06 August 2009

திருவிளையாடல்ல் - 1

பெயர்: வி.ஓம் ஸ்ரீ ஜெய ஜெகதீஷ் (எ) திரு வெற்றி உலகநாதன் (எ) ஜேக்

வயது மற்றும் பிறந்த தேதி: 13.02.83 (ஜஸ்ட் 1 ஹவர் லேட் பா)

இருப்பிடம்: சென்னை சொந்த ஊர் சேலம்

பணி மற்றும் பணியிடம்: எலக்டிரிகல் டிசைன் எஞ்சினியர்ஆனா எஞ்சினியர் இல்ல டிப்ளோமா

திருமணம் ஆனவரா?: இல்லை

பிடித்தவைகள்: பெண்கள், அஜித், கமல், ஆவி(ஆனந்த விகடன்யா), கடலை ம்ற்றும் சைட்டு

பிடிக்காதவைகள்: சிலநேரங்களில் சில பெண்கள்(டேட்டிங் கூப்பிட்டா வராதப்போ)

சாதனை அல்லது படைப்புகள்: செஞ்சா சொல்றேன்

திறமைகள்: நீங்கதான் அதை சொல்லனும்

எதிர்கால நோக்கம்: காதலிக்கனும் எப்படியாச்சும் யாரையாவது,(பெண்கள் மட்டும்)

தமிழ்நண்பர்களில் இணைய காரணம்: தமிழும் நண்பர்களும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது நான் இந்த குழுமம்ல சேரும் போது நான் போட்ட அறிமுகம்.



*****************************************



நவ் ஓவர் டூ போன் & Story



ஹலோ ஹலோ, டேய் நான் பிரகாஷ் பேசறேன்டா,



அய்யோ அண்ணன், (சிகரெட்டை கீழே போட்டுட்டேன், ஒரு பவ்யம்தான்) சொல்லுங்க அண்ணன்.



டேய் நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்,



டேய் அண்ணா, என்ன காபி சாப்பிட போற மாதிரி சொல்ற,



ஆமாம்டா, என்னோட வேலை செய்யிற பொண்ணு, அம்மாகிட்ட சொல்ல்லிட்டேன், நம்ம அண்ணன்களிடமும் சொல்லிட்டேன், உனக்குதான் 2௩ நாளா டிரை பண்ணேன், அந்த நம்பரை ஏன்டா மாத்தினே,



எண்ண பண்ண சோ மெனி கால்ஸ், சோ மெனி கேர்ள்ஸ், ஆனா சோ மெனி பைசா இல்லைய்ய்ய்யே. அதான் மாத்திட்டேன்,



சரிடா, அவங்க வீட்டலயும் பேசிட்டேன், அநேகமா அக்டோபர்ல கல்யாணம் இருக்கலாம்டா சரி நான் அப்புறம் பேசறேன்

சரி ஓகே டா (அப்பாடி என் ரூட்டு இப்ப படு க்ளியர், கண்றாவி பொண்ணுதான் கிடைக்கலை, கிடைக்க்க்கும்ம்ம்ம்ம்)

(ஒரு அரை மணி நேரம் கழிச்சி பெத்த அண்ணா காலிங்)
என்ன்டா பண்ற‌

ரூம்லதான் இருக்கேன் சொல்லு

பிரகாஷ் பேசினானா

ம்

என்ன சொன்னான்,
கல்யாணம் பண்ணிக்க போறான்னு சொன்னானா

ம்

உன் 2வது, 3வது அண்ணங்க மாதியரியே நீயும் பண்ண போறியா இல்லை, அதுவாகச்சிம் பெரியவா பார்த்து வச்சி வைதீக முறைபடி நடக்குமா,

இதுவரை அப்படி யாரும் இல்லை.

இல்லையா இங்க சேலம்ல இருக்கச்ச ஏதோ சுமதினு ஒரு பொண்ணு பின்னாடி சுத்தினியாமே,

அவளுக்கு கல்யாணம் ஆகி போச்சி.

அப்புறம் கிருத்திகானு யாரோ,

அவளுக்கும்...

ஒஹோ யாரோ ஒரு பொண்ணு கூட போன்ல பேசிட்டு இருகறதா உங்க மன்னி சொன்னாளே, அது

அது மார்சோட கழட்டிவிட்டுட்டேன்,

ம்ம்ம், இனிமே யாரையாச்சும் பார்க்கற ஐடியா இருக்கா,

எனக்கு இருக்கு, பொண்ணுங்களுக்கு இருக்கானுதான் தெரியலை

அடி செருப்பாலே, ஒழுங்கா இருந்துக்கோ, பொண்ணுங்க பின்னாடி சுத்தாம ஒழுங்க வேலையை பாரு, நல்ல பொண்ணா நாங்க பார்க்கிறோம், வீட்டுல கடைசி பையன் நீ, ஒழுகங்கா சமர்த்தா நடந்துக்கோ,

சரி,

சரி சரினு சொல்லிட்டு நாளைக்கு அப்படி இப்படினு எதும் பண்ணாதே, புரியுதா

சரி

சரி வைக்கிறேன், (அடடடா பெரியவன்ன்ன்ன்னாம்ம்ம்ம்ம், இதுக்கெல்லாம் பயந்தா என்னோட லட்சியம் என்னாவறது)

அடுத்து அரை மணி நேரத்தில் அம்மா காலிங்
(அண்ணன் செஞ்ச அதே அட்வைசை அம்மாவும் சொல்றாங்க, என்ன பண்ண தாயாச்சே, உடனே வாக்கு கொடுத்துட்டேன், கண்டிப்பா நீங்க பார்க்கிற பொண்ணையே கட்டிக்கிறேன்னு)

நாளைல இருந்து பொண்ணுங்க ஆர்குட்ல இருந்து வந்தா நான் அண்ணா சொல்லிடடனும், அடடா என் அம்மா என்னை இப்படி குழப்பிட்டியே, தங்காய்னு சொல்லிடனும்.

காலை 7 மணி

உப்ப்பிலியப்பா, எல்லாரையும் நல்லா வையப்பா (ம்கூம் என்ன உப்பிலி திப்பிலி அதான் எல்லாம் நாச்மா போச்சே, போய்யா வென்றுனு சொல்லனும் உன்னை)

மறுபடி போன்,

இப்ப யாரு அட்வைஸ் பண்ண போறாங்க‌ ஹலோ ஹாய் ஹாய் (ஐ லேடிஸ் வாய்ஸ், அய்யய்யோ லேடிஸ் வாய்ஸ்) யாருஙக நீங்க‌


(தொடரும்ம்ம்ம்)

No comments: