04 November 2009

ஜன்னலோரத்து தேவதைகள் - 3

உன்னை மொறைச்சி பார்த்துட்டே போகுதுல்லே....

ஆமாம்டா.. யார் அவ,

என்னைக்கேட்டா...

இவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.....

சரிடா நான் கிளம்பறேன்

இருடா என்ன அவசரம், கொஞ்சம் அந்த பஸ்ஸை பாலோ பண்ணிட்டு போகலாம்.

டைம் ஆகிடும் டா...

இரு நான் ஓட்டறேன் நீ பின்னால உட்காரு.....

(இன்னிக்கு லீவு போட வைச்சிடுவான் போல இருக்கே)இருடா நல்லா உட்கார்ந்துக்கிறேன், ம்ம்ம். கிளம்பு

மச்சி, எங்கிட்ட சேஞ்ச் இல்லை, நீ பில் செட்டில் பண்ணிட்டு வாடா.

(ஓசில கிடைக்கிதுனு நின்னது எவ்வளவு பெரிய தப்பு, காலைலயே 50ரூக்கு ஆப்பு வைச்சிடானே)கொடுத்தாச்சி கிளம்பு....

(அந்த பஸ்ஸை துரத்தி பயணத்தை ஆரம்பித்தாயிற்று)

என்னடா 2-3 பஸ் ஒரே கலர்ல இருக்கு, நாம எந்த நம்பரைடா பார்த்தோம்.

23சி.

எஸ்ஸ்ஸ்... பிடிச்சிட்டேன்..........

மெதுவா போடா, காலைல பீக் ஹவர் ட்ராபிக்ல இப்படியா வேகமா போவாங்க.

அந்த ஆரஞ்ச் கலர்தானே.........

யாரை பாலோ பண்றோம்னு கூட தெரியாமலயே பாலோவிங்கா... ஆரஞ்ச் இல்லே யெல்லோ...

ம்ம். பரவாயில்லே... ஆரஞ்சும் நல்லாதான் இருக்கு.

ஏய், அங்க பாரு அந்த பொண்ணு உன்னை பார்த்து மறுபடி முறைக்கிறா. பக்கத்துல போ..

ஹலோ..... உங்க பேர் என்ன்ன்னா...

யார் டி அவன், என்னத்துக்கு உன் பேர் கேட்டு பாலோ பண்றான்

உஷ்... கம்முனு வா.. அவனை பார்க்காதே

ஏய்.. உன்னைத்தான்... உன் பேர் என்ன.. ஏய் யெல்லோ....

என்னதாண்டி பிரச்சனை. யார் அவன், தெரிஞ்சவனா, தெரியாதவனா... டீஸ் பண்றானா டெய்லி,எதாச்சிம் சொல்லித்தொலையேன்...

இறங்கினதும் சொல்றேன், இப்போதிக்கு அவன் பக்கம் பார்க்காம வா.

மணி என்னடா ரெஸ்பான்சே இல்லை. அடுத்த ஸ்டாப்ல போயி இறங்கி நான் பஸ்ல போயிடட்டுமா,

ஓ..வெரி குட் ஐடியா (அப்பாடி நான் எஸ்கேப் ஆகிடலாம்),

அடுத்த ஸ்டாப் என்ன நந்தனம்தானே..... (விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

மெதுவாடா... வண்டியை கொண்டு போய் சாத்திடாதே....

---------

போச்சி போச்சி... சிக்னல் விழுப்போகுது ஸ்லோ ஸ்லோ ஸ்லோ......போச்சி ரெட் விழுந்துடுச்சே..........
(க்ரீஈஈச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்)

எப்படி நிறுத்தினேன் பார்த்தியா.......

அடப்பாவி... பார்டரை தாண்டி நிறுத்தி தொலைச்சிட்டியேடா.. போச்சி போச்சி.. சிட்டிசன் அங்கிள் வராரே...

என்னய்யா வண்டி ஓட்டறிங்க... இபப்டித்தான் வேகமா ஓட்டிட்டு வருவீங்களா. வண்டியை ஓரங்கட்டுங்க.

சார், சார்.. வண்டி என்னோடது சார்.. அவசரமா ஹாஸ்பிடலுக்கு போயிட்டு இருந்தோம் சார்,எங்க அண்ணனுக்கு ஆக்சிடன் ஆகி அப்போலால அட்மிட் பண்ணியிருக்காங்க சார், அதான்

வண்டில எல்லா பேப்பர்ஸும் இருக்கா,

இருக்கு சார். ஆர்.சி.. இன்சூரன்ஸ், இந்தாங்க என்னோட லைசென்ஸ்....

நீ வண்டி ஓட்டிட்டு வரலையே இவன் தானே ஓட்டினான், உன்னோட லைசென்ஸ் எங்கே...

சார்ர்ர்.

என்ன.. லைசென்ஸ் இல்லையா.. கண்ணுலாம் சிவந்திருக்கு. ட்ரங் & ட்ரைவிங்கா,ஊது...

சார்.. இல்ல சார். வர அவசரத்துல லைசென்ஸ் எடுத்துட்டு வர மறந்துட்டேன் அதான்.

யோவ் ஊதுய்யானா என்னமோ பொலம்பிட்டு இருக்க..

உப்ப்... உப்ப்ப்

கன்பார்ம்டு... யோவ் செல்லப்பா.. இங்க வாய்யா.. குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு வரானுங்க, இவனுங்களை வந்து கவனிச்சிக்கோ...

சார் சார் யாராச்சும் காலைலயே தண்ணியடிப்பாங்களா சார், அது நேத்து அடிச்சி மிச்சத்தோட வீச்சம் சார்.

தம்பி பேசிகிட்டே இருந்தா எப்படி........ வண்டியை ஓரங்கட்டு...

போச்சி போச்சி.. உங்கூட ஜூஸ் சாப்பிடலாம்னு வந்ததுக்கு அப்போ 50ரூக்கு வச்ச ஆப்ப்பு. இப்ப இவிங்க எவ்ளோ கேட்கப்போறாங்களோ...

ம்ம். வண்டி யாருது...

சார் என்னோட வண்டிதான் சார், எங்கிட்ட லைசென்ஸ் இருக்கு சார், நான் குடிக்கிறது இல்ல சார்.

உஸ்ஸ்ஸ். வண்டி உனக்கு வேணுமா வேண்டாமா..

வேணும் சார்...

சரி ஒரு 1000ரூ கொடுத்துட்டு வண்டியை எடுத்துட்டு போ...

1000வா, சார் ரொம்ப அதிகம் சார். எப்பவும் 50-100ரூ வாங்கிறதுதானே சார் வழக்கம்.

அது வெறும் லைசென்ஸ் கேசு, இது ட்ரங் & ட்ரைவ்.. இதுக்கு மாமூலா 1000தான் ரேட்.

சார் அவ்ளோ இல்லை சார். ஒரு 100ரூபா.......

யோவ் இவனுங்க வேலைக்காக மாட்டாங்க, நீ சார்ஜ் சீட் போடுய்யா, கோர்ட்ல போயி காலைல இருந்து சாயந்திரம் வரை நின்னு 5000ரூ பைன் கட்டினாதான் இவனுங்களுக்கு புரியும்.

(தொடரும்ம்ம்)

No comments: