03 October 2009

திரு(டன்)விளையாடல் - 5

kaya miyama kayam miya kaya miya (பயபபட கூடாது டிரைவரு இந்தில பேசறான்)

என்ன சொல்றான் இவன்

என்ன சொல்லுவான் எதாச்சும் ஒன்னை சூஸ் பண்ணிக்கோனு சொல்லுவான், ம்ம், சீக்கிரம்
சூஸு

இந்த ப்ளாக் கலர்

******************************

அடுத்த நாள் பொழுது விடிந்தது

மச்சி நைட் கலக்கல்டா. இதுக்கு முன்னாடி இப்படி இருந்ததே இல்லை, சூப்பர்

தெளிவா பேசுடா நம்மை தப்பா நினைக்க போறாங்க

தப்பா நினைக்க என்ன இருக்கு, 4 பீரு இது வரை அடிச்சதே இல்லை, உன் புண்ணியத்தால
தம்ம்பிக்கு
அனுப்பவேண்டியது போக மிச்சம் காசுல நல்லா தண்டியடிச்சாச்சி

அதிருக்கட்டும் போதைல இப்படியாடா என்னோட சிக்கனை சாப்பிட்டே தீருவேன்னு அடம்
பண்ணுவ,

சாரி மச்சி, அப்புறம் அந்த பிகர் அந்த பையன்லாம் போயாச்சா,

அந்த பையன் போயிட்டான், பொண்ணு மேலதான் இருக்க்கு,

அடப்பாவி ஏண்டா. அப்போ எக்ஸ்ட்ரா காசு வாங்கிட்டியா

டேய். என்னோட ஒரு சிக்கன் பீசை உருவிட்டு ஓவரா எங்கிட்டயேவா, அதுலதான் சிக்கனே
தெரிஞ்சிக்கோ.

சரி விடு நெட் ட்ரான்சாங்கன் பண்ணிட்டு வரேன், மணி என்னாச்சிடா

9 ஆக போகுது, சீக்கிரம் போயிட்டு வா, இந்த ஏழுமலை வேற எங்க போனான்னு தெரியலை.
அவளை எழுப்பி துரத்தனும் முதல்ல

சரிடா நான் வரேண்டா, எதுக்கும் போன் நம்பர் வாங்கி வை மச்சி

ரொம்ப முக்கியம், போய்ட்டு சீக்கிரம் வா. எத்தனை மணிக்கு ஷிப்ட், ம்தியம்தானே

ஆமாம்,

ஓகே, கிளம்பு,
ஏழுமலை.......... ஏழுமலை...........
(எங்க போய் தொலைஞ்சான் இவன்)

அண்ணே வந்துட்டேன்னே, 26ம் நம்பர் ரூம்ல காபி கேட்டாங்க வாங்கி கொடுத்துட்டு
வரேன்.

சரி நேத்து வந்த பார்ட்டி போயிட்டதா 9.30 வரைதான் டைம். சொல்லிட்ட இல்லே.

சொல்லி இருக்கேன்னே, இப்ப கிளம்பிடும், நான் பார்த்துக்கறேன்னே,

சரி எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆகிடுச்சி, விஸ்வா வந்துட்டாரா

அவர் வந்துட்டு பேப்பர் படிச்சிட்டு இருக்கார், டாண்னு 10 மணிக்கு வந்து
உட்கார்ந்துடுவார்

சரி நான் குளிச்சிட்டு வரேன்...

****************

(குளிச்சிட்டு ரெடியாகி ஆபிஸ்க்கு போக ரெடியாகறச்ச மற்றொரு ஸ்ரீ வேகமா ஓடி
வருகிறான்)

டேய் பேப்பர் பார்த்தியா.....

இருடா ஏன் இப்படி பதறி ஓடி வர்ர, கன்னடப்பேப்பர்தான் இருக்கு, எனக்கு அதெல்லாம்
படிக்க தெரியாது

ஸ்டுபிட், இந்து பேப்பர் பாருடா, 8 பக்கம்டா

என்ன மேட்டர் என்ன ஆச்சி? தெளிவா சொல்லு

நேத்து பார்த்தோமே,

யாரு பரத்தா?

அவன் இல்லை அந்த போன் பண்ணி அலையவச்சானே அவன்....

அவனா? அவனுக்கு என்ன?

அவன் செத்து போயிட்டாண்டா

வாட்? செத்து போயிட்டானா.. உனக்கு எப்படி தெரியும்

பேப்பர பார்டா. அவனை யாரோ கொலை பண்ணி இருக்காங்க, அதும் மதியம் 2ல இருந்து
3க்குள்ளே.

என்னடா சொல்ற அவன் நம்மை பார்த்து போகறச்சே டைம் 1.45தானே இருக்கும் அடுத்த 15
நிமிசத்துல எப்படிடா
அவன் பேர் என்னடா

தரம் சிங்னு சொன்ன நினைவு,

சரி விடு இப்படிப்பட்ட ப்ராத்தல் பண்றவனுக்கு 1008 எதிரிகள் இருப்பாங்க, சரி
நான் கிளம்பறேன்

டேய்ய்ய், நீ அவனுக்கு போன் பண்ணீ இருக்க ஞாபகம் வச்சிக்கோ,

அதுக்காக? அடப்பாவி நான் ? அய்யோ..... தப்பு பண்ணிட்டேனே, நீதாண்டா இந்த
செல்போன்லயே கால் பண்ண சொன்ன.

எனக்கு என்ன தெரியும் இப்படி ஆகும்னு.

அப்போ போலிஸ் நம்மை கண்டுபிடிச்சி இங்கே வருவாங்களா.

அது வந்தா நமக்கு என்ன பயம், நாம என்ன கொலை பண்ணோமா இல்ல வேற எதாச்சும்
பண்ணோமா.
சரி அந்த பொண்ணூ போயிடுச்சி இல்லே.

ஏழுமலை........ ஏழுமலை....... சே நேரங்கெட்ட நேரத்துல அப்ஸ்காண்ட் ஆகிடுவான்,

என்ன ரூம்டா அவ

34னு நினைக்கிறேன், ம்ம் 34தான், சாவி இல்லையே இங்கே, அப்போ இன்னும் காலி
பண்ணலை போல,

சீக்கிரம்டா போலிஸ் தேடி வந்து ரைடு கிய்டு விட்டா பிரச்சனையாயிடும். அனுப்பி
வைடா முதல்ல,

நீ போடா, என்னமோ எனக்கு பயமா இருக்கு,

போடா இவளும் அவ மாதிரி, அய்யோ........ வேண்டாம் நினைச்சாவே மயக்கம் வருது நீயே
போ..

சரி நீயும் கூட வா பின்னாடியே நில்லு, சொல்லிட்டு ஒன்னா வந்துடலாம்

சரி வா, போலாம்

மச்சி கையை பிடிச்சிக்கடா

என்னடா இப்படி நடுங்குது உன் கை.

டேய் போலிஸ் வருமா

மச்சி நீதான் என்னைய சமாதானம் பண்ணனும், நீ என்னடானா என்னய கேட்கீற,

(34ம் நம்பர் ரூமுக்கு போயாச்சி)

டொக்க் டொக்க்

என்னடா திறக்க மாட்டேன்றா, சத்தமா தட்டு,

குளிச்சிட்டு இருக்காளோ, சனியன் இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கா

டொக் டொக், தட் தட் தட், டொம் டொம் டொம் டொம்ம்

என்னடா ஒரு பதிலும் வரலை, நல்ல தண்ணியடிச்சிட்டு தூங்கிட்டு இருக்காளா என்ன.

இந்த கதவு கைப்ப்ப்ப்ப்

என்னடா திறந்து இருக்கு

மச்சி நீ உள்ளே போயேன்

மச்சி எனக்கு வெட்கமா இருக்குடா நீயே போயேன்

சனியனே வா 2 பேரும் போலாம்,

(உடனே இந்த ஸ்ரீ அந்த ஸ்ரீ காதுல ஏதோ சொல்ல)

ரொம்ப முக்கியம், பேசாம வாடா...
ஹலோ எங்கேங்க இருக்கிங்க

மச்சி பாத்ரூம் கதவு திறந்துதான் இருக்கு, பெட்லயும் ஆள காணோம், கிளம்பிட்டா
போல இருக்கேடா,
நாம எதும் பைசா தரனுமா அவளுக்கு, இல்ல அவ எதும் தரணுமா.

யாரும் தர தேவையில்லை, போயிட்டால்ல அப்பா இப்பதான் நிம்மதி.

என்ன நிம்மதி போன் நம்பர் அவனோட செல்போனில் பதிவாகி இருக்கும்,
போலிஸ் விசாரிக்க கண்டிப்பா வருவாங்க, எதாச்சும் சொல்லி சமாளிக்க்க்

என்னடா கையிலே ரத்தம்

தெரியலைடா இந்த பெட்ல கை வச்சேன் ஈரமா இருந்துச்சி

சரி பெட்ட மாத்த சொல்லு ஏழுமலையை அப்புறம், சரி வா கிளம்பலாம்.

டேய் அங்கே பாரு.

என்ன

கத்தி

மச்சி ரத்தக்கறையோடடா, ஓஹ் காட், இங்கபாருடா

(இருவரும் கட்டிலுக்கு கீழ் இருக்கும் ப்ரேதத்தை பார்த்து ஸ்தம்பிக்கிறார்கள்)

*(தொடரும்ம்ம்)*

No comments: