14 May 2009

தேடி கிடைப்பதில்லை - 1

மச்சி மச்சி எழுத்துருடா,

ஏண்டா கடுப்பேத்துற இன்னும் ஒரு அரை மணிநேரம் போகட்டுமே

டேய் ஸ்ரீ, டைம் 7டா, இப்பவே நீ அரை மணிநேரம் லேட்டு,

என்னது 7ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

டேய் டேய் அப்படியே குளிக்க ஓடுர, துண்டுலாம் வேணாமா

அது குளிக்க தெரியாதவங்க செய்றது,

பேஸ் வாஷ், பண்ண போறேன்னு சொல்லு, அதுக்கு ஏன் இந்த பில்ட் அப். என்னடா அதுக்குள்ல வெளியே வந்துட்ட, குளிச்சிட்டியா

எல்லாம் ஆச்சி,

10நிமிடத்துலே காலை கடன் எல்லாத்தையும் உன்னால மட்டும்தான் முடியும்,

எஸ் நான் ரெடி ஆகிட்டேன், மச்சி வரட்டுமா, நான் கிளம்பிட்டேன் ஆபிஸ்க்கு, போறதுக்கு முன்னாடி சாமி கும்பிடனுமே, எங்கே என் ஆண்டவன்.

(அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே)

டேய் டேய் உனக்கே இது அதிகமாப்டலை, கமல் ப்டத்த கும்பிட்டு போறியேடா.

கமல்தான் என் ஆண்டவர், ஆழ்வார்பேட்டை ஆண்டவர், வரட்டா


(தொடரும்)

No comments: