வகுப்புகள் எப்ப்போதும் போல் நடந்து கொண்டே இருந்தன
தாஸின் புதல்வர்கள் நால்வருக்கும் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவது வழக்கம், குறிப்பாக அம்பு எறிதல், துப்பாக்கி சுடுதல் மாதிரியான வகுப்புகளும் அவர்களுக்கு உண்டு, ஹார்ஸ் ரைடிங் போன்ற கலைகளும் கற்றுதரப்பட்டது,
ரோமொயோ, பிரண்டன், லக்ஸ் மற்றும் சரத் நால்வரும் பிரின்சி விஸ்வாவுக்கு செல்ல பிள்ளைகளாயினர், படிப்பில் மட்டுமல்ல விளையாட்டு, பேச்சி போட்டி, கட்டுரை போட்டி மற்றும் பல்துறை வித்தகர்களாக அவர்கள் மாறி கொண்டிருந்தனர்,
தாஸும் தாஸின் மனைவிகளான கௌஷிகா, கனிகா மற்றும் சுபா என அயோநீர் பங்களா முழுவது குழந்தைகள் இல்லாமல் வெறிச்சோடி இருப்பதை தாங்காமல் சோகத்துடனே இருந்தார்கள்.
பிறகு எல்லாரும் ஏக மனதாக அவர்களை மீண்டும் அழைத்து வர முடிவு செய்தனர், ஆனால் தாஸ் அதற்கு உடன்பட வில்லை, அவர்கள் பள்ளி படிப்பை முடிக்கும் முன் இங்கே வருவதை அவர் சுத்தமாக விரும்பவில்லை,
தாஸ் மாணவர்களை பற்றி அறிய பிரின்சி. விஸ்வாவிடம் தொடர்பு கொண்டார், அவர்களது பட்டப்படிப்பு விரைவில் முடியப்போகிறத்ன்றும், நால்வரும் எல்லாவற்றிலும் சிறந்தவர்களாக உள்ளனர் என்றும் தெரிவித்தார்,
தாஸுக்கு மகிழ்ச்சி தாளமுடியவில்லை, பிறகு விஸ்வா தாஸிடம் ஒரு கோரிக்கை வைத்தார், இண்டர்நேசனல் காம்பட்டீசனுக்கு தங்களது மூத்தமகனான ரோமியோவையும், மூன்றாவது மகன் லக்சையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதாக கூறினார்.
வெளிநாடு என்றதும் முதலில் பதறிய தாஸ், பிரின்சி.விஸ்வாவும் செல்வதால் அரை மனதோடு ஒத்துக்கொண்டார்.
போட்டிக்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் ரோமியோ மற்றும் லக்ஸை தன்னுடன் அழைத்து கொண்டு விஸ்வா கிளம்பினார்
(தொடரும்)
--
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஸ்ரீ"
“யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே
25 May 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment