முன் குறிப்பு:
(வணக்கம், சினிமா திரைக்கதை மாதிரியான ஒரு கதை எழுதலாம்னு யோசிச்சப்ப்ப இப்படி ஒரு கதை எழுதனும்னு தோணிச்சி
அதை எழுத போறேன், படிச்சிட்டு இது அந்த கதை, இந்த கதை, அதை உல்டா பண்ணிட்டேன், இதை கலாட்டா பண்ணிட்டேன்னு
என்னை திட்டப்படாது, இதான் முக்கிய கண்டிசனே)
(காலம் - 20ம் நூற்றாண்டின் எண்பதாம் வருடம்,
சுறுக்கமா சொன்ன ஒரு 25 வருடங்க்ளுக்கு முன்னாள்,
ஒரு டிசம்பர் மாதம் 31ம் தேதியில்)
காட்சி - 1
(இரண்டு பேர் இந்த காட்சியிலே இருக்காங்க, ஒருத்தர் ஸ்ரீ, இனொருத்தரும் ஸ்ரீ தான், முதல் ஸ்ரீதர வெங்கட்டரமணன், இன்னொருத்தன் ஸ்ரீனிவாசலு
சோ இரண்டு பேருமே ஷார்டா ஸ்ரீ, இதுல ஸ்ரீதர வெங்கட்டரமணன் எனும் ஸ்ரீ சினிமால ஹீரோவா ஆக்டு கொடுக்க காத்திட்டு இருக்கும் ஒரு துணை நடிகன், ஸ்ரீனிவாசலு என்பவன் எல்லா தமிழ் சினிவாவிலும் இருப்பது போல ஒரு காமெடிக்கான கேரக்டர், அவனுக்கு அம்மா/அப்பா/பாட்டி/தாத்தா இருக்காங்களா இல்லையா, அவன் சாப்பிட்டானா சாப்பிடலையா அவன் லட்சியம் என்ன அவனோட எதையுமே ஆஸ் யூஸ்வல் தமிழ் சினிமா போல நான் சொல்லவும் போறதில்ல, நீங்க கேட்கவும் கூடாது)
ஸ்ரீ : ஸ்ரீ ஸ்ரீ நான் உன்னை காலைல இருந்து தேடிட்டு இருக்கேன் எங்கேடா போன, உனக்கு ஒரு விசயம் தெரியுமா
(நம்ம ஸ்ரீ நான் எப்படி வருவேன் எதுக்கு வருவேன் ஏன் வரணும்னு பேசற ஹீரோ கிடையாது என்பதால் இப்படி பட்ட பஞ்ச் இல்லாமலே பேச்சி ஆரம்பிக்கிறார்)
ஸ்ரீ : என்னடா மேட்டர், இப்படி தலைதெறிக்க ஓடிவரனா எதுனாச்சிம் செம்ம முக்கியமான மேட்டராதான் இருக்கும், கமலுக்கு டூப் போடுற சான்ஸ் கிடைச்சிடுச்சா என்ன
ஸ்ரீ : அதில்லடா, இன்னிக்கு நைட் நம்ம கோடம்பாக்கம் ஏரியாவிலே இருக்கே ராஜ் ஹோட்டல, அங்க நடக்குற ஹாப்பி நியு இயர் பங்கசனுக்கு நம்ம கமலு வராருப்பா, அதுக்கு இரண்டு டிக்கெட் வாங்கிட்ட்ட்ட்ட்ட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
(சந்தோஷத்தில் இருவருமே கொஞ்ச நேரம் ரோட்டில் ஒரு ஆட்டத்தை போட்டுவிட்டு, ராத்திரி பங்கசனுக்கு நல்ல கலர்புல் ட்ரெஸ் எடுக்க ஸ்டூடியோ போகிறார்கள்)
காட்சி : 2
(இப்ப 3 பேர், நம்ம ஸ்ரீக்கள் தவிர ஒரு கூர்க்காவும் இருக்காங்க)
ஸ்ரீ : என்ன கூர்க்கா சாப், கியா ஹாலே, கானா காயியே
ஸ்ரீ : நீ ஏண்டா வராத இந்தியை கஷ்டப்பட்டு வர வைக்கிறே, நம்ம ஊருதான்பா இவன்,
நம்ம அண்ணாநகரு சின்னசாமி இருக்கான்ல, அவனோட மாமாவோட பெரியப்பா மகந்தான் இவன்,
ஸ்ரீ : அட, அப்பட்டியா, இவன் நிஜ கூர்கா இல்லையா
ஸ்ரீ : ஸ்டூடியோ மேனேஜரு நம்க்கு வேண்ட்டப்பட்டவரு, அவர்தான் சொன்னாரு முதலாளி நல்ல கூர்காவையா போடனும்ன்னு, என்ன இருந்தாலும் கூர்கா அதர் ஸ்டேட்டு, அதர் கண்ட்ரி
ஸ்ரீ : இன்னாப்பா கெட்ட வார்தைல திட்டற
ஸ்ரீ : அட இங்க்லீசுப்பா, ஹீரோவா ஆகனும்னா இங்க்லிஸு பேசனும் இல்லே, அதான் இப்ப இருந்தே பழகறேன்
ஸ்ரீ : சர்தான், பா,
ஸ்ரீ : சின்னசாமி, உள்ளார நம்ம ப்ரொடக்சன் மேனேஜர் இருக்காரா
கூர்கா: ஏன்பா சின்னசாமினு கூப்பிட்டு என் வேலைக்கு குழி வைக்கிறே, குருசிங் போல் ஹை
ஸ்ரீ : அட, ரொம்பதான் பயப்படாத, சுத்தி எவனும் இல்ல, எங்கே புரடகசனுகாரன்
கூர்கா: உள்ளதான் இருக்காரு, கூட வனிதாவும், டிஸ்கஸ் பண்ண கூட்டியாந்தானாம்,
மனசுல டைரகடருனு நினைப்பு, முதலாளி பணம் இப்படியா போகுது
ஸ்ரீ : அட சினிமானா அப்படி இப்படித்தான் இருக்கும், அதெல்லாம் ரோட்டுல இருக்கிற பள்ளமா நினைச்சி வண்டியை ஒதுக்கி
ஒதுக்கி ஓட்டனும், அத வுட்டு பள்ளம் இருக்கே பள்ளம் இருக்கேனு விசனப்பட்டா எதிர் வண்டில மோத வேண்டியதுதான்,
யாருக்கு தெரியும் நம்ம புரடக்சன் மேனேசர் கூட டைரக்டு பண்ணலாம் யார் கண்டா? ஏன் நீ கூட இப்ப கூர்க்கானு ஏமாத்திகினு சுத்தறியே
இதையே ஒரு மேட்டரா வச்சி நீ கூட அண்ணாநகரு கூர்க்கா, கூர்க்காகாரன்னு எதுனாச்சிம் சினிமா எடுக்கலாம், யார் கண்டா நடந்தாலும் நடக்கும்?
ஸ்ரீ : சீக்கிரம், வாப்பா உள்ளே, அவரு வரதுகுள்ளே உள்ளே இருந்து நல்லதா நாலு செட்டு ட்ரெஸை எடுப்போம், இல்லாங்காட்டி இந்த மாதிரி
ட்ரெஸ்ல போனோம் சாயந்திரம் பங்கச்னுக்கு உள்ளே விடமாட்டானுங்கோ.
(இரண்டு ஸ்ரீயும் ஸ்டூடியோ உள்ளே போய் நல்லதா நாலு ட்ரெஸ் எடுத்துகிட்டு, ட்ரெஸ்சிங் ரூம் போறாங்க, ட்ரெஸ்சிங் ரூம் கதைவை மூடும்போது அங்கே கட் பண்றோம் சீனை,)
காட்சி - 3
(இப்ப நிறைய ஜனஙள், அப்புறம் நம்ம இரண்டு ஸ்ரீ மற்றும் முக்கியமா கமல்ஹாசன்)
அங்கே மூடும் போது பண்ண கட், இங்கே ஓப்பன் பண்ணும் போது கதவு திறக்குது, க்தவிலே இருந்து வருவது நம்ம காதல் மன்னன் கமல்)
(தொடரும்)
--
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஸ்ரீ"
“யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே
27 May 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தொடரட்டும் காட்சிகள். அழகான காட்சி நகர்த்தல்
Post a Comment