10 August 2009

திருவிளையாடல்ல் - 7

கன்டிப்பா அவன் வரும் போது சந்தோசமா வருவான்ற‌

ஏன்டா அப்படி சொல்ற‌

மச்சி பொண்ணு கிடைச்சா புதன் கிடைக்காது புதன் கிடைசசா பொண்ணு கிடைக்காதுடா
இன்னிக்கு புதன் கிழமை, கன்டிப்பா அட்டம்ப்ட் பெயில்டு தான்.


(மாலை 6.30 மெரினா கடற்கரை, ஏதோ ஒரு இடம்)


(எப்படி ஆரம்பிக்கலாம், வந்ததும் எப்படி பேச்சை ஆரம்பிக்கிறது, சே வரச்ச ப்லாக்ல நல்லதா
நாலு கவிதையை மன்ப்பாடம் பண்ணிட்டு வந்திருக்கலாம், என்னன்னு பேச்சை தொடங்கிறது
ஒன்னும் புரியலையே, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிற்துனு ஆரம்பிக்கலாமோ.........
அது செம்ம பழசு ட்ரிக்கு, புச்சா புடிக்கனும், நானே ஒரு ஜினுக்கு சொல்லி அசத்திடனும்.
வந்ததும் நல்லா சமைப்பேன்னு சொல்லி வைக்கனும், அப்பத்தான், எடுத்தவுடனே ஏன் மேல ஒரு இது வரும்,)


ஹாய்

ஹாய் வா வா

வந்து ரொம்ப நேரமாச்சா,

இல்லை இப்பத்தான் ஒரு ஒரு மணிநேரம்தான் ஆகி இருக்கும்.

சாரி, ட்ராபிக்டா அதான் லேட்ட்.

அட விடு, இதுல என்ன. சொல்லு என்ன சாப்பிடலாம்.

எதும் வேண்டாம், நாம அலைகிட்ட போகலாமா.

ம்ம் போலாமே, அதுக்கு முன்னாடி ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு போலாம்,
ஏம்பா இரண்டு கோன் கொடுப்பா, மீதி டிப்ஸ்சா வச்சிக்கோ.

என்னாது டிப்ஸா வாத்யாரே 20ரூபாக்கு இரண்டுலாம் எவன் கொடுப்பான், அதுலயும்
மிச்சன்றே, இன்னும் 30 கொடு வாத்தியாரே, சோக்கா பிகர் கூட வந்திருக்க க்ஞ்சத்தனமா இருக்காதே
வாத்யாரே,

யோவ் மெதுவா பேசுய்யா, முன்ன பின்ன பீச்ல வந்து காசு கொடுத்து வாங்கினாத்தானே தெரியும்
சரி சரி இந்தா நல்ல கோன் ஐஸா கொடு,


இந்தா நைனா, என்ன கட்டிக்க போற பொண்ணா,

யோவ் அதிகம் பேசாதே. இன்னும் முடிவு பண்ணலை.

தபார்யா, பிகரு நயந்தாரா கணக்கா சோக்கா இருக்கு, இதுக்கு போயி யோசிக்கறையே நைன்னா,
டபார்னு ஓகே சொல்லி கட்டிக்க பா.

யோவ் நீ அதிகம் பேசுற, முடிவு இன்னும் பண்ணாதது நான் இல்லை, அவ, கம்ம்னு இருய்யா
நானே காலைல இருந்து பயங்கர நெர்வெசா இருக்கேன்,
தாரிணி, இந்தா கோன், இருக்கிறதுலயே இதான் பெஸ்ட் ஐஸ்க்ரீம், ஒன்னு 50ரூபா

50ரூபாதான் கொடுத்த மாதிரி இருந்தது இங்க இருந்து பார்த்தப்பா

(ம்கூம் சிஐடியா இருந்திருப்பா போல) அது அது வந்து அந்த ஆளு முன்னாடியே எனக்கு ஒரு 50ரூ கடன் பாக்கி வச்சிருந்தான், அதான், அதை விடு, வா போகலாம்.

நான் உங்கிட்ட ஒன்னு சொல்லனும்

நானும் உங்கிட்ட ஒன்னு சொல்லனும்

அப்படியா நீயே சொல்லு

இல்லை நீயே சொல்லு,

நீ சொல்லேன்

லேடிஸ் பர்ஸ்ட் நீயே சொல்லிடு

எனக்கு எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியலை.

சரி வா அலைக்கு பக்கத்துல இருக்க மணல் திட்டுல உட்கார்ந்து பேசுவோம்
ம்ம் இப்போ சொல்லு,

நீ சொல்லுடா ப்ளீஸ்.

அது வந்து, எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியலை, கொஞ்சம் கை நடுங்குது

(மக்களே என் மக்களுக்கு மக்களே, இங்க இங்க நல்லா நோட் பண்ணிக்கோங்க, எப்படி ஒரு ப்ரபோசை நாடகத்தனம் இல்லாம நாடகத்தனமா பேசுறதுனு உஙளுக்கு சொல்லி தர போறேன்,

பிரபோஸ் பண்ண ரெடியா இருக்க என்ன மாதிரி சின்ன பையாஸ், மற்றும் இப்படி பண்ணாம விட்டுட்டோமேனு நினைக்க போற பெரிய பையாஸ் எல்லாரும் ரெடியா)

(கொஞ்சம் கூட பயப்படாம ஒரு நெர்வெஸ்ல பேசற மாதிரி பேசனும் புரியுதா மாணாக்கர்களே, கை நடுக்கம்னா ஏதோ மைக் டைசன்கிட்ட அடிவாங்கி பார்கின்சனோ என்னவோ வந்த கணக்கா நடுங்க கூடாது,

க்வார்ட்டர் அடிச்ச மாதிரியும் நடுங்க கூடாது நண்பர்களே, பனி காலத்தில் சாயங்கால நேரத்துல லைட்டா காற்று வீசும் போது குளிருமே அந்த கணக்கா நடுங்கிகிட்டே நடுக்கமா இருக்குனு சொல்லனும்)


ஏன் என்னாச்சி

உன்னை பார்த்ததில் இருந்துதான்,

ஏய் என்ன சொல்ற

என்னோட அடுத்த பொறந்தநாளுக்கு நான் உன் முகத்துல முழிக்கனும்னு சொல்றேன்

ஏய் என்ன சொல்ற

(டப்புனு ஆனது ஆகி போச்சி கையை பிடிசிடுங்க, டபாருனு புத்தூருக்கு அனுப்பி வைக்கிற மாதிரிலாம் பிடிக்கப்படாது, மெதுவா ஜெண்டிலா பிடிக்கனும், இந்த ஐஸ்க்ரீம்ல ராப்பர் பிஸ்கெட் ஒன்னை சொருகி தருவாங்க தெரியுமோ, அதுல ஐஸ்க்ரிமை எடுக்கிற மாதிரி மெதுவா)

உன்னை எனக்கு பிடிச்சி இருக்கு, என்னை உனக்கு பிடிச்சிருக்கா

(பதில் கண்டிப்பா வராதுனு சொல்ல முடியாது, வரதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கிட்டு சொல்லிடனும், இந்த தாரக மந்திரத்தை)


நாம கல்யாணம் பண்ணிப்போமா - ஐ லவ் யூ


(தொடரும்ம்ம்ம்ம்)

No comments: