நண்பர்களது எந்தவொரு ஊக்குவிப்பையும் செயல்படுத்தாமுடியாமல் ஒன்று தடுத்தது, சமீபகாலங்களில்தான் அதற்கும் ஒரு பெயர் உண்டு என்பதை அறிந்துகொண்டேன்.
நாளிடைவில் அவளது வருகை குறைய தொடங்கியது. அவள் வராத நாட்களில் பசியின் இடம் மாறிப்போனது. வலி மட்டும் மாறாமலே இருந்தது. இரவு தூக்கம் நள்ளிரவை தாண்டியே தொடங்கியது. எலும்புக்கூடாக மாறிக்கொண்டிருந்தேன். சில தினங்களில் அவளது சிறிய அத்தியாயம் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவளை வேறொருவருடன் மெரினாவில் பார்த்ததும் முற்றுப்பெற்று போனது.
மீண்டும் அதே வேலை, அதே சம்பளம், அதே செலவு. நாளிடைவில் அவளிடம் தோற்றுப்போனதும் மீண்டும் பசியிடம் தோற்க ஆரம்பித்தேன்.
என்னுடன் ஐடிஐயில் ஒன்றாக படித்த சுந்தர், எதோ ஒரு இழையை கைகளில் வைத்து நம்பியார் போல பிசைந்து அதை பீடியிலே வைத்து சுருட்டி புகைக்கும் போது “ டேய் மனுசன் எதுக்குடா உயிர் வாழ்றான். என்று அவனே கேள்வி கேட்டு அவனே பதிலும் சொல்லுவான், அவன் சொல்லுவது ஒன்று சாப்பாடு, மற்றொன்றை அவன் இதுவரை சொன்னதே இல்லை, அதற்கு பதிலாக சிரிப்பு மட்டுமே வரும் அவனிடம் இருந்து, நாள் பூரா சிரித்துகொண்டே இருப்பான்,
மேன்சனில் வாழ்ந்த 48 வயது அருள்தாஸ் சொல்லிதான் இரண்டாவதை புரிந்து கொண்டேன் 10 வருடங்கள் களித்து. அருள்தாஸ் கவிதை, கதை எதாச்சிம் கிறுக்கி கொண்டிருப்பார், ஊரில் அப்பா, அம்மா இன்னும் இவரின் அண்ணாவின் பாதுகாப்பில்தான். அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே நாளில் திருமணம், அண்ணனுக்கு பெண் பார்க்க போன போது அந்த இடத்திலே பெண்ணின் தங்கைக்கும் அருள்தாசுக்கும் நிச்சயிக்கப்பட்டு ஒரே நாளில் இரண்டு திருமணமும் நடந்தேறியது.
திருமணமான இரண்டாவது வாரம் , அந்தப்பெண் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். அவமானம் தாங்காமல் சென்னை ஓடி வந்துவிட்டார் அருள்தாஸ், 25 வருடங்களாக சென்னையிலே பிரம்ச்சர்யம். சென்னையிலே எந்தெந்த இடத்தில் என்ன இருக்கும் என்பது இவருக்கு அத்துப்படி. மாடி ரூம் சுந்தரேசன், தனது மார்கெட்டிங்க் ஆர்டர்களை பிடிக்க இவரைத்தான் பயன்படுத்திக்கொள்கிறான், கமிசனே 5000ரூ வாங்கி விடுவார் அருள்தாஸ்.
சினிமாத்துறையில் ஆல் இன் ஆல், ஒரு முறை ஜெயிலுக்கும் போய் வந்தாயிற்று, சென்னை செண்ட்ரல் ஜெயிலுக்கு கடைசியா போனது நாந்தான்னு சொல்லி பெருமையடித்துக்கொள்வார்.
இருட்டையும், பனியையும் தின்று தீர்த்தன் சூரியன் நடு உச்சியில் பெருமூச்சி விட்டுக்கொண்டிருந்தது. இன்று வாராந்திர விடுமுறை, ஒவ்வொரு வியாழனும் விடுமுறை. இது ஒரு வகையில் எனக்கு நல்லதாகவேபட்டது, மேன்சன் நண்பர்கள், என்னை ஞாயிறுகளில் சினிமாவிற்கு அழைக்கமாட்டார்கள். எனக்காக செலவழிக்க அவர்கள் முற்படலாம், இப்போது இருக்கும் மரியாதையும் அப்போ இருக்குமா என்ற பயம்.
கர்ணனை போல் துரியோதனர்களுக்கு நன்றிக்கடன்பட நான் விரும்பவில்லை.
முன்பு அவர்கள்தான் என் காலை வேளை தேனீர் ஆசையை இலவசமாக தீர்த்து வைப்பவர்கள்.
அருகில் இருக்கும் கடைகளுக்கு செல்லாமல் எப்போதும் தொலைவில் உள்ள கிருஷ்ணன் கடைக்கே செல்லுவது வாடிக்கை, காலை நேர நடைபயிற்சி என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
நாளிடையில் எனக்கு புரிய ஆரம்பித்தது. அப்போதெல்லாம் அவர்கள் எழுப்பும் முன் தயாராக இருப்பேன். நடுவில் சொந்த கிராமத்துக்கு சென்று வந்தேன்.
என் தங்கைதான் வாசல் தெளித்து கோலமிட்டு கொண்டிருப்பாள். அவர்களுடன் தேனீர் குடிக்க செல்லுவதை நிறுத்திக்கொண்டேன். ஒரு நாள் கீழ் அறை ராஜூ ஏன் என்று கேட்ட பொழுது அவனிடம் மட்டும் சொன்னேன். எங்கள் வீட்டுல வேலைக்கார கிழவிதான் கோலம் போடும்னு அலறலாக சிரித்தான்.
மனிதர்களுக்கு என்றே பிரத்யேகமான உணர்வு சிரிப்பு. காரணங்கள் மட்டும்தான் வெவ்வேறாக இருக்கின்றன. அருள்தாஸ் ஒரு முறை குரங்குகளும் சிரிக்கும் என்று சொன்னது நியாபகம் வந்தது. நானும் சிரித்தேன்.
வேலை நாட்களை விட விடுமுறை தினத்து பசி மென்மையானது. பாக்டரி அருகில் இருக்கும் ஒரே ஒரு ஹோட்டலில் புதுப்பட சினிமாவிற்கு போவது போல் கூட்டதை மீறி சென்று சாப்பிட அமரவேண்டும், அந்த போராட்டத்திலேயே பசியின் வலி உச்சமடையும். சாம்பார், காரக்குழம்பு, ரசம் முடித்து மோர் சாதத்திற்கு வரும் முன்னரே அடுத்த பந்திக்கு தயாராவதற்காக நம்மையே வெரித்து பார்த்து பலர் இருப்பார்கள், ஆரம்ப காலங்களில் மோரை புறக்கணித்து எழுந்துவிடுவேன், இப்போது பழகிவிட்டது.
விடுமுறை தினங்களில் எந்த பிக்கல் பிடுங்களும் இல்லாமல் திருவல்லிக்கேணி ஆந்திரா சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கலாம். முன்பெல்லாம் ஆந்திரஹோட்டலில் வேலை செய்யும் சிறுவர்கள் ஆம்ப்லேட் வேணுமான்னா, முட்டைபொறியல் வேணுமா, சிக்கன் வேணுமா என்று கேட்டுத்துளைப்பார்கள், இப்போது யாரும் கேட்பது இல்லை, ஒவ்வொரு மாத சம்பள தினத்திலும் இன்னு சிக்கன் சாப்பிடனும்னு வைராக்கியமாக கிளம்புவேன். சிக்கன் விலை 100கிராம். 40ரூ என்பதை பார்த்ததும்
வைராக்கியம் பொடிப்பொடியாகி இருக்கும்.
தங்கைக்கு சென்ற வருடத்தின் மத்தியில் திருமணம் நடந்தேறியது. எங்கள் அய்யா ரத்தவாந்தி எடுத்த சில தினங்களில் அமரராகி போனார், அவரது எல் ஐ சி பாலிசியில் கிடைத்த பணத்தை கொண்டு 5 பவுன், 10000 ரொக்கத்தில் எங்கள் சொந்தத்திலேயே- அப்பாவின் தங்கை - திருமணம் நடத்தி கொடுத்துவிட்டோம். திருமணத்தில் என்னுடைய பணம் முழுவதும் கரைந்து போனது, ஊருக்கு திரும்ப பணமில்லாமல் அம்மாவின் உதவியை நாடினேன். அம்மா வீட்டில் எதையும் விற்க முடியுமா என்று தேடிக்கொண்டிருந்தார்கள், தங்கையின் மூலம் இதை அறிந்த அத்தை மகன் தனியாக என்னை அழைத்து 1000ரூ கொடுத்துதவினான், அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்ட சுயமரியாதை அவன் காலடியில் போட்டு அழத்துவங்கி விட்டேன். நீண்ட கதறலுக்கு பின்பே இயல்பாகி போனேன்.
சென்னை திரும்பியதும் முதல் முறையாக கிங்பிஷரும் சிக்கனும் உள்ளே போனது. தங்கையின் கணவரால் வரதட்சனை பிரச்சனை வராது என்ற நம்பிக்கையினால் வந்த சந்தோசத்திலும், 2000ரூ சம்பள உயர்வு - என்னுடைய சகாக்களுக்கு 1000ரூதான்- பெற்றதாலும் கிடைத்த சந்தோசத்திலும், தங்கையின் கணவர் - அத்தை மகன் - தந்த 1000ரூபாயில் 70ரூ டாஸ்மாக்ல் பீருக்கும், 50ரூ ஆந்திரா மெஸ் சிக்கனுக்கும் 30ரூ ஆறு பரோட்டாவுக்கும் செலவானது. 4500ரூபாயில் ஆரம்பித்த சென்னை வாழ்க்கை இரண்டு வருடங்கள் களித்து 6500ரூ ஆகிப்போன குஷியிலும், பீரின் குளுமையிலும்
அன்று இரவு நன்றாக தூங்கி போனேன்.
மாதம் இனி இரண்டாயிரம் என் சேமிப்பு. ஐந்து மாதத்தில் சில ஆயிரங்களுக்கு சொந்தக்காரன் என்ற
நினைப்பே மேலும் போதையூட்டியது.
அடுத்து சிலநாட்களில் எனது போதை தெளிந்து போனது, போதை தெளிந்தால் தலைவலி நிச்சயம்.
நெறுக்க ஆரம்பித்தது
(தொடரும்ம்ம்)
No comments:
Post a Comment