21 May 2009

மீண்டும் வந்தியதேவன் - 2

சரஸ்வதி மகாலில் சந்தித்த உருவம் நினைத்தாமாத்திரத்தில் எதிரில் தோன்றுவதாக தோன்றியது


அப்போது


அந்த உருவம் மெல்ல மெல்ல அவனை நெருங்கியது போல உணர்ந்தான், அது அவனுக்கு கட்டளையிடுவது போல தோன்றியது, அவன் மெதுவாக மூர்சையாகினான்,

திடுக்கிட்டு விழித்துபார்த்தான், ரயில் சேலத்தை நெருங்கி இருந்தது, ஏழு மணி நேர பயணம் ஏழு நொடிகளில் கடந்தது போல உணர்ந்தான்,
ரயில் சேலம் சந்திப்பில் நின்றுகொண்டிருந்தது காலை ஐந்தரை மணியென அங்கிருந்த மணிக்கூண்டு பெரிதாக பரைசாற்றியது. , சப்வேவில் இறங்கி நுழைவாயிலை அடைந்தான்,
எதிர்புறம் இருந்த கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்து இழுத்தான், அது நுரையீரல் வரை சென்று அவனை சுகப்படுத்தியது, அனறு சரஸ்வதிமகாலில் நடந்தது மெதுவாக மனதில் நிழலாடியது, சிலிர்த்தான். சீக்கிரம் நண்பனின் வீட்டுக்கு சென்று என்ன நடந்தது என்று விவரிக்க வேண்டும் என்று தனக்குதானே சொல்லிக்கொண்டு அவனது நண்பனுக்கு கால் செய்ய தொடங்கினான்.

எதிர் முனையில் ரிங் சென்றுகொண்டே இருந்தது, தூங்கி இருப்பானோ. இருக்கலாம், நண்பன் கொஞ்சம் சோம்பேறி என்பதை அவன் அறிவான், இதை எதிர்பார்த்ததுதான் என்பது போல் மெல்லிதாக புன்னைகத்து கொண்டான்,

மீண்டும் முயற்சித்தான்.... பலனில்லை....

கடையில் தூக்ககலக்கத்தோடே இருந்த வாலிபனிடம், ” பாஸ், இங்கே லாட்ஜ் எங்கே இருக்கு.

அவன், “ பக்கத்துல ஒன்னு இருக்கு சார், இப்படிக்கா நேரா போயி வலது பக்கம் திரும்புனிங்கனா ஒரு ரோடு வரும் அந்த ரோட்டுல கடைசிக்கா போனா ஒரு ஒரு லாட்ஜ் இருக்கு சார்.

லாட்ஜ் எப்படி நல்ல டீசண்டான லாட்ஜ்தானே.

அட, ரொம்ப நல்ல லாட்ஜ் சார், உங்களை பார்த்தாவே ராசா வீட்டு கன்னுக்குட்டி மாதிரி இருக்கீங்கனு அந்த லாட்ஜை சொன்னேன், இல்லாங்க்காட்டி, இங்க இருந்து மூனு தெரு தள்ளி ஒரு லாட்ஜ் இருக்கு, அதை சொல்லி இருப்பேன், படு கலீஜ் சார்,

கடைகாரன் பேசியது முதலில் சொன்ன லாட்ஜின் மார்கெட்டிங் எக்ஸிக்கூட்டிவாக இருப்பானோ என்று குரு மனதில் நினைத்தான், சுமார் மூன்று நான்கு மணி நேரம் சிரம பரிகாரம் செய்ய எந்த லாட்ஜா இருந்தாலும் சரியே என்று நினைத்தான், முதலில் சொன்ன லாட்ஜை நோக்கி நடக்க ஆரம்பித்தான்,
அந்த சாலையின் இருபுறமும் கடைகள் இருந்தன, ஆனால் கடைகள் இன்னும் திறக்கப்படாமல் இருந்தன, அந்த சாலையின் வலது பக்கம் திரும்பி சென்று கொண்டே இருந்தான், அவன் மனதில் யாரோ பின் தொடருவது போல இருந்தது, ஆள் நடமாட்டமே இல்லாடமல் சாலை வெறிச்சென்று ஓடியது, பின் யார் வருகிறார்கள் என்று பார்க்க மெதுவாக திரும்பினான்,

யாரும் பின்னாள் இல்லை, மனப்பிரம்மையாக இருக்கலாம் என்று தனக்குதானே சமாதானம் செய்து கொண்டு மீண்டும் நடக்கலானான்,

பாதி தூரம் சென்றது மீண்டும் யாரோ தொடருவது போல காலடிச்சத்தம் கேட்டது.
உடல மெலிதாக சிலிர்த்து நடுங்கியது, இம்முறை சட்டென திரும்பினான்,

(தொடரும்)

(தொடரும்)

No comments: