04 November 2009

ஜன்னலோரத்து தேவதைகள் - 2

ஓகே ஓகே வந்தாச்சி வை கூட்டம் வேற அதிகம், தேங்க் யூ பாஸ்...
( தேடினாலும் கிடைக்காத சர்ப் எக்ஸெல் கறையை போல காணாமல் போயிருந்தாள் அவள் )

பாஸ், சேப்பாக்கம் தாண்டியாச்சா, அட அதை தாண்டி வண்டி தலைமை செயலகமை நெருங்கிட்டு இருக்கு.

அய்யயோ, ஹோல் டன் ஹோல் டன்.........

கண்டக்டரிடம் சில வசவுகளையும், இறங்குகையில் சிலரின் பாதங்களை மிதித்த காரணத்தினால்
சில பயணிகளிடம் பெற்ற திட்டுக்களையும் கதைக்கு அவசியமில்லை என்பதால், பேருந்தில் இருந்து இறங்கியது நாம் அடுத்த காட்சியை எப்பவும் போல கண்ணகி சிலையிலே ஆரம்பிப்போம்)

ஒழுங்கா சொன்ன நேரத்துல வர முடியாதா உன்னால

இல்லே மீரா மழை, வண்டி மக்கர், போதாதுக்கு பஸ்காரன் வேற பிரச்சனை

ஏன் ஆட்டோல வர வேண்டியது தானே...

சட்.. ஆமால்லே ஆட்டோல வந்திருக்கலாம் இல்லே,

உனக்கு என்னை பார்க்க வர விருப்பம் இல்லை, அதான் இப்படி நொண்டி சாக்கு சொல்றே.

சே, ஏன் இப்படிலாம் பேசற, நீ இவ்ளோ தூரம் கூப்பிட்டும் வராம போவேனா.

இல்லே அர்ஜூன் நான் கல்யாணம் பண்ணிக்க போறதை உன்னால ஜீரணிக்க முடியலை, அதனால என்னை இப்படி ரொம்ப நேரம் நிக்க வைச்சி என்னை பழி வாங்குறே, சாடிசம்.. சே..

ஏய்..ஏன் அநாவசியமா கோபப்படுற. நான் நீ கூப்பிட்ட அதிர்ச்சியிலே என்னால யோசிக்க கூட முடியலை. ப்ளீஸ் லீவ் இட்..

ஓகே... என்ன சாப்பிடுற..

எனக்கு எதும் வேண்டாம், உனக்கு.. நம்ம கடைசி மீட்டிங்.. உனக்கு நான் உன் கல்யாணத்துக்கு ட்ரீட் கொடுக்க விரும்புறேன். எங்க போகலாம் சொல்லு..

ப்ளீஸ் அர்ஜூன், நான் எங்கேயும் வர விரும்பலை, கடைசியா உன் கூட ஒரு 5 மினிட்ஸ் பேசனும்னு நினைச்சேன். அவ்ளோதான்

ஜஸ்ட் ஐஸ்க்ரீம்?

என் மேலே கோபம் இல்லையே?

-

இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?

சிரிப்பு இல்லே. புன்னகை. கோபம் இல்லைனு காட்டறேன்.

பொய் சொல்லாதடா, சாரி... பொய் சொல்லாத. என் மேல உனக்கு கோபமே இல்லையா.

நிறைய இருந்துச்சி... இப்போ இல்லே..

நீ என்னை புரிஞ்சிப்பனு நினைகிறேன்..

இல்லேனா வந்த்ருக்க மாட்டேன்.

ஐ டோண்ட் ஹாவ் எனி சாய்ஸ்டா... கடைசியா ஒரே டா,

நான் அதை பத்தியே பேச விரும்பலை, உனக்கு என்ன ஐஸ்க்ரீம், அதே சாக்கோ ஸ்டிக்கா?

ம்ம்.. உனக்கு எப்போ?

அதோ அந்த பிகர் மட்டும் ஓகே சொன்னா இப்பவே ஓடிபோயி கல்யாணம் பண்ணிப்பேன்.

நான் விட்டு போனது வருத்தமா இல்லையா?

சந்தோசமா இருக்கு? இதுவே முன்னே மாதிரி இருந்தா அந்த பொண்னை சைட் அடிச்சி இருக்க முடியுமா...

இது என்னோட இன்விட்டேசன்.... முதல் இன்விடேசன் உனக்குத்தான்.. நான் கிளம்பட்டுமா

கல்யாணம் முடிஞ்சதும் ஸ்டேட்ஸ் போயிடுவியா...

யா, இரண்டே நாள்தான், அப்புறம் மூன்றாவது நாள் சூர்யோதயம் அங்கேதான்.

ஆல் த பெஸ்ட்... உனக்கு எப்பவும் நல்லதே நடக்க ஆண்டவன் அருள் புரியட்டும்.

தேங்க்ஸ்... நான் கிளம்பறேன்,

நான் ஆட்டோ கூப்ப்.......

நான் என் வண்டிலதான் வந்தேன். பை... சீ யூ

மறுபடியுமா

ஓஹ்.. சாரி.. பை... குட் பை..

----------------------------------------

என்னடா அர்ஜூன் ஏன் இவ்ளோ லேட்டு...
உப்ப்.. என்ன கண்றாவிடா இது செம்ம தண்ணியா,

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம கோபமா கேட்கிறாடா.

என்னடா சொல்ற, யாரு உங்கிடட் கோபமா கேட்டா

வருத்தமா இல்லையானு கேட்கிறாடா?

டேய் என்னடா சொல்ற என்ன பிரச்சனை?

சாய்ஸ் இல்லையாம். அமிஞ்சிக்கரையா அமெரிக்காவ என்ற சாய்ஸ்ல அமெரிக்கா....

என்னடா சொல்ற. நீ என்ன அமெரிக்கா போகப்ப் போறியா.

உவ்வ்வ்வ்

நிம்மதியா தூங்க விடமாட்டிங்களாடா

-------------------------------------

அடுத்த நாள் காலை
------------------------------

அர்ஜூன், என்ன ஆச்சு

நத்திங்...

ஏய் என்ன நொத்திங், திடிர்னு தண்ணியடிச்சிட்டு வந்தே, அமெரிக்கான்றே, யாரோ கோபமா கேட்டாங்கன்றே,

மிஸ்டர் மணி..

எஸ்... இட்ஸ் மீ...

உனக்கு எங்கூட தங்க விருப்பமில்லைனா, உன் ரூமை மாத்திகிட்டு போ. அநாவசியமா என்னை தொல்லை பண்ணாதே.

அட, என்னமோ வருத்தத்திலே இருக்கியேனு கேட்டேன்பா, உனக்கு இஸ்டமில்லாட்டி எதும் சொல்ல வேண்டாம், சரி நான் கிளம்பறேன்..

வெயிட் என்னை, மௌண்ட் ரோட்டில விட்டுடு.

உன் வண்டி என்னாச்ச்சி... சரி சரி ட்ராப் பண்ணிடறேன்.

*************

அண்ணா சாலையில்.
------------------------------

இங்கயே நிறுத்துடா... வாடா ஒரு தம் அடிச்சிட்டு போவ.

இல்லே எனக்கு நேரமாகிடுச்சி...

அட, வாடா... உன்னை வேற திட்டிட்டேன். ஐம் சாரி, நேத்து கொஞ்சம் அதிகமா போயிடுச்சி.
எப்படி வந்தேன்னே தெரியலை. பாஸ் மாதுளம் ஜூஸ் ஒன் பை டு..

பைக் என்னாச்சி...

அது ஆபிஸ்லயே இருக்கு, டோண்ட் வர்ரி,
(சார் ஜூஸ் இந்தாங்க)
நேத்து உன் மேலையே வாமிட் பண்ணிட்டேன் இல்லே

ஏம்பா அதை பேச உனக்கு வேற நேரம் கிடைக்கலையா, நான் முதல்ல ஜூஸ் சாப்பிட்டுடறேனே.

ஹ ஹ, ஓகே ஓகே குடி, ஈவ்னிங் பேசிக்கலாம்.

மச்சி அங்கே பாரு...

எங்கே...

அந்த பஸ்ல.. ஜன்னலோரத்துல

ஆமாம், அந்த யெல்லோ சுடிதார்....

உன்னை மொறைச்சி பார்த்துட்டே போகுதுல்லே....

ஆமாம்டா.. யார் அவ,

என்னைக்கேட்டா...

இவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.....


(தொடரும்ம்ம்)

No comments: