10 August 2009

திருவிளையாடல்ல் - 3

ரொம்ப தாங்க்ஸ், கொஞ்சம் தள்ளியே உட்காருங்க, எனக்கு லேடிஸ் பக்கம் உட்கார பிடிக்காது, இருந்தாலும் விதியேனு உட்கார்றேன், அப்புறம் உங்க பேர் என்ன.

தாரிணி கலா...........

அடடே நல்ல பேர், எனக்கு இந்த பேர் ரொம்படி பிடிச்சி இருக்கு

தேங்க்ஸ்

உங்களை எப்படி கூப்பிடறது, தாரிணியா இல்லை கலாவா

நீங்க ஏங்க என்னை கூப்பிடனும்,

இல்லிங்க பக்கத்துல உட்கார்ந்து இருக்கிங்க எதாச்சிம் கேட்கனும், இல்லாட்டி எதாச்சிம் சொல்லனும்னா எப்படி சொல்ல, ஏய் உன்னைத்தான்னு கூப்பிட்டா நல்லா இருக்காதே, அதான்,

(கடவுளே) கலானு கூப்பிடுங்க

ம்ம், நானும் அதைத்தான் நினைச்சேன், ஆனா எனக்கு கலானு பேர்ல 2-3 பேர் ப்ரண்ட்ஸ் இருக்காங்க, அதும் இல்லாம கலா இப்ப ஓல்ட் பேஷன் யு நோ. அதனால தாரிணினு கூப்பிடறேனே.


Sir உங்களுக்கு எத்தனை ப்ரண்ட்ஸ் இருந்தா எனக்கு என்ன Sir, நீங்க ஒன்னும் என்னை கூப்பிட வேண்டாம், தேவைப்பட்டா கலானு போதும், கொஞ்சம் என்னை படிக்க விடுறிங்களா.

நான் பேர் கேட்ட மாதிரி நீங்க கேட்கலையே,

எக்ஸ்க்யூஸ் மி Sir?

அடடா, எல்லாரும் எழுதறச்சதான் ஸ்பெல் மிஸ்டேக் பண்ணுவாங்க, நீங்க என் பேரை செல்றச்சே தப்பு பண்றிங்களே. Sir இல்ல Sri. ஸ்ரீ.

ஓகே மிஸ்டர் ஸ்ரீ, நான் கொஞ்சம் படிக்கனும். So?

ஓ படிங்களேன் தாராளமாய், ஆத்தர் பேர் என்ன?

வாட்?

இல்ல எழுதினவர் பேர் என்னானு கேட்டேன்?

ஓ A.A.K. சந்துரு,

இவர் நல்ல ரைட்டராச்சே, இவரோட விசிறி நான் தெரியுமோ, இவரோட Ghost, in the Darkness படிச்சி இருக்கிங்களா, பயங்கர சஸ்பென்ஸ் திரில்லர்,

அப்படியா

ஆமாங்க, என் ப்ரண்ட் அதை படிச்சிட்டு 2 நாளுக்கு இரட்டுனாவே அலறினான்.

ரொம்ப சந்தோசம், இவர் நாவல் ரைட்டர் இல்ல, எஞ்சினியரிங் காலேஜ் ப்ரபசர், இது 4த் செமஸ்டர் பாட புத்தகம்.

ஓஹோ, அப்போ அது யாரு அந்த Ghost, in the Darkness எழுதினது, அவரோட தம்பி A.A.K.இந்துருவா இருக்குமோ.

சார் கொஞ்சம் தொந்துரு பண்ணாம இருக்கிங்களா

சார் இல்லை, ஸ்ரீ

ஓ மைகாட், ஸ்ரீ ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா வறிங்களா.

(ஒரு 10 நிமிசம் அமைதி)

ஓகே தாரினி தண்ணி இருக்கா, நான் வர அவசரத்துல மறந்துட்டேன்.

இந்தாங்க.....

நன்றிங்க, நீங்க வாய்ல படாமதானே குடிச்சிங்க, எனக்கு எச்சினா பயம், எதாச்சிம் அலர்ஜி வந்துடுமோனு, இப்படித்தான் என் ப்ரண்ட் பஸ்ல போறச்ச

உங்க ப்ரண்ட்ஸும் இப்படித்தான் தன்ணி கொண்டு போகாம ஓசில சாப்பிடுவாரா?

ஹா ஹா, ஆக்சுவலி, அன்னிக்கு என்னாச்சினா, அவங்க வீட்டுல இருந்து தோசை, கட்டு சட்டினி, மிளாகாய் பொடி, பருப்பு பொடி, சப்பாத்தி, குர்மா, பிஸ்கெட், துண்டு, கர்ச்சீப், ஸ்வெட்டர் எல்லாம் கட்டி தந்தாங்க, ஆனா தண்ணி மட்டும் அவங்க வீட்டுல வச்சி தர மறந்துட்டாங்க, செம்ம காமெடி

ஏன் சார்,
அய்யோ ஏன் ஸ்ரீ ஒரு வார்த்தை பேச வேண்டிய இடத்துல 9 வாத்தை பேசி கொல்றிங்க

ஓ அதுவா நான் சின்ன வயசா இருக்கச்ச, என்னால பேச முடியலையாம்,

உங்களுக்கு? பேச்சி வரலை?

ஆமாம் சின்ன வயசில. எங்க அம்மா பேச்சியம்மனுக்கு வேண்டிகிட்டாங்க, அப்புறம் தான் பேச்சி வந்துச்சாம், அதான் நான் பேச்சியம்மன் நியாபகார்த்தமா என்னை பேசிகிட்டே இருக்க வேண்டிகிட்டு பேசிகிட்டு இருக்கேன்,

:)

நீங்க அழகா சிரிக்கிறிங்க

x-(

ஹி ஹி அழகாகவும் முறைக்கறிங்க.

ஹா ஹா

யூ ஆர் லுக்கிங் (அச்சச்சோ என்னமோ சொலனுமே ப்ரெட்டியா பிட்டியானு மறந்து போச்சே)
யூ ஆர் லுக்கிங் சோ அழகு

ஹா ஹா, தேங்க்ஸ்


(தொடரும்ம்ம்ம்)

No comments: