10 August 2009

திருவிளையாடல்ல் - 8

உன்னை எனக்கு பிடிச்சி இருக்கு, என்னை உனக்கு பிடிச்சிருக்கா

(பதில் கண்டிப்பா வராதுனு சொல்ல முடியாது, வரதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கிட்டு சொல்லிடனும், இந்த தாரக மந்திரத்தை)

நாம கல்யாணம் பண்ணிப்போமா - ஐ லவ் யூ

நான் என்ன சொல்றதுனு எனக்கு தெரியலை

எது வேணா சொல்லேன் முதல்ல ஓகே சொல்லேன்

நானும் உங்கிட்ட இதை எப்படி சொல்லலாம்னுதான் நினைச்சிட்டு இருந்தேன்,

ஓ அப்படியா, சொல்லு சொல்லு என்ன சொல்ல போற சொல்லு

ம்ம்

ஐயோ இதுக்கு என்ன அர்த்தம், எனக்கு புரியலையே

ம்ம்ன ம்ம்னுதான் அர்த்தம்

நான் அவ்ளோ புத்திசாலி இல்லையே, தெளிவா சொல்லேன்.

போடா

ஏய் சொல்லுடி

(எஸ் ஐ லவு யூ திஸ் லவ்வபிள் இடியட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்)

அய்ய்ய்ய்யோஓஓஓஓஒ.

சாரி சார் சாரி சார். நான் என் ப்ரண்டுனு நினைச்சேன், நீங்க தூங்குங்க சார்

என்னது தூக்கமா, ஏய் என் பக்கத்துல தாரிணி, நான். என்னாச்சி அய்யோ

என்ன சார் எதாச்சும் கெட்ட கனவா

கெட்ட கனா? அய்யோ இதெலாம் கனவா

சார் நீங்க உட்கார்ந்துட்டு தூங்கிட்டு இருந்திங்க, நான் என் ப்ரண்ட் அஜித்குமார் மாதிரி இருந்தீங்கனு தட்டி கூப்பிட்டேன் சார் அவ்ளோதான்,

அப்போ எல்லாம் இல்லையா

எது எல்லாம் சார்

யோவ் போய்யா நான் செம்ம காண்டுல இருக்கேன் ஓடிடு, சே...
என்னடா என் வாழ்கையிலும் ஒரு வசந்தம் வண்டி ஓட்டிகிட்டு வருதேனு பார்த்தேன்.

ஹாய் ஸ்ரீ, சாரிடா கொஞ்சம் லேட் ஆகிடுச்சி

(கொஞ்சமா 2 ஹவர்ஸ், பாவிகளா இப்படி காத்துட்டு இருந்த நேரத்துல உலகை வலம் வந்திருந்தா உலகத்தையே 2 ரவுண்ட் அடிச்சிருப்பேன் சே. ஏந்தான் இந்த பொண்ணுங்களுக்கு பஞ்சுவாலிட்டியை மெயிண்டெனே பண்ணமாட்டேன்றாங்களொ)
சே சே இப்பதான் சொல்லு சொலு ஒன்னும் பிரச்சனையில்லை. என்ன விசயம்

ம்ம் சொல்றதுக்கு முன்னாடி. ஐஸ்க்ரீம் சாப்பிடலாம், பயப்படாத நானே பே பண்றேன்.

ம்ம் இப்ப சொல்லு, என்ன்ன சொல்லனும்னு சொல்ல கூப்பிட்ட

(என்ன சொன்னா ஏது சொன்னானுலாம் சொல்லிட்டு இருக்க முடியாது, இப்ப ஓவர் டூ ரூம்)

என்னடா ஸ்ரீ இவ்ளோ நேரம், என்ன ஓகேவா. ட்ரீட் எப்போ


மச்சி ஏண்டா அவனோட வெந்த புண்ல வேலை பாய்ச்சுற, பாவம்டா
கிண்டல் பண்ணாதீங்க

அட நீ என்னப்பா ஏதோ அங்க நடந்ததெல்லாம் உன் ஞானதிருஷ்டில தெரிஞ்ச மாதிரி அவனை கலாய்க்கிறே.

இல்லேன்றியா நீ, இன்னும் நீங்க வளரனும்டா, நாந்தான் சொன்னேனே புதன் கிடைச்சா பொண்ணு கிடைக்காது
பொண்ணு கிடைச்சா புதன் கிடைக்காதுனு, அதுமில்லாம ஸ்ரீயை பாரேன், என்னமோ பரிகொடுத்தவன் கணக்கா இருக்கான். இது போதாதா உனக்கு.

அப்ப்டியா ஸ்ரீ என்ன ஆச்சிடா, என்ன ப்ராப்ளம். என்னடா கேள்வி கேட்டா எதோ ஜிகினா கயிரை தர்ர என்ன இது?

இதுக்கு பேருதான் ராக்கி கயிறு


(முற்றும்)

No comments: