந்தியாக எப்படி காதல் பண்றதுனு கேட்டுத்தொலைத்தேன். அன்று சனிக்கிழமை இரவு. முதல்ல நல்ல ட்ரெஸ் பண்ணனும். என் முக வாட்டத்தை பார்த்த குரு அதெல்லாம் அவசியமில்லை என்று ஆரம்பித்தான். டைம் இஸ் மணி. டைம் இஸ் கோல்ட் என்றான்.
பெண்களை கவர பணம் இல்லை தங்கம் வேண்டும். இல்லாட்டி அதே மதிப்புடைய காலம்தான் வேண்டும் என்று குரு கொஞ்சம் குழறியபடி சொன்னது, விவேகானந்தரிடம் ஞானபதேசம் பெற்ற சீடனை போல குதுகலிக்கை வைத்தது.

பேருந்தில் பார்த்த பெண்களில் அழகாய் தோன்றியவளைதான் காதல் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன். உபதேசம் நடந்த இரண்டு வாரமாகியும் என்னால் பேருந்தில் எந்த பெண்ணின் மேலும் காதல் வரவில்லை. அடுத்த சனி இரவு. செந்தில் சொன்னான். அழகான பெண்கள் ஏன் பேருந்துல போகப்போறாங்க என்றான். பாதி புரிந்தது. ஏன் பெண்களை இப்படி நினைக்கிறிங்க என்று கேட்டதுதான் தாமதம். யாரும் உபதேசம் செய்யாமலே எனக்கு புரிந்தது. சனி இரவு பிரம்மச்சாரிகளிடம் பெண்களை பற்றியோ, காதலை பற்றியோ பேசக்கூடாது என்பதை புரிந்து கொண்டேன். ஞாயிறு விடுமுறையாக போனது நல்லதாய் போயிற்று. தூங்கும் போது மணி நாலாகிவிட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. ஒரு தோல்வி இருக்கிறது.

தோல்வி பயம் என்னை பேருந்தினுள் எந்த பெண்ணும் என் கண்ணுக்கு தெரியாமல் செய்துவிட்டது.

என்ன செய்ய கண்ணுக்கு தெரியாமலும் சில நுண்ணுயிரிகள் இருக்கத்தானே செய்கிறது.

(தொடரும்ம்)

07 December 2009

ஜன்னலோரத்து தேவதைகள் - 6

சே ஒரே ரப்சர். ஏண்டி அவன்கிட்ட நம்பர் வாங்கினே. அநாவசியமா உன் நம்பரை அவனுக்கு கொடுத்து வம்பிலே மாட்டிக்காத. மூஞ்சை பார்த்தாலே பொறுக்கி ராஸ்கல்லுனு அப்பட்டமா தெரியுயுது.

போடி அப்படிலாம் தெரியலை, துறு துறுனு இருக்கான், அப்பாவித்தனமான முகம்...

அடிப்பாவி... எனக்கென்ன... நீயாச்சு அவனாச்சு...

------------------------------

அர்ஜூன் இன்னிக்கு பைக்ல வரலையா

பைக் சர்வீஸ் கொடுத்தேன், இன்னும் வர்லை, நானும் இன்னிக்கு உன்னோட பஸ்லதான்...

சரி வா போகலாம்.. டேய் ஒரு 100ரூ கொடுடா நாளைக்கு தந்துடறேன்.

எங்கிட்ட எங்கேடா அவ்ளோ காசு...

அடப்பாவி, 3ரூபாய் கடனுக்கு 100ரூ திருப்பி தந்தவந்தானேடா நீ. நான் எத்தனை 100 எத்தனை தடவை உனக்கு அழுதுறுக்கேன், ஒரு கைமாத்தா கேட்டா சலிச்சிக்கிறே.

அத ஏண்டா நியாபகபடுத்துறே, ஒரு மாசமாகி போச்சி இன்னும் அந்த பொண்ணு கால் பண்ணவே இல்லை.

ம்ம் இதுக்குத்தாண்டா ஓவரா ஆடக்கூடாதுங்கிறது.

இப்ப நான் என்ன உன் கூட வரக்கூடாது அவ்ளோதானே, கிளம்பு நான் என் ப்ரண்ட் சுதாகரோட பைக்ல போயிக்கிறேன்.

இதுக்கொன்னும் குறைச்சலில்லைடா, எக்கேடு கெட்டு போ. நான் தனியாவே போயிக்கிறேன்.

(சுதாகருக்கு கால் பண்ணி இருக்கானானு கன்பார்ம் பண்ணிக்கனும்.)
ஹலோ சுதா, நான் அர்ஜூன், எங்கேடா இருக்க ஆபிஸ்லயேதானே இருக்க

எஸ் டா, நீ

உங்க ஆபிஸ் கீழே இருக்கேன், ரொம்ப நாளேச்சே உன்னை பார்த்துட்டு போலாம்னுதான்.

டேய் 2 பில்டிங் தள்ளி என் ஆபிஸ் இத்தனை நாளா பார்க்கத்தோனாதவன் இன்னிக்கு பார்க்கத்தோனுதா. சுத்தி வளைக்காம மேட்டரை சொல்லு.

டேய், என்னடா நீ உன்னை ரொம்ப நாளேச்சே பார்க்கனும்னு நினைச்சேனடா, அப்படியே உன் கூட நைட் டின்னர முடிச்சிட்டு உங்கூடயே வண்டில போய் ரூமுக்கு போனும்னு நினைச்சேனேடா, இப்படி நட்பை கொச்சை படுத்துறியேடா.

இதான் உன் ப்ளானா, சரி சரி வந்து தொலை....... இங்கே எனக்கு கொஞ்சம் நல்ல பேர் இருக்கு, கெடுத்திடாத. இங்க இருக்க பொண்ணுங்களை ஏறெடுத்து பாக்காம என்னோட அறைக்கு வா.

இதோ வந்துட்ட்ட்ட்ட்டே............ வந்துட்டேன் டா, மச்சி கிளம்பலாமா..

அடப்பாவி இவ்ளோ வேகமா இருக்கே, இரு கொஞ்சம் சின்ன வேலை முடிச்சிடறேன், உடனே கிளம்பலாம் பொறு.

ம்ம் உனக்கு தனி ரூமு, தனி போன் கனெக்சனு... அய்யோ.......

ஏய் தொடாத, ஆபிஸ் போன் ஆபிஸ் யூஸ்க்கு மட்டும்தான்,
ராசி... அந்த பைல் முடிச்சிட்டியாமா, அத கொஞ்சம் கொண்டுவாம்ம்மா.

யார்டா ராசி. உனக்கு பி.ஏ வேறையா,

உஷ், பி.எலாம் இல்லை என் ஜூனியர், எதும் பேசாம அமைதியா இரு, என் பேரை கெடுத்துடாத.

ம்கூம், இதுக்கொன்னும் குறைச்சலில்லை.

எஸ்க்யூஸ் மீ சார்.

ம்ம் வா.. ராசி... பினிஷ்டா?

ம்ம் முடிச்சாச்சி சார், நான் நல்லா ஒருதடவைக்கு இரண்டு தடவ செக் பண்ணிட்டேன், நீங்க கண்ண மூடிட்டு கையெழுத்து போடலாம்.

ஹாய் ராசி, நான் அர்ஜூன் நியாபகம் இருக்கா, உங்க ப்ரண்ட் மீராவோட ப்ரண்ட்.

டேய் என்னடா இது.

ம்ம் இல்லடா இவங்கள எனக்கு முன்னாடியே தெரியும், என்னோட ப்ரண்ட்தான், இல்லையா ராசி.

இல்லை... ம்ம் ஆமாம்

ஆமாம் ஆனா பேர் ராசினு இன்னிகுத்தான் தெரியும். அப்புறம் ஹௌ ஆர் யூ ராசி.
உங்க ப்ரண்ட் இப்படி ஏமாத்திட்டாங்களே.

என்ன ஏமாத்திட்டாங்க, என்ன ப்ரச்சனை.

சார் நான் சொல்றேன் சார். நம்ம ஆபிஸ் மீரா இவர்கிட்ட ஒரு நாள் பஸ்ல போறச்ச ஒரு 100ரூ தர வேண்டியதா போகிடுச்சி. அத அடுத்த நாள் தரேன்னு சொல்லி இருந்தா இவர்கிட்ட,

ம்ம் இவன் தந்தானா.....

ஏன் டா இப்படி ஆச்சர்யமா நம்பிக்கையில்லாமா இழுக்கிறே, நான் தான் கொடுத்தேன், என் போன் நம்பரும் தந்தேன் அடுத்த நாள் தர சொல்லி, ஏமாத்திட்டா...

சார், ஏமாத்திட்டானு சொல்லாதீங்க, அன்னிக்கே அவ அவங்க அப்பா அர்ஜெண்டா கூப்பிட்டாருனு ஊருக்கு போயிட்டா, அதனாலதான் தர முடியாம போயிடுச்சி..

ஓகே ராசி நீ போம்மா, நான் பார்த்துக்கறேன்.

ம்ம் இந்த பொண்ண பார்க்கத்தான் என்னை பார்க்க வந்ததா சொன்னியா நீ.

ஏய் சத்தியமா இல்லை, எனக்கே இந்த பொண்ணு இந்த ஆபிஸ்னு தெரியாது. மீரா?

மீரா போன மாசமே ரிசைன் பண்ணிட்டா, அவ அப்பன் அவளுக்கு நிச்சயம் பண்ணிட்டான் அவன் மாமன் பையனோட, அன்னிக்கு போன் பண்ணினப்ப பாவம் ஒரே அழுகை, அவளுக்கு விருப்பமே இல்லையாம்...

ஓஹ் அவ போன் நம்பர் கிடைக்குமா.

எதுக்கு ? அருவா வெட்டு வாங்கவா.... உனக்கு 100ரூ தானே வேணும், நானே தந்துடறேன்.

இல்லடா அந்த பொண்ணை நான் சின்சியரா...........

சின்சியரா.......... டேய் வேண்டாம், பொண்ணுக்கு நிச்சயம் நடந்தாச்சி, அதும் மதுரைக்காரைங்க, சும்மா பார்த்தாலே அருவா எடுத்துகிட்டு அலப்பரை பண்றவைங்க, கம்ம்னு இருந்துக்கோ.

டேய்.. கொடுடா... நான் பேசிக்கிறேன். எப்படியோ, நீ தந்தேன்னு யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.

அடி செருப்பால, அதை வேற சொல்லுவியா நீ, கொன்னே பூடுவேன், இதான் அவ நம்பர் 98*** *****.
அநாவசியமா என்னை வம்புல மாட்டாம இருந்தா அது போதும்

தேங்க்ஸ்டா மச்சி. சரி இந்த ராசி?

இவளும் அவளும் தோஸ்த், சாதா தோஸ்த் இல்லே, இவகிட்ட பேசறச்ச அவ நம்பரை தந்தேன்னு சொல்லிவச்சிடாதே, அப்புறம் மானமே போயிடும்.

இவ எந்த ஊரு மச்சி?

அது எதுக்கு உனக்கு.. எதோ சின்சியர்னு சொன்னியேனு மீரா நம்பர் தந்தேன்.

இருக்கட்டும்டா, ஒரு வேளை மீராவை என்னால சந்திக்கவே முடியாம போயிடுச்சின்னா

போயிடுச்சின்னா???

நான் என்ன தேவதாஸ் மாதிரியாடா சுத்த முடியும்,

என்ன சொல்ல வர நீ???

இல்லே ராசியோட போன் நம்பரையும் கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்.........

09 November 2009

ஜன்னலோரத்து தேவதைகள் - 5

டேய் திவா... அவ...

எவ....

அவடா, அங்கே பார், யெல்லோ சுடிதார்...

அட இத்தனை நாள் என் கண்ணுல சிக்கலையே இவ...

டேய் நீ ஆபிஸ் போ, நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன். அந்த ஆளு கேட்டா எதாச்சும் சொல்லி சமாளி,

அடப்பாவிங்களா, எல்லாரும் ஒரே மாதிரியாத்தான்யா இருக்கிங்க.

***************
( அதே நேரத்துல அங்கே )

சரி இப்போ சொல்லு யார் அவன்..

நேத்து பஸ்ல எங்கிட்ட இருந்து 3ரூ சுட்டுட்டான் டி.
(ப்ரம் த பிகினிங் நடந்த மேட்டரை சொல்லி தொலைக்கிறாள் மீரா)

ஒரு மூன்று ரூபாய்க்கா இதெல்லாம்,

நான் என்ன பண்ண இப்படி பைக்ல எல்லாம் பாலோ பண்ணிட்டு வருவான்னு எனக்கு எப்படி தெரியும்.

ஒழுங்கா இருந்துக்கோ உன்னை வேற பொண்ணு பார்க்க வராங்க, இந்த நேரத்துல வீண் சிக்கலில்லே மாட்டிக்காத.

எனக்கு பயமா இருக்கு, திடிர்னு வந்து நின்னு ஒரு கப் காபி சாப்பிட போலாமானு கேட்டு வந்து நிப்பானோன்னு பயமா இருக்கு.

டோன் வர்ரி அப்படிலாம் கேட்க மாட்டேன்ன்.. இப்பதான் பழரசம் சாப்பிட்டு வந்திருக்கேன்,
ஹாய்...... என் பேர் அர்ஜூன், உங்க பேர்

ஏய் நீ எப்படி இங்கே...

அததான் விதினு சொல்றாங்க.

மிஸ்டர், ஈவ் டீசிங்ல உள்ள போகனுமா...

என்னங்க எவ்ளோ கண்ணியமா வந்து பேசிட்டு இருக்கேன், எதோ ரோட் சைட் ரோமியோஸ் கணக்கா ரியாக்ட் பண்றிங்களே.

உங்களுக்கு என்ன வேணும்...

எனக்கில்லை உங்களுக்குத்தான் வேணும்.. சேஞ்ச்

வ்வாட்...

(ம்ஹூம் ஆவ்வூன்னா இதை யூஸ் பண்ணிடுவிங்களே) 3ரூ மிச்சம்ங்க.

ஒன்னும் அவசியமில்லை அத நாங்க பிச்சைகாரனுக்கு போட்டதா நினைச்சிக்கிறோம்.

ஹலோ அதை நீங்க ஏன் சொல்றிங்க, உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை நான் மஞ்சுளாகிட்ட
பேசிக்கிறேன்.

ஹலோ, என் பேர் மஞ்சுளா இல்லை.

அப்புறம் வேற என்ன?

அத சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆனா கூப்பிட வேண்டிய அவசியம் எனக்கு இருக்கே, ஏய், வா, நீ, போனு கூப்பிட முடியாதே,

ஷட் அப்.

இந்தாங்க 100ரூ மிச்சம் 97ரூ கொடுங்க,

என்ன விளையாடுறிங்களா, நாங்க என்ன சில்லரை வியாபாரமா பண்ணிட்டு இருக்கோம்.

அப்போ மிச்சம் 97ரூ நாளைக்கு... வேண்டாம் சாயந்திரம் பஸ் ஸ்டாப்ல மீட் பண்ணிட்டு அப்படியே ஒரு காபி சாப்பிட்டு சேஞ்ச் மாத்திட்டு அந்த 3ரூபாய கொடுத்திடறேன், ஓகேவா.

மிஸ்டர் தொந்தரவு பண்ணாதீங்க, முடிஞ்சா இப்பவே கொடுங்க, இல்லே ஆளை விடுங்க.

அதெப்படிங்க முடியும், நான் ஒரு கடன்காரன் என்ற இமேஜோட எப்படி என்னால வாழ முடியும்.
இந்த 100ரூபாய பிடிங்க, மிச்சத்தை எப்போ முடியுமோ அப்போ திருப்பி தாங்க, அதுவரை
அதுவரை நாம ப்ரண்ட்சா இருப்போம்,
மறுபடியும் சொல்லிக்கிறேன்... ஹாய் ஐம் அர்ஜூன்.. உங்க பேர்..........

இன்னும் வைக்கலை....

ஹலோ நானும் பார்த்துட்டு இருக்கேன் அப்ப இருந்து மஞ்சுளாவை பேச விடாம நீங்களே பேசிட்டு இருக்கிங்க,

என் பேர் மஞ்சுளா இல்லை.

இல்லைனு சொல்றிங்களே தவிர இருக்கிறதை சொல்ல மாட்டேன்றிங்களே.

ஓகே... தாங்க, நாளைக்கு இதே நேரத்துல மிச்சத்தை வாங்கிக்கோங்க.

இன்னிக்கு சாயந்திரம்ம்ம் முடியாதா?

நோ வே...

சரி.. உங்க போன் நம்பரை கொடுங்க.

அதெல்லாம் தர முடியாது.

என்னங்க உங்களை நம்பி 97ரூ தந்து இருக்கேன், என்னை நம்பி ஒரு 10நம்பர் தரமாட்டிங்களா...

10 நம்பர்தானே. 1.....2...3........4.....5....6

ஸ்டாப், ஜோக்கா, தெரியாமத்தான் கேட்கிறேன் ஜோக்கா.. உங்களை பேச வேண்டாம்னு சொன்னேன், இது எனக்கும் மஞ்சுளாக்கும்...

ஐயோ என் பேர் மீரா....

(மறுபடி மீராவ்வ்வ்வா) தேங்க்ஸ்.... இது எனக்கும் மீராவுக்கும் இருக்கிற டீலிங், புரிஞ்சுதா.....
மீரா உங்க போன் நம்பர்...

எங்கிட்ட போன்லாம் இல்லை.. உங்க நம்பர்தாங்க......

குட்..இதும் நல்ல ஐடியாதான் இல்லே....உங்க பேர் சொல்லலையே...

எனக்கு பேர் வைக்கலை....

ஓகே பேர் வைக்கலை, இந்தாங்க நீங்களும் எதுக்கும் போன் நம்பர் வச்சிக்கோங்க, நாளைக்கு எதுக்கும் யூஸ் ஆகலாம்....

இடியட்...

தாங்க்ஸ்... ஓகே மீரா... நான் கிளம்பறேன், நாளைக்குத்தான் போன் பண்ணனும்னு இல்லை, சாயந்திரம் கூட பண்ணலாம், முடிஞ்சா லஞ்ச் ஹவ்ர்ஸ்ல கூட கூப்பிடலாம்.
ஓகே பேர் வைக்கலை நாளைக்கு சந்திக்கலாம். பை..

சே ஒரே ரப்சர். ஏண்டி அவன்கிட்ட நம்பர் வாங்கினே. அநாவசியமா உன் நம்பரை அவனுக்கு கொடுத்து வம்பிலே மாட்டிக்காத. மூஞ்சை பார்த்தாலே பொறுக்கி ராஸ்கல்லுனு அப்பட்டமா தெரியுயுது.

போடி அப்படிலாம் தெரியலை, துறு துறுனு இருக்கான், அப்பாவித்தனமான முகம்...

அடிப்பாவி... எனக்கென்ன... நீயாச்சு அவனாச்சு...

---------------------------------

என்னடா அந்த பொண்னை உனக்கு முன்னாடியே தெரியுமா.

அதிருக்கட்டும்டா..... திவா, லஞ்ச்க்கு நீயே பே பண்ணிடுடா...

ஏற்கனவே நீ எனக்கு ஒரு 250ரூ பாக்கி...

கொடுத்திட்டா போச்சி... அப்படியே சாயந்திரம் போகறச்ச பெட்ரோல் போடனும், ஒரு 50ரூ கொடுத்துடு
சம்பளம் வந்ததும் முழுசா கொடுத்துடறேன்.


(தொடரும்ம்ம்)

06 November 2009

ஜன்னலோரத்து தேவதைகள் - 4

அது வெறும் லைசென்ஸ் கேசு, இது ட்ரங் & ட்ரைவ்.. இதுக்கு மாமூலா 1000தான் ரேட்.

சார் அவ்ளோ இல்லை சார். ஒரு 100ரூபா.......

யோவ் இவனுங்க வேலைக்காக மாட்டாங்க, நீ சார்ஜ் சீட் போடுய்யா, கோர்ட்ல போயி காலைல இருந்து சாயந்திரம் வரை நின்னு 5000ரூ பைன் கட்டினாதான் இவனுங்களுக்கு புரியும்

சார் அம்ப்புட்டு இருந்தா கொடுத்திட மாட்டேனா சார், சார் கொஞ்சம் கருணை காட்டுங்க சார்..

உனை பார்த்தாலும் பாவமாதான் இருக்கு, சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்..............................................................................................................................


என் நாக்குல சனி, ஒழுங்கா ஜூஸ் சாப்பிட்டேனா போனேன்னானு இருந்திருக்கனும்,
யார் உன்னை பார்த்தா எனக்கென்ன.. அந்த கண்றாவி என் கண்ணுல விழுந்து.......
இப்ப 500ரூ அநாமத்தா போச்சே.....

சும்மா பொலம்பிட்டு இருக்காத, ஆப்டர் ஆல் ஒரு 500ரூபாய். ரூமுக்கு நீ கொடுத்த அட்வான்சா நினைச்சிக்கோ, வந்ததுல இருந்து அட்வான்சுனு ஒன்னு கொடுக்கனும்னு உனக்கு தோணலையோ....

அதுக்காக, இப்படியா உனக்கும் இல்லாம எனக்கும் இல்லாம.......

ஷட் அப்.... நீ கிளம்பு... சாயந்திரம் வந்து உன் முகத்துல எரியறேன் பிச்சை காசு.....

அது இல்லடா....

ப்ளீஸ்.. நீ கிளம்பு........

(அலுவலகத்தில்)

என்ன அர்ஜூன் இன்னிக்கும் லேட்டா... போ போ.. அட்டெண்ட்ன்ஸ் சைன் பண்ண நீ ஆர்.கே ரூமுக்குதான் போகனும் இன்னிக்கு.

அப்படி ஒரு அவசியமே இல்லை. அங்கே போய் சைன் போடுறதுக்கு அப்படியே கிளம்பிடுவேன்.

அர்ஜூன் உன்னை ஆர்.கே கூப்பிடுறார்ர்.

என்னவாம் அந்த கிழத்துக்கு

தெரியலைப்பா... ஆனா எதோ சீரியஸ் மேட்டர்தான்.

சே, காலைலயே அந்தாளோட ரோதனையா போச்சி


(ஆர்.கே அறையில்)

சார்ர். கூப்பிட்டிங்களாம்...

உட்காருங்க மிஸ்டர் அர்ஜூன். நேத்து ஈவ்னிங் நடந்த ஒரு சின்ன மீட்டிங்க்ல நீங்க வரலை,
அதான் இப்ப உங்களை கூப்பிட்டு இருக்கேன்.

சாரி சார், நேத்து என்னோட மாமாவுக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சி, அவரை ஹாஸ்பிடலில்ல்ல்

ப்லீஸ் மிஸ்டர் அர்ஜூன், உங்க விளக்கம் எனக்கு அவசியமில்லை. நேத்து நடந்த மீட்டிங் பத்தி பேச மட்டும்தான் உங்களை கூப்பிட்டேன்.

எஸ் சார்ர்..

உங்களுக்கே தெரியும் நாட்டுல பொருளாதார சரிவினாலே நிறைய ஆட்குறைப்பு செஞ்சிட்டு இருக்காங்க அப்படினு,

எஸ் சார்ர்.

நம்ம கம்பெனில ஆட் குறைப்பு செய்ய போவதில்லை, ஆனா

சொல்லுங்க சார்...

ஆனா சம்பள குறைப்பு பண்ண போறோம், எஸ் மிஸ்டர் அர்ஜூன் எல்லாருடைய சம்பளத்தில இருந்து 30% டிக்ரிமெண்ட் பண்ண போறோம். இந்த 30% டிக்ரிமெண்ட் கம்பெனி பழைய படி நல்ல நிலைமைக்கு வந்ததும், திருப்பி தவணை முறையிலே தருவோம், இது தான் நேத்து மீட்டிங்ல நடந்த விசயம். உங்களுக்கு இதுல விருப்பம் இல்லைனா........... அது உங்க விருப்பம்.
யூ மே கோ நவ்...

தேங்க்யூ சார்ர்.

------------------------------

என்னடா முழுசா ஆப்பு வைக்காம 30% ஆப்பு வச்சிட்டாங்களா...

இது என்னடா விளையாட்டுத்தனமா இருக்கு....... நான் ரிசைன் பண்ண போறேன்.

அர்ஜூன் கொஞ்சம் கோபப்படாம ரிலாக்சா யோசி. இப்ப இருக்க சூழ்நிலையிலே வேலையை விடுறதுங்கிறது பெரிய முட்டாள்தனம். எந்த கம்பெனியும் இன்னும் ஒரு வருசத்துக்கு வேலைக்கு ஆட்களை சேர்த்திக்க போறதில்லை. நீயும் அந்த கடன் இந்த கடன்னு வாங்கி வைச்சிருக்க இந்த நேரத்துல அநாவசியமா அடுத்த வேலை கிடைக்காம ரிசைன்னு பைத்தியக்காரத்தனமா எதும் முடிவு பண்ணி வைக்காத, மத்தபடி உன் இஸ்டம்.

ஓகே நான் முழு மூச்சா தேட போறேன், இன்னும் இரண்டே மாசத்துல ரிசைன் பண்றேன்,

கூல் மேன் கூல், சரி ரொம்ப சூடா இருக்க, வா போய் ஒரு தம் போட்டு வரலாம்...

நான் வரலை...

அட வாடா, விப்ரோ ஆபிஸ் பிகர்செல்லாம் பார்த்தா மறுபடி நீ நார்மலாகிடுவே, கமான்.

-----------------------------

(பழ சரக்கு(!?) கடையில்
----------------------------------

வாவ்.. ராம்ஜி உன் கடையிலேதான்யா மாதுளம் மாமதுரமா இருக்கு.
என்னடா இன்னுமா உம்ம்னு இருக்கே......
எப்பவும் ப்யூச்சர நினைச்சாவே ரப்சர்தான்........

எனக்கு 30% போனது கூட வருத்தமில்லை. அந்த விடியா மூஞ்சி ஒரு மாதிரி இளக்காரமா பேசினதுதான் கோபமே...

கோபம் உடல்நலத்துக்கு தீங்கு.. இந்தா தம்...
இன்னிக்கு என்ன ஆச்சு... இன்னும் விப்ரோ ஆபிஸ் அழகிகளையே காணோம்..
வாவ்............. டேய் உன் பீலிங்க்செல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு அங்கே பாருடா....

சைட் அடிக்கிறதுதான் வாழ்க்கையா.....

டேய் நீ என்னடா இப்படிலாம் பேச ஆரம்பிச்சிட்டே... கலைஞரே 80 வயசிலே மானாட மயிலாடவை முன் வரிசையிலே உட்கார்ந்து கலைக்கண்ணோட பார்க்கும் போது, வீ ஆர் யூத்
மச்சி...

டேய் திவா... அவ...

எவ....

அவடா, அங்கே பார், யெல்லோ சுடிதார்...


(தொடரும்ம்ம்)

04 November 2009

ஜன்னலோரத்து தேவதைகள் - 3

உன்னை மொறைச்சி பார்த்துட்டே போகுதுல்லே....

ஆமாம்டா.. யார் அவ,

என்னைக்கேட்டா...

இவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.....

சரிடா நான் கிளம்பறேன்

இருடா என்ன அவசரம், கொஞ்சம் அந்த பஸ்ஸை பாலோ பண்ணிட்டு போகலாம்.

டைம் ஆகிடும் டா...

இரு நான் ஓட்டறேன் நீ பின்னால உட்காரு.....

(இன்னிக்கு லீவு போட வைச்சிடுவான் போல இருக்கே)இருடா நல்லா உட்கார்ந்துக்கிறேன், ம்ம்ம். கிளம்பு

மச்சி, எங்கிட்ட சேஞ்ச் இல்லை, நீ பில் செட்டில் பண்ணிட்டு வாடா.

(ஓசில கிடைக்கிதுனு நின்னது எவ்வளவு பெரிய தப்பு, காலைலயே 50ரூக்கு ஆப்பு வைச்சிடானே)கொடுத்தாச்சி கிளம்பு....

(அந்த பஸ்ஸை துரத்தி பயணத்தை ஆரம்பித்தாயிற்று)

என்னடா 2-3 பஸ் ஒரே கலர்ல இருக்கு, நாம எந்த நம்பரைடா பார்த்தோம்.

23சி.

எஸ்ஸ்ஸ்... பிடிச்சிட்டேன்..........

மெதுவா போடா, காலைல பீக் ஹவர் ட்ராபிக்ல இப்படியா வேகமா போவாங்க.

அந்த ஆரஞ்ச் கலர்தானே.........

யாரை பாலோ பண்றோம்னு கூட தெரியாமலயே பாலோவிங்கா... ஆரஞ்ச் இல்லே யெல்லோ...

ம்ம். பரவாயில்லே... ஆரஞ்சும் நல்லாதான் இருக்கு.

ஏய், அங்க பாரு அந்த பொண்ணு உன்னை பார்த்து மறுபடி முறைக்கிறா. பக்கத்துல போ..

ஹலோ..... உங்க பேர் என்ன்ன்னா...

யார் டி அவன், என்னத்துக்கு உன் பேர் கேட்டு பாலோ பண்றான்

உஷ்... கம்முனு வா.. அவனை பார்க்காதே

ஏய்.. உன்னைத்தான்... உன் பேர் என்ன.. ஏய் யெல்லோ....

என்னதாண்டி பிரச்சனை. யார் அவன், தெரிஞ்சவனா, தெரியாதவனா... டீஸ் பண்றானா டெய்லி,எதாச்சிம் சொல்லித்தொலையேன்...

இறங்கினதும் சொல்றேன், இப்போதிக்கு அவன் பக்கம் பார்க்காம வா.

மணி என்னடா ரெஸ்பான்சே இல்லை. அடுத்த ஸ்டாப்ல போயி இறங்கி நான் பஸ்ல போயிடட்டுமா,

ஓ..வெரி குட் ஐடியா (அப்பாடி நான் எஸ்கேப் ஆகிடலாம்),

அடுத்த ஸ்டாப் என்ன நந்தனம்தானே..... (விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

மெதுவாடா... வண்டியை கொண்டு போய் சாத்திடாதே....

---------

போச்சி போச்சி... சிக்னல் விழுப்போகுது ஸ்லோ ஸ்லோ ஸ்லோ......போச்சி ரெட் விழுந்துடுச்சே..........
(க்ரீஈஈச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்)

எப்படி நிறுத்தினேன் பார்த்தியா.......

அடப்பாவி... பார்டரை தாண்டி நிறுத்தி தொலைச்சிட்டியேடா.. போச்சி போச்சி.. சிட்டிசன் அங்கிள் வராரே...

என்னய்யா வண்டி ஓட்டறிங்க... இபப்டித்தான் வேகமா ஓட்டிட்டு வருவீங்களா. வண்டியை ஓரங்கட்டுங்க.

சார், சார்.. வண்டி என்னோடது சார்.. அவசரமா ஹாஸ்பிடலுக்கு போயிட்டு இருந்தோம் சார்,எங்க அண்ணனுக்கு ஆக்சிடன் ஆகி அப்போலால அட்மிட் பண்ணியிருக்காங்க சார், அதான்

வண்டில எல்லா பேப்பர்ஸும் இருக்கா,

இருக்கு சார். ஆர்.சி.. இன்சூரன்ஸ், இந்தாங்க என்னோட லைசென்ஸ்....

நீ வண்டி ஓட்டிட்டு வரலையே இவன் தானே ஓட்டினான், உன்னோட லைசென்ஸ் எங்கே...

சார்ர்ர்.

என்ன.. லைசென்ஸ் இல்லையா.. கண்ணுலாம் சிவந்திருக்கு. ட்ரங் & ட்ரைவிங்கா,ஊது...

சார்.. இல்ல சார். வர அவசரத்துல லைசென்ஸ் எடுத்துட்டு வர மறந்துட்டேன் அதான்.

யோவ் ஊதுய்யானா என்னமோ பொலம்பிட்டு இருக்க..

உப்ப்... உப்ப்ப்

கன்பார்ம்டு... யோவ் செல்லப்பா.. இங்க வாய்யா.. குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு வரானுங்க, இவனுங்களை வந்து கவனிச்சிக்கோ...

சார் சார் யாராச்சும் காலைலயே தண்ணியடிப்பாங்களா சார், அது நேத்து அடிச்சி மிச்சத்தோட வீச்சம் சார்.

தம்பி பேசிகிட்டே இருந்தா எப்படி........ வண்டியை ஓரங்கட்டு...

போச்சி போச்சி.. உங்கூட ஜூஸ் சாப்பிடலாம்னு வந்ததுக்கு அப்போ 50ரூக்கு வச்ச ஆப்ப்பு. இப்ப இவிங்க எவ்ளோ கேட்கப்போறாங்களோ...

ம்ம். வண்டி யாருது...

சார் என்னோட வண்டிதான் சார், எங்கிட்ட லைசென்ஸ் இருக்கு சார், நான் குடிக்கிறது இல்ல சார்.

உஸ்ஸ்ஸ். வண்டி உனக்கு வேணுமா வேண்டாமா..

வேணும் சார்...

சரி ஒரு 1000ரூ கொடுத்துட்டு வண்டியை எடுத்துட்டு போ...

1000வா, சார் ரொம்ப அதிகம் சார். எப்பவும் 50-100ரூ வாங்கிறதுதானே சார் வழக்கம்.

அது வெறும் லைசென்ஸ் கேசு, இது ட்ரங் & ட்ரைவ்.. இதுக்கு மாமூலா 1000தான் ரேட்.

சார் அவ்ளோ இல்லை சார். ஒரு 100ரூபா.......

யோவ் இவனுங்க வேலைக்காக மாட்டாங்க, நீ சார்ஜ் சீட் போடுய்யா, கோர்ட்ல போயி காலைல இருந்து சாயந்திரம் வரை நின்னு 5000ரூ பைன் கட்டினாதான் இவனுங்களுக்கு புரியும்.

(தொடரும்ம்ம்)

ஜன்னலோரத்து தேவதைகள் - 2

ஓகே ஓகே வந்தாச்சி வை கூட்டம் வேற அதிகம், தேங்க் யூ பாஸ்...
( தேடினாலும் கிடைக்காத சர்ப் எக்ஸெல் கறையை போல காணாமல் போயிருந்தாள் அவள் )

பாஸ், சேப்பாக்கம் தாண்டியாச்சா, அட அதை தாண்டி வண்டி தலைமை செயலகமை நெருங்கிட்டு இருக்கு.

அய்யயோ, ஹோல் டன் ஹோல் டன்.........

கண்டக்டரிடம் சில வசவுகளையும், இறங்குகையில் சிலரின் பாதங்களை மிதித்த காரணத்தினால்
சில பயணிகளிடம் பெற்ற திட்டுக்களையும் கதைக்கு அவசியமில்லை என்பதால், பேருந்தில் இருந்து இறங்கியது நாம் அடுத்த காட்சியை எப்பவும் போல கண்ணகி சிலையிலே ஆரம்பிப்போம்)

ஒழுங்கா சொன்ன நேரத்துல வர முடியாதா உன்னால

இல்லே மீரா மழை, வண்டி மக்கர், போதாதுக்கு பஸ்காரன் வேற பிரச்சனை

ஏன் ஆட்டோல வர வேண்டியது தானே...

சட்.. ஆமால்லே ஆட்டோல வந்திருக்கலாம் இல்லே,

உனக்கு என்னை பார்க்க வர விருப்பம் இல்லை, அதான் இப்படி நொண்டி சாக்கு சொல்றே.

சே, ஏன் இப்படிலாம் பேசற, நீ இவ்ளோ தூரம் கூப்பிட்டும் வராம போவேனா.

இல்லே அர்ஜூன் நான் கல்யாணம் பண்ணிக்க போறதை உன்னால ஜீரணிக்க முடியலை, அதனால என்னை இப்படி ரொம்ப நேரம் நிக்க வைச்சி என்னை பழி வாங்குறே, சாடிசம்.. சே..

ஏய்..ஏன் அநாவசியமா கோபப்படுற. நான் நீ கூப்பிட்ட அதிர்ச்சியிலே என்னால யோசிக்க கூட முடியலை. ப்ளீஸ் லீவ் இட்..

ஓகே... என்ன சாப்பிடுற..

எனக்கு எதும் வேண்டாம், உனக்கு.. நம்ம கடைசி மீட்டிங்.. உனக்கு நான் உன் கல்யாணத்துக்கு ட்ரீட் கொடுக்க விரும்புறேன். எங்க போகலாம் சொல்லு..

ப்ளீஸ் அர்ஜூன், நான் எங்கேயும் வர விரும்பலை, கடைசியா உன் கூட ஒரு 5 மினிட்ஸ் பேசனும்னு நினைச்சேன். அவ்ளோதான்

ஜஸ்ட் ஐஸ்க்ரீம்?

என் மேலே கோபம் இல்லையே?

-

இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?

சிரிப்பு இல்லே. புன்னகை. கோபம் இல்லைனு காட்டறேன்.

பொய் சொல்லாதடா, சாரி... பொய் சொல்லாத. என் மேல உனக்கு கோபமே இல்லையா.

நிறைய இருந்துச்சி... இப்போ இல்லே..

நீ என்னை புரிஞ்சிப்பனு நினைகிறேன்..

இல்லேனா வந்த்ருக்க மாட்டேன்.

ஐ டோண்ட் ஹாவ் எனி சாய்ஸ்டா... கடைசியா ஒரே டா,

நான் அதை பத்தியே பேச விரும்பலை, உனக்கு என்ன ஐஸ்க்ரீம், அதே சாக்கோ ஸ்டிக்கா?

ம்ம்.. உனக்கு எப்போ?

அதோ அந்த பிகர் மட்டும் ஓகே சொன்னா இப்பவே ஓடிபோயி கல்யாணம் பண்ணிப்பேன்.

நான் விட்டு போனது வருத்தமா இல்லையா?

சந்தோசமா இருக்கு? இதுவே முன்னே மாதிரி இருந்தா அந்த பொண்னை சைட் அடிச்சி இருக்க முடியுமா...

இது என்னோட இன்விட்டேசன்.... முதல் இன்விடேசன் உனக்குத்தான்.. நான் கிளம்பட்டுமா

கல்யாணம் முடிஞ்சதும் ஸ்டேட்ஸ் போயிடுவியா...

யா, இரண்டே நாள்தான், அப்புறம் மூன்றாவது நாள் சூர்யோதயம் அங்கேதான்.

ஆல் த பெஸ்ட்... உனக்கு எப்பவும் நல்லதே நடக்க ஆண்டவன் அருள் புரியட்டும்.

தேங்க்ஸ்... நான் கிளம்பறேன்,

நான் ஆட்டோ கூப்ப்.......

நான் என் வண்டிலதான் வந்தேன். பை... சீ யூ

மறுபடியுமா

ஓஹ்.. சாரி.. பை... குட் பை..

----------------------------------------

என்னடா அர்ஜூன் ஏன் இவ்ளோ லேட்டு...
உப்ப்.. என்ன கண்றாவிடா இது செம்ம தண்ணியா,

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம கோபமா கேட்கிறாடா.

என்னடா சொல்ற, யாரு உங்கிடட் கோபமா கேட்டா

வருத்தமா இல்லையானு கேட்கிறாடா?

டேய் என்னடா சொல்ற என்ன பிரச்சனை?

சாய்ஸ் இல்லையாம். அமிஞ்சிக்கரையா அமெரிக்காவ என்ற சாய்ஸ்ல அமெரிக்கா....

என்னடா சொல்ற. நீ என்ன அமெரிக்கா போகப்ப் போறியா.

உவ்வ்வ்வ்

நிம்மதியா தூங்க விடமாட்டிங்களாடா

-------------------------------------

அடுத்த நாள் காலை
------------------------------

அர்ஜூன், என்ன ஆச்சு

நத்திங்...

ஏய் என்ன நொத்திங், திடிர்னு தண்ணியடிச்சிட்டு வந்தே, அமெரிக்கான்றே, யாரோ கோபமா கேட்டாங்கன்றே,

மிஸ்டர் மணி..

எஸ்... இட்ஸ் மீ...

உனக்கு எங்கூட தங்க விருப்பமில்லைனா, உன் ரூமை மாத்திகிட்டு போ. அநாவசியமா என்னை தொல்லை பண்ணாதே.

அட, என்னமோ வருத்தத்திலே இருக்கியேனு கேட்டேன்பா, உனக்கு இஸ்டமில்லாட்டி எதும் சொல்ல வேண்டாம், சரி நான் கிளம்பறேன்..

வெயிட் என்னை, மௌண்ட் ரோட்டில விட்டுடு.

உன் வண்டி என்னாச்ச்சி... சரி சரி ட்ராப் பண்ணிடறேன்.

*************

அண்ணா சாலையில்.
------------------------------

இங்கயே நிறுத்துடா... வாடா ஒரு தம் அடிச்சிட்டு போவ.

இல்லே எனக்கு நேரமாகிடுச்சி...

அட, வாடா... உன்னை வேற திட்டிட்டேன். ஐம் சாரி, நேத்து கொஞ்சம் அதிகமா போயிடுச்சி.
எப்படி வந்தேன்னே தெரியலை. பாஸ் மாதுளம் ஜூஸ் ஒன் பை டு..

பைக் என்னாச்சி...

அது ஆபிஸ்லயே இருக்கு, டோண்ட் வர்ரி,
(சார் ஜூஸ் இந்தாங்க)
நேத்து உன் மேலையே வாமிட் பண்ணிட்டேன் இல்லே

ஏம்பா அதை பேச உனக்கு வேற நேரம் கிடைக்கலையா, நான் முதல்ல ஜூஸ் சாப்பிட்டுடறேனே.

ஹ ஹ, ஓகே ஓகே குடி, ஈவ்னிங் பேசிக்கலாம்.

மச்சி அங்கே பாரு...

எங்கே...

அந்த பஸ்ல.. ஜன்னலோரத்துல

ஆமாம், அந்த யெல்லோ சுடிதார்....

உன்னை மொறைச்சி பார்த்துட்டே போகுதுல்லே....

ஆமாம்டா.. யார் அவ,

என்னைக்கேட்டா...

இவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.....


(தொடரும்ம்ம்)

30 October 2009

ஜன்னலோரத்து தேவதைகள் - 1

சொட்டு சொட்டாக சொட்டிக்கொண்டிருந்தது மழைத்துளி, மழையில் நனைந்து அனுபவிக்காத விரக்தியில் மேகம் போல் கருத்து போனது அர்ஜூனின் முகம். அதற்கு காரணமான 15000 மதிப்புள்ள அழைப்பேசியில் யாருடனோ கிசு கிசுத்து கொண்டிருந்தான்.

(இப்படி சிறுகதை பாணியிலே தொடர்ந்தா எனக்கு அழுகிய முட்டை வீச்சு நிச்சயம் என்ற பயத்தில், அதே உரைநடை டைப்புக்கு மாறிக்கிறேன்)

ஹலோ, நான்தான் பேசறேன்....

*****

நான் என்ன பண்ண மழை வரும்னு எனக்கு எப்படி தெரியும்

*****

ஏய்ய்ய், புரிஞ்சிக்கோயேன் ப்ளீஸ்...

****

ஆபிஸ் வாசலிலேயே நிக்கறேன்...

****

வண்டி மழையிலே நனைஞ்சி ப்ராப்ளம்னு மெஸ்ஜேஜ் அனுப்பினேன் நீ பார்க்கலையா

****

சரி, சரி... நீ சாமியாடாத, எப்படியாச்சும் பஸ்ல வந்து சேர்ரேன் போதுமா

****

நீ எங்கே இருக்க, அதே இடத்துலதானே

****

சரி.. நான் அங்கயே வரேன், 20 நிமிசத்துல அங்கே இருப்பேன் ஓகேவா...
(கடவுளே)...

------------------------------------

(DMS பேரூந்து நிறுத்தம், சென்னை..)

பாஸ், மெரினாக்கு எந்த பஸ் இங்க இருந்து

13B வருங்க. அப்புறம் 11H கூட போகும், இரண்டும் வெவ்வேறு ரூட்டுங்க,

ஓகே பாஸ், தாங்க் யூ...

11H வருது பாருங்க...

அட, ரொம்ப நன்றிங்க, வரேங்க...

(டபார்னு பேருந்தின் படிக்கட்டின் முதல் படியில் வலது காலை வைத்து, பேருந்தின் இரண்டாம் படியில் இடது காலை வைத்து பேருந்தினுள் நுழைந்தான் அர்ஜூன் எனெற்ல்லாம் எழுதிட்டு இருக்க முடியாது )

சார் மெரினா ஒன்னு கொடுங்க சார்

சில்லரை கொடுங்க சார் எல்லாருமே 50-100னு நீட்டினிங்கனா எங்கே போவேன் சில்லரைக்கு சொல்லுங்க

(சில்லரை சதீசை கூட்டிவந்து அடமானம் வச்சியிருக்கனும்) சார் டிக்கெட் எவ்ளோ சார்,

7ரூ

ஓ சாரி, இந்தாங்க 10ரூ..

சார் ஒரு 2ரூ இருந்தா கொடுங்க, மிச்சம் 5 ரூபாய கொடுத்திடறேன்.

ஓ சாரி பாஸ், எங்கிட்ட வேற சேஞ் இல்லை சார்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.

ஓகே, நோ ப்ராப்ளம்
(சே இந்த செல்போன் வேற... இப்ப எஸ் எம் எஸ் வேற டைப் பண்ணனுமா இந்த கூட்டத்துல... wait. ill rch 20mins.k )

எஸ்க்யூஸ் மீ... சேப்பாக்கம் ஒன்னு...

எக்கிட்ட ஏன் கொடுக்கிறிங்க, ஓ ஓகே, ஐ வில் ஹெல்ப் யூ டோண்ட் வர்ரி.
பாஸ்.. சேப்பாக்கம் ஒன்னு...

7ரூ. டிக்கெட் சார், சேஞ் 2ரூ இருந்தா கொடுங்க 5ரூ தந்துடறேன்.

மேடம்... 2ருப்பிஸ் இருக்கா, ஹி வாண்ட் எக்ஸாக்ட் ருப்பிஸ்.

இல்லை, மெதுவா சேப்பாக்கம் பக்கத்துல வந்ததும் கொடுத்தா போதும்.

பாஸ் சேப்பாக்கம் வந்ததும் கொடுத்திருங்க.
(ஓ காட் ஒரு 5 மினிட்ஸ் விடறதில்லை, உடனே போன் பண்ணிடறது சே)
ஹலோ... என்னா சொல்லு....

*****

வந்துட்டேன், பக்கத்துல வந்துட்டேன்,

****

இன்னும் 5 நிமிசத்துல அங்கே இருப்பேன்
(சேப்பாக்கம் ஸ்டாப் வந்ததை அறியாமல் போனில் பிசியாக அர்ஜூன்.

இந்தாங்க சார் பேலன்ஸ் 6ரூ. உங்களோடதும், அந்த மேடமோடதும்

ஓகே ஓகே வந்தாச்சி வை கூட்டம் வேற அதிகம், தேங்க் யூ பாஸ்...
( தேடினாலும் கிடைக்காத சர்ப் எக்ஸெல் கறையை போல காணாமல் போயிருந்தாள் அவள் )

பாஸ், சேப்பாக்கம் தாண்டியாச்சா, அட அதை தாண்டி வண்டி தலைமை செயலகமை நெருங்கிட்டு இருக்கு.

அய்யயோ, ஹோல் டன் ஹோல் டன்.........

(தொடரும்ம்ம்ம்)