10 August 2009

திருவிளையாடல்ல் - 5

உன் போன் நம்பர்?

சென்னை வந்து நீ என்னை பார்க்க முடிஞ்சா கண்டிப்பா நம்பர் தறேன்ன்,

(சேலம் கிருஷ்ணகிரி வந்துடுச்சி சேலம் போறவங்க இறங்குங்க)

அப்புறம் அவ்வளவுதானா..

ம்ம் அப்புறம் என்ன,

(ஏம்பா கருப்பு சட்டை சேலம்தானேப்பா நீ, இறங்குங்க, தனியாசொல்லுவாய்ங்களா உங்களுக்கு மட்டும்)

யோவ் இருய்யா, எல்லாம் சரியா இருக்கானு பார்த்து இறங்க வேண்டாமா,
என்னோட நம்பர் இருக்குல்ல.. என் ஞாபகம் வந்தா ஒரு மிஸ்ட் கால் கொடுக்காத,கால் பண்ணியே பேசிடு.
பை...

(ஏம்மா நீ இறங்கலையா, சேலம்தானே நீயும், ஏதும் சண்டைனா வீட்டுல போய் பேசிதீர்த்துக்கோங்க, அதுக்காக பஸ்லயே உட்கார்ந்தா எப்படி, இறங்குங்க இறங்குங்க)

(இந்த இடத்துல நான் தேடும் செவ்வந்தி பூ இது ஒரு நாள் பார்த்து அந்தியில்பூத்தது மங்கைக்குள் என்ன நிலவரமோ என்ற பாட்டை, நாதஸ்வரம் தவில்லவாசிக்கும் பேக்க்ரவுண்டை மனசுல நினைச்சிக்கோங்க,
குஜாலா இருக்கா,
அப்படித்தான் நானும் இருந்தேன்)

(கண்டக்டர் எங்க இரண்டு பேரையும் கழுத்தை பிடிச்சி தள்ளாத குறையா கீழே தள்ளினார்)

ஏய் நீ சேலமா, கிருஷ்ணகிரினு சொன்ன, இப்ப பெங்களூர் போயிட்டு இருக்கிறதாசொன்னா, ஏன் இந்த பித்தலாட்டம்.

ஏய் ஓவரா பேசாத, பித்தலாட்டம்லாம் இல்லை, உங்கிட்ட சொல்ல விரும்பலை.

இது என்ன அநியாயம், அப்ப நீ சொன்னது எல்லாம் பொய்யா, பேர் என்ன,ராக்கம்மாவா பொன்னமாவா, சிடிஎஸ்னு சொன்னியே எந்த கார்ப்பரேசன்ல குப்பைகொட்டுற,

ஏய் ஓவரா போகாதே, உங்கிட்ட எதும் சொல்லனும்னு எனக்கு அவசியம் இல்லை, நீ உன் வழிய பார்த்துட்டு போ.

அதெப்படி நானும் சேலம் நீயும் சேலம், ரெண்டு பேரும் ஒரே பஸ்லதான் போகனும் தெரிஞ்சிக்கோ,

நீ ஏறும் பஸ்ல நான் ஏற போறதில்லை,

நீ ஏறின பஸ்ல இருந்து நான் இறங்க போறதில்லை,

என்னை பாலோ பண்ணாத நான் போலிஸ்ட போவேன்,

ஏன் நான் என்னமோ ப்ராடு மாதிரி சொல்ற, நீதான் ப்ராடு, ஏறினதில இருந்துசொன்னது எல்லாம் பொய், நல்ல வேளை உங்கிட்ட இருந்து போன் நம்பர் வாங்கலை,ஒரு வேளை கொடுத்திருந்தா அதும் ப்ராட் நம்பராதான் இருக்கும்.

ஏய் சும்மா பேசிட்டே போகாதே, என் பேர் தாரினி தான், தாரிணி கலா. நான்வேலை செய்யிற இடத்தைலாம் முன்ன பின்ன தெரியாதவன்கிட்ட சொல்ல முடியாது,அதான் மாத்தி சொனேன்.

அப்ப ஓப்பனா சொல்ல வேண்டியதுதானே, எனக்கு சொல்ல விருப்பம் இல்லை, அதனால
சொல்ல மாட்டேன்னு. அப்புறம் ஏன் பொய்யா சொல்ற.பொண்ணுங்கனாவே சீட்டர்ஸ் சே.

ஹலோ மிஸ்டர், பசங்களை பத்தி தெரியாதா, இடத்தை கொடுத்தா மடத்தை பிடிக்கபார்ப்பீங்க, எல்லாரும் அயோக்கிய ராஸ்கல்ஸ், செல்ப் பிஷ் ஜெயிண்ட்ஸ்.

யாரு செல்பிஷ்? பசங்களா பொண்ணுங்களா? பஸ்ல லேடிஸ் சீட்ல இது வரை எந்தவயசான பாட்டிக்கும் எந்த பொண்ணும் இடம் தந்ததா வரலாறும் இல்லைபரமசிவனும் இல்லை.

அது என்ன பரமசிவன்.

அது தல படம், ஒரு ப்லோல வந்துட்டது, நீ பேச்சை மாத்தாத, பொண்ணுங்கதான் செல் பிஷ்.

ம்கூம், நான் மட்டும் கம்பெனி பேரையும் போன் நம்பரும் தந்திருந்த அடுத்தநாளே அங்கே வந்து நின்னுருப்ப,
ஒரு கப் காபி சாப்பிடலாம்,னு கூப்பிடுவ
அப்புறம் அழகா இருக்கே பயமா இருக்கு அப்படினு பிட்டு போட்டிருப்ப.(_________________________________________________________________)

ஏய் என்ன முணுகிற தைரியமா இருந்தா சத்தமா சொல்லு இந்த முணுகிற வேலைலாம் வேண்டாம்.

இப்ப என்ன உன் பிரச்சனை,

இப்ப கேட்டியே இது ஒரு நியாயமான கேள்வி. சரி வா சேலம் பஸ் இன்னும் வரலை,அதுக்குள்ளே நாம,

நாம??

ஒரு கப் காபி சாப்பிட்டு போகலாமே



(தொடரும்ம்ம்ம்)

No comments: